கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 22 நவம்பர், 2012

ஆண் பெண் பருவங்கள்



ஆண் பெண் பருவங்கள்:-

பெண்களின் ஏழு பருவங்கள்:-

'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’

* பேதை (1 முதல் 8 வயது வரை)
* பெதும்பை( 9 முதல் 10 வயது வரை)
* மங்கை (11 முதல் 14 வயது வரை)
* மடந்தை (15 முதல் 18 வயது வரை)
* அரிவை (19 முதல் 24 வயது வரை)
* தெரிவை (25 முதல் 29 வயது வரை)
* பேரிளம் பெண்( 30 வயதுக்கு மேல்)

ஆதாரம்:
'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
- பன். பாட். 220

‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
-221

‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
-222

‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
’’ 223

‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
-224

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
-225

‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
-226

‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’
-227

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’

*பாலன்( 1 முதல் 7 வரை)
*மீளி (8 முதல் 10 வரை)
*மறவோன் (11 முதல் 14 வரை )
*திறவோன் (15 வயது )
*விடலை (16 வயது )
*காளை (17 முதல் 30 வரை)
*முதுமகன், (30 வயதுக்கு மேல்)

ஆதாரம்:
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-பன். பாட். 228

‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
-229

‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
-230

‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
-231

‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
-232

‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
-233

‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
-234

‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
-235





1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... விளக்கங்களுக்கு நன்றி...