கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 13 டிசம்பர், 2008

வரைபடங்கள்பற்றி


வரைபடங்கள் உருவாக்கும் கலையான கார்ட்டோ கிராஃபி ( cartography) மிகப் பழைமையானதொன்று. நாடுகளின் எல்லைகளைக் காட்டவும், கடற்பயணம் மேற்கொள்ளவும் வரைபடங்கள் முதலில் பயன்படுத்தப்பட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன், வரைபடங்களை உருவாக்க ,கண்ணால் கண்டு சேகரித்த விவரங்கள் பயன்படுத்தப்பட்டன.இதனால் வரைபடங்கள் துல்லியமாக அமையவில்லை. மேலும் உருண்டையான பூமியில் உள்ள நிலப்பரப்புகளை தட்டையாக வரைபடத்தில் காட்டும்போது, பல பிழைகள் ஏற்பட்டன. கி.பி 2ஆம் நூற்றாண்டில் கிளாடியஸ் தாலமி தயாரித்த உலகப்படம், மத்தியதரைக் கடலைச் சுற்றியே உலகம் இருந்தது போலவும், ஐரோப்பா மற்றும் ஆசியாக் கண்டங்கள் பெரிதாக இருந்தது போலவும் காட்டியது. ரோமானியர்களும் எகிப்தியரும் இக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். கி.பி 12ஆம் நூற்றாண்டில் சீனாவிலும், 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் வரைபடங்கள் அச்சிடப்பட துவங்கியதால், இக்கலை வெகுவாக முன்னேற்றம் அடைந்தது,வரைபடங்கள் பலருக்கும் கிடைக்கவும் வாய்ப்புகள் உருவாகின.

புதிய பூமி தேடி புறப்பட்டவருக்கு, முக்கியமாகக் கடலோடிகளுக்கு, வரைபடங்கள் இன்றியமையாதவை என்பதால் இக் கலையில் அரசர்களும் வணிகர்களும் ஆர்வம் காட்டினர். கையால் வரையப்பட்ட குத்துமதிப்பான வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டன. ஸ்பெயின் நாடடவர் இதற்கு உதாரணம். இங்கு உருவாகிய வரை படங்கல் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வடாமெரிகாவுக்கு கடற்பயம் செல்லப் பயன்படுத்தப்பட்டன. வெகுகாலத்துக்குப்பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புகைப்படங்களின் உதவியுடன் வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. அது இக்கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.விமானங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரைபடக்கலையில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கின. வரைபடம் என்பது நிலத்தின் ஒரு பகுதியின் பிரதி. அன்று கையால் வரையப்பட்டவை இன்று கணினிகளால் உருவாக்கப்ப்டுகின்றன. மலைகளையும், ஆறுகளையும் காட்டும் வரைபடம், பயணவழிகளைக் காட்டும் வரைபடம் என பயன் கருதி வரைபடங்கள் உருவாக்கப்படுகின்றன.நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு மட்டுமன்றி மற்ற கோள்களின் மேற்பரப்புகளையும் காட்டும் அளவுக்கு இன்று வரைபடக்கலை வியக்கத்தக்க முறையில் முன்னேறியுள்ளது. வரைபடவல்லுநர்கள் காலம்காலமாகச் சில விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்றாலும் சிறு தவறுகள் ஏற்படுவது தவிர்க்கவியலாதது. புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு உருவாக்கப்படும் வரைபடங்களில்கூட நிலப்பரப்பில் காணப்படுபவற்றைத் துல்லியமாகக் காட்டவியலாது.

இன்று செயற்கைக்கோள் எடுத்த படங்கள் வரைபடங்களை உருவாக்க பயன் படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து, சில மீற்றர் பரப்பளவே உள்ள இடத்தைக்கூட கண்டறிய முடியும். ஈரக்போரில் அமெரிக்க ராணுவம் ஈராக் கவச வண்டிகளைத் தம் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கண்டறிந்து தாக்கியது ஒரு எடுத்துக்காட்டு. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செயற்கைக்கோள்கள் சேகரித்த விவரங்களை வைத்து வரைபடங்கள் தயாரிக்க முடிந்தது. புவியியல் சம்மந்தப்பட்ட விவரங்கள் பலவற்றை அறிய பூமியை வலம்வரும் பலசெயற்கைக்கோள்களினால் சேகரிக்கப்படும் தகவல்கள் இதற்கு உதவுகின்றன. கணினியின் உதவியோடு அறிவியல் சார்ந்த துறைகள் பலவற்றுக்குப் பயன்படும் வரைபடங்கள் உருவாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.உதாரண்மாக ஒரு அறையில் அமர்ந்தவண்ணம், செயற்கைகோள் படங்களைப் பார்த்து நகரங்கள் அபிவிருத்தியடைவது, விவசாயநிலத்தின் பரப்பு அதிகரிப்பது அல்லது குறைவது, காடுகளின் சேதம், நீர் நிலைகள் மாசுபடுவது போன்ற பல விவரங்களைப் பெறலாம்.

ஆசிரியர்: சு.கி.ஜெயகரன் நூல்:குமரி நிலநீட்சி

சனி, 6 டிசம்பர், 2008

இனப்படுகொலை ( Genocide )










































நிறுத்து கொத்தணி குண்டுகளை போடுவதை நிறுத்து மண்டிக்கேட்கிறது வெண்புறா
வீடுகளிலும் குண்டுகள் - ஓடும்
சாலைகளிலும் குண்டுகள்
மூத்தோர் மேலும் குண்டுகள்
பாலகர் மீதும் குண்டுகள்
பார்த்துக் கொண்டெ
இருக்கலாமாஉலகம்!!!!!!

உலகே உனக்கு கண்ணில்லையா
தமிழீழ மண்னென்ன மண்ணில்லையா
உனது மக்கள் தான் மக்களா - எம்
தமிழீழ மக்கலென்ன கற்களா
:காசியானந்தன்:
























சனி, 8 நவம்பர், 2008

தொல்லியல் செய்திகள்

தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்ட இடங்களின் பட்டியல்

1837இல் பிரீக்ஸ் (J.W.Breeks ) நீலகிரியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை அகழ்ந்து ஆய்வு செய்தார். 1863இல் இராபர்ட்புரூஸ் (Robert Bruce ) என்ற புவியியல் ஆய்வாளர், அத்திரம்பாக்கம்,பல்லாவரம் பகுதிகளில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தார். அறிவியலடிப்படையில் அன்று கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் இதையே தமிழகத்தில் தொள்பொருளாய்வின் ஆரம்பம் எனலாம்.

19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல இடங்களில் கள ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளும் நடத்தப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் முறைப்படியான அகழாய்வுகளும், காலக்கணிப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. 1945ஆம் ஆண்டு மார்டிமர் வீலர் (Mortimer Wheeler ) எனும் ஆய்வாளரால் தமிழகத்தில் அரிக்கக்மேட்டுப் பகுதியில் முறையான அறிவியலடிப்படையில் கள ஆய்வுகள் தொடங்கின எனலாம். இதற்குப் பின் வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்தவர் வாழ்ந்த பல்வேறு இடங்களில் களாஆய்வுகளும் அகழ்வாராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், பழங்கற்காலத்தவர் வாழ்ந்த இடங்கள் பல அகழாய்வு செய்யப்பட்டன. அத்திரம்பாக்கம்,வடமதுரை, குடியம், திருப்பெரும்புதூர், நம்பாக்கம், எருமை வெட்டிப்பாளையம், மஞ்சனகரை, தஞ்சாவூர், அதிராமபட்டினம், பர்கூர், அவியூர், தி.கல்லுப்பட்டி ஆகியவை அவற்றில் சில இடங்கள்.

கள ஆய்வுகளில் இடைக் கற்காலத்தைச் சேர்ந்த சிறுத்த கற்கருவிகள் ( Microlithic) பல இடங்களில் கிடைத்திருந்தாலும், அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.கி.மு 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறுத்த கற்கருவிகள் குடியம் அகழாய்விலும், திருத்தங்கல்,தி.கல்லிப்பட்டி, திருநெல்வேலி தேரிமேடுகளிலும் கிடைத்துள்ளன.

கி.மு 2000 முதல் 600 வரையுள்ள இக்காலத்தவர் வாழ்ந்த இடங்கள், குறிப்பாக, வட மாவட்டங்களில் பல உண்டு எனக் கள ஆய்வுகள் காட்டுகின்றன. அக்காலகட்டத்தில் நாடோகளாகத் திரிந்தவர்கள், குடியிருப்புகளமைத்து நிலையாக வாழ முற்பட்டனர். அவர்கள் பயிர்ச் சாகுபடி செய்யவும், விலங்குகளை வளர்க்கவும் ஆரம்பித்தகாலம் இது. பய்யம்பளி அகழாய்வில் அவர்கள்பற்றி அரிய பல தடயங்கள் கிட்டியுள்ளன.

பய்யம்பள்ளி,தைலமலை,தொகரப்பள்ளி,முள்ளிக்காடு,அப்புக்கல்லு,தேனி,ஒத்தக்கோயில்,கொற்கை,பெரியகுளம்,செய்துங்கந்ல்லூர்,சாயர்புரம்,மோகனூர் மற்றும் சேனங்காடு ஆகிய இடங்களில் புதிய கற்காலத்தவர் வாழ்ந்ததாக கள ஆய்வுகள் காட்டுகின்றார். கல்செப்புக்காலம் (Chalcolithic) மற்றும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம் பற்றிய விவரங்கள் மதுரை, தி.கல்லுப்பட்டி,அகழாய்வுகள் மூலம் கிடைக்கின்றன.புதிய கற்காலத்தையடுத்து பல விடயங்களில் இரும்புக்கால பண்பாடு தொடர்ந்தது என்பதை அகழாய்வுகள் உறுதிசெய்கின்றன.

தமிழ்நாட்டில், இரும்பு யுகமான (Iron age ) பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது ஆதிச்சந்ல்லூர் அகழாய்வு. இது கொற்கையில் கண்டுபிடிக்கப்பட்ட(கி.மு 785)காலத்துக்கு முற்படட காலம் அப்போது அங்கு கல் மணிகள் அறுக்கும் தொழில் நடந்ததைக் கொடுமணல் அகழாய்வு காட்டுகிறது. மட்பாண்டங்களில் காணப்படும் குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள் அம்மக்கள் தம் முன்னோரை விட நாகரிக மேம்பாடு அடைந்தவர்கள் எனக்காட்டுகின்றன. பெருங்கற்கால/இரும்புயுக மக்கள் வாழ்ந்த அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் சில:

கம்பர்மேடு, மல்லப்பாடி, மேல் சாத்தமங்கலம்,கொடுமணல், அமிர்தங்கலம், கொற்கை,ஆரோவில், ஆனைமலை, கோரிமேடு, நத்தமேடு,கோவலன் பொட்டல்,சானூர்,சிததன்னவாசல்,சிறுமுகை,சூலூர்,செட்டப்பாளையம்,திருப்பூர்,திருவக்கரை,பல்லாவரம்,பழனிமலை,பெருமாள்மலை,பேரூர்,ஆதிச்சநல்லூர் மற்றும் காவிரிப்பூம்பட்டினம்.

சு.கி.ஜெயகரன். (நூல்: குமரி நிலநீட்சி)

சனி, 1 நவம்பர், 2008

உரிமைக்குரல்














இனவெறியரால் தமிழினம் படும் இன்னல்கள்........................


தமிழன் எங்கு அடிவாங்கினாலும் அது நன்முறை, தமிழன் எங்கு திருப்பியடித்தாலும் அது வன்முறை உலகத்திலே! வன்முறையா? வன்முறையா?

_ சீமான் _

சனி, 25 அக்டோபர், 2008

போர்ப்பொறிகள்

ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் காலத்து மதுரை மதிற்பொறிகள்
1.வளைவிற் பொறி = வளைந்து தானே எய்யும் சூழ்ச்சிய ( எந்திர ) வில்.
2.கருவிரலூகம் = கரிய விரலையுடைய குரங்குபோலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி.
3.கல்லுமிழ் கவண்
4.பரிவுறு வெந்நெய் = காய்ந்திறைத்தலாற் சேர்ந்தாரை வருத்துவதாய நெய்.
5.பாகடு குழிசி = செம்புருக்கி யிறைக்கும் மிடா.
6.காய்பொன்னுலை = உருகக்காய்ச்சி யெறிதற்கு எஃகு பட்டிருக்கும் உலை.
7.கல்லிடு கூடை = இடங்கணிப் பொறி என்னும் கல்லெறியுங் கூடை.
8.தூண்டில் = தூண்டில் வடிவாகப் பண்ணிவைத்துக் கிடங்கு நீங்கி மதில் பற்றுவாரைக் கோத்துவலிக்குங் கருவி.
9.ஆண்டலையடுப்பு = ஆண்டலைப்புள் வடிவாகப் பண்ணிப் பறக்கவிட, பகைவரின் உச்சியை கொத்தி மூளையைக் கடிக்கும் பொறி.
10.தொடங்கு = கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலி
11.கவை = கிடங்கிலேறின் கறியத்தள்ளும் இருப்புக்கவை.
12.கைபெயரூரி =மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறி
13.சென்றெறி சிரல் =மாற்றார் மேற்சென்று கண்ணைக்கொத்தும் சிச்சிலிப்பொறி.
14.பன்றி =மதிற்றலையி லேறினா ருடலைக் கேட்டாற் கிழிக்க இரும்பாற் செய்துவைத்த பன்றிப் பொறி.
15.பிற = நூற்றுவரைக் கொல்லி (சதக்கினி), தள்ளிவெட்டி,களிற்றுப்பொறி,விழுங்கும்பாம்பு,கழுகுபொறி,புலிப்பொறி,குடப்பாம்பு,சகடப்பொறி,அரிநூற்பொறி முதலியன

சனி, 18 அக்டோபர், 2008

மாதவி காலத்து மகளிர் அணிகள்

விரலணி = கான்மோதிரம்
பரியகம் = காற்சவடி
நூபுரம் = சிலம்பு
பாடகம் = ஒருவகைக் காலணி
சதங்கை
அரியகம் = பாதசாலம்
குரங்கு செறி = கவான்செறி
விரிசிகை = முப்பத்திருவட மேகலை
கண்டிகை = மாணிக்க வளை
தோள்வளை
சூடகம்
கைவளை = பொன்வளை
பரியகம் = பாசித்தாமணி, கைச்சரி
வால்வளை =சங்கவளை,வெள்ளிவளை
பவழ வளை
வாளைப்பகுவாய் மோதிரம்
மணி மோதிரம்
மரகதத்தாள் செறி = மரகதக் கடைசெறி
சங்கிலி = வீரச்சங்கிலி
நுண்ஞாண்
ஆரம்
கயிற்கடையொகிய கோவை = பின்றாலி
இந்திரநீலக்கடிப்பிணை = நீலக்குதம்பை
தெய்வவுத்தி = சீதேவி
வலம்புரி
தொய்யகம் = தலைப்பாளை, பூப்பாளை
புல்லகம் = தென்பல்லியும், வடபல்லியும்

சனி, 13 செப்டம்பர், 2008

நூல் அறிமுகமும் வெளியீடும்

முருகர் குணசிங்கம் அவர்கள் வெளியிடும் கி.மு 300 இல் இருந்து இற்றைவரை சான்றுகளின் கொத்து வெளியிடப்பட்டுள்ளது. 14.09.2008 நோர்வே நாட்டிலும் வெளியிடப்படுகின்றது.

சனி, 31 மே, 2008

ஆறுவது சினம்

மனிதர்களால் காக்கப்பட வேண்டிய பண்புகளில் சினங்காத்தலும் ஒன்று. சினங்காத்தலைப் பற்றி பல சிறந்த புலவர்கள் தன் நூல்களில் எழுதியுள்ளனர்.உலகப் பொதுமறை என்னும் ஓர் நூலை இயற்றியவர் திருவள்ளுவராவார். இன்நூலின் மறு பெயர் திருக்குறள் ஆகும். திருக்குறளில் பல குறள்கள் சினத்தைப்பெற்றிக் கூறியுள்ளன.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும் ஏம்பு புணவைச் சுடும்

சொல்லிடத்துக் காப்பான் சினங்காபான்
னல்லிடத்துக் காக்கினென் காவாகா லென்மெலே

உள்ள இரு திருக்குறளும் சினத்தைப் பற்றிக் கூறியுள்ளது, இவை அதிகாரம் 31ல் எழுதப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தின் பெயர் "வெகுளாமை" ஆகும். பல புலவர்கள் சினத்தை தீயுடன் ஒப்புடுகின்றனர்; ஏனென்றால் தீ தீப்பிடித்த இடத்தை மட்டும் அழிக்காமல், சுற்றியுள்ளதையும் அழிக்கும்.
ஒளவையார் மூதுரையில் சினங்காதலைப் பற்றி எழுதியுள்ளார்.

உள்ளாங் கவர்ந்தெழுந்து ஓங்கு சினங்காத்து
கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுதல் அரிதோ விளம்பு


ஒளவைப்புலவர் சினத்தை "மூன்டெழும்பும் வெள்ளம்" என்கிறார். இவருடைய சூடியிலும் "ஆறுவது சினம்" என்று எழுதுகிறார். சினத்தை தேவையில்லாமல் வெளிப்படுத்த வேண்டம்.
சர்மிலன்.குணபாலா

சனி, 29 மார்ச், 2008

ஆறுமுகநாவலரருளிய வினா-விடை


பதிப்புச் செம்மல் ஆறுமுகநாவலரைப் பணிந்து.

1.இலக்கண நூலாவதியாது ?

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.

2.அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும் ?

அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தெடர்மொழியதிகாரம் என, மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும்.

3.எழுத்தாவது யாது ?

எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்.

4.அவ்வெழுத்து எத்தனை வகைப்படும் ?

அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5.உயிரெழுத்துக்கள் எவை ?

உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என பன்னிரண்டெழுத்துகளுமாம். இவை ஆவியெனவும் பெயர் பெறும்.

6.உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

உயிரெழுத்துக்கள் குற்றெழுத்து, நெட்டெழுத்து என இரண்டு வகைப்படும்.

சனி, 15 மார்ச், 2008

பெரியார்

தமிழர் நெஞ்சில் வாழ்கின்றார்
தாடித் தாத்தா ஈவேரா
குமுகப் புரட்சி புரியென்று
கூறி நின்றார் நாடெங்கும்

மக்களெல்லாம் நிகரென்றார்
மடமை நீங்குதல் நன்னென்றார்
தக்கபணிகள் தான் செய்தார்
தமிழராக உயர்ந்திட்டார்.

மறைமலையடிகள்

பண்டித ஞா.தேவநேயனார்,பி.ஓ.எல்.பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியர் தவத்திரு திரஞ்சு ( Trench) எழுதிய `சொல்லாராய்ச்சி`, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய ` மொழியறிவியல்` பேராசிரியர் சாய்சு எழுதிய ` ஒப்பியல் மொழிநூல்` முதலிய ஆங்கில நூல்களை யாமே பெருவிருப்புப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச்சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம்.தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு பண்டாரகர் கால்ட்டுவெல் எழுத்திய `திராவிட மொழிகளின் ஒப்பியலாய்வு` நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்த்ததொரு முயற்சியாத்தலால் தமிழ்ச்சொற்களையெல்லாம் விடாமல் நிறைவாக எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு மென்று எம்மைத்த் தூண்டியது.எனவே `ஞானசாகரம்`( அறிவுக்கடல் ) என்னும் எம்முடைய இதழில் குதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில்தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு.தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முர்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம்.அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு.தேவநேயனார் ஒப்பற்ற தனித்திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு.தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப்பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.

சனி, 16 பிப்ரவரி, 2008

நோர்வே நாட்டு வரலாறு


நோர்வே

ஐரோப்பாவின் வடக்குப் பகுதியில் நோர்வே என்னும் ஓர் நாடு உள்ளது. இந் நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவாகும். நோர்வேயின் பரப்பளவு 323 877 சதுரக்கிலோமிட்டர் ஆகும். இந் நாட்டில் 50 இலட்சம் குடிமக்கள் உள்ளனர். இந் நாட்டு மொழியின் பெயர் (நொஸ்க்) ஆகும்.(கல்ஹோபிக்கன்) என்னும் மலை நோர்வேயில் உயரமான மலையாகும். இதன் உயரம் 2469 மீட்டராகும். நோர்வேக் கடலின் அடியில் எண்ணெய் உள்ளது. எண்ணெய் இந்நட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும். மீனும் இன்னும் ஒரு ஏற்றுமதிப் பொருளாகும். இங்கு பனிக்காலத்தில் நிறைய பனி கொட்டும். இக்காலத்தில் இந்நட்டு மக்கள் பனியில் சறுக்கி விளையடுவார்கள். இங்கு உள்ள மலைகளையும் இயற்கை அழகையும் பார்த்து (இரசிப்பதற்கு) பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
குணபாலா.சர்மிலன்

பண்டைக்கால காசுகள்



தமிழரசர் தம் நாடுகளிலும் உலகவணிகத் துறையிலும் பயன்படுத்திய காசுகளாவன.

சனி, 26 ஜனவரி, 2008

பிறமொழி ஆக்கங்கள் (Norsk)


Jul - Christmas - Weihnachten
Jul er en veldig stor høytid for de fleste mennesker på jorden. Julaften er den dagen Jesu Kristus ble født. Det feires 24Desember, men det er egentlig 25 Desember det er julaften. Så den dagen (25des) blir kalt for 1.juledag.
Det er mange tradisjoner som er knyttet til jul.
F.eks: Julegaver, julemat, juletrær, julesanger...
Alt dette gjør mennesker glade og lykkelige. Spesielt julegaver. Hver gang man deler ut julegaver sier man «GOD JUL» til hver eneste person man deler det ut til. Man kan selfølgelig også si «god jul» til alle andre mennesker man ikke gir gaver til eller kjenner.
Julenissen
Han er en av julens største kjennetegn, og er en fet mann med røde klær, hvit skjegg og svarte støvler. Folk sier han bor i Nord-Polen, og reiser rundt verden med julegaver til alle sammen. Han reiser rundt med reinsdyr som kan fly.
Barn er veldig glade i han, for han gir flotte gaver til alle sammen. Noen barn pleier å sende ønskelister til han. De skriver f.eks «Til: julenissen! Fra: »
Juletre
Med julenissen som partner er juletrær også et stort kjennetegn for julen. Før hver eneste juleaften tar nesten alle menneskene i Europa med seg et tre hjem. De pynter det og setter alle gavene de har fått under treet. Det finnes spesielle pynt for et juletre. Dem får man kjøp på nesten alle butikker. På toppen av alle juletrær er det en stjerne, som da skal minne på om gode tider.
Julesanger
Det finnes mange julesanger man synger hver jul. Disse sangene er for det meste rolige og myke. De mest kjente sangene i Norge er:
Et barn er født i betlehem, På låven sitter nissen, Glade jul, Jeg er så glad hver julekveld og Å jul med din glede. Det finnes selfølgelig flere kjente sanger i Norge man synger.
Her er teksten til Jeg er så glad hver julekveld (1 og 2 vers) :
- 1 -
Jeg er så glad hver julekveld, for da ble Jesus født, da lyste stjernen som en sol, og engler sang så søtt.
- 2 -
Det lille barn i Betlehem, han var en konge stor som kom fra himlens høye slott ned til vår arme jord
God Jul! (:
By: Mithilan
-------------------------------------------------------------------------------------------------
Forurensning (CO2)
Forurensning er alt som gjør et miljø usunt. Det er blitt et problem nå for tiden. Det skaper masse sykdommer, ødelegelser i naturen og det forminsker vannet vi har her på jorden.
Ting som forurenser kan være: Biler, Fly, Båter, Fabrikker og alt annet som slipper ut CO2 gassen.
Det er ikke bare disse tingene her som forurenser. Det er også mennesker som forurenser. Vi mennesker brenner faktisk søppell. Den gassen vi får ut fra søppellet er CO2.
Ikke bare å brenne søppellet, så er det noen som kaster søppellet ut i naturen. Og når søppellet råtner blir det til et giftig stoff. Da suger plantene/trærne det inn og visner. Og hvis vi fortsetter slikt så har vi ingen natur om noen århundre.
Det finnes mange forskere som er inntreserte i dette, og vil gjærne bygge/lage noen ting som ikke slipper ut CO2. De har f.eks funnet opp biler som går på hydrogen, som ikke slipper ut CO2. De har også funnet opp noen rutebusser som går på hydrogen og ikke bensin eller diesel. Det går en i Island.
Sykdommene som vi mennesker kan få er kreft, nyresykdommer, hjertesykdomer, Diabetes, Bronkyt, Alzheimers og Parkinsons. Det finnes flere sykdommer man får av forrurensningen.
Ikke bare mennesker kan bli syke av å forurense, men dyrene kan også bli syke.
Det er mange tusenhvis av dyr som lever i havet, som er døde eller forsvunnet av STORE båtulikker som skal frakte olje og bensin.
Elver og insjøer blir stadig vekk mer brunere. Det skjer i Nord-Europa og Nord-Amerika. Dette hviser hvor mye vi forurenser verden og ødeleger naturen.
Vi må stoppe å forurense! Hvis ikke kan det skje mange katastrofer her på jorden.
Written by: Mithilan

தமிழ்நூல்களை அறிவோம்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு,
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்,
கற்றரிந்தார் ஏத்துங் கலியோடு அகம் புறம் என்று,
இத்திறத்த எட்டுத் தொகை"

நறுக்குகள்

காசியானந்தன் நறுக்குகளே இவை.

வல்லாண்மை
பயங்கரவாதி
என்கிறான்
துப்பாக்கி
வைத்திருப்பவனை
அணுகுண்டு
வைத்திருப்பவன்!

இயக்கம்
வைக்காதே சிலை
தொழிலாளிக்கு
எங்கும்
செயலற்று
நின்றதில்லை
இவன்
என்றும்!

தாய்
சொன்னாய்
அடிமைப்பட்டதை
தாய்மொழியும்
தாய்நாடும்

சொல் முதலில்
தாய்
அடிமைப்பட்டதை!


போராளி
செத்தவனுக்காக
அழுதவன்
நீ
இவன்
அழுதவனுக்காக
செத்தவன்!

மண்
மண்ணில்
உழவன் வாழ்க்கை
அறுவடைக்கு முன்

உழவன் வாழ்க்கையில்
மண்அறுவடைக்குப்
பின்!


தமிழன்
களத்தில்
இருந்த
வில்
இசைக் கருவியாய்........

வேல்
சாமியாய்.......

குதிரை
விளையாட்டாய்.....

தமிழன்
அடிமையாய்!


தேர்தல்
"ஏழைகளின்
நண்பன்
நான்"
இம்முறையும்
வேட்பாளர்
முழக்கம்
சேரியில்....

என்றென்றும்
நாங்கள்
ஏழையாய்....
அவர்கள்
நண்பராய்...


ஒருமை
சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!


குமுறல்
செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்.....
சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?


நாகஸ்வரம்
கலைஞன்
வாயிலிருந்து
நாகஸ்வரத்தில்
பாய்ந்தது
எச்சில்
நாகஸ்வரத்திலிருந்து
ரசிகன் காதில்
பாய்ந்தது
தேன்!

சனி, 19 ஜனவரி, 2008

குணபாலா. சர்மிலன்

அனலைதீவு
இந்து சமுத்திரத்தின் முத்தென மிளிரும் இலங்கைமணித்திருநாட்டில் எழிலோங்கும் தீவுகளில் அருளோங்கும் தெய்வச்சிறப்பு உள்ளது அனலைதீவாகும். இத்தீவின் பரப்பளவு 5 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலமும் உள்ள ஓர் சிறிய தீவாகும். இலங்கயிலேயே பெரிய சித்திரைத்தேர் இங்குள்ளது. இது 1982ல் முதன் முறை வெள்ளோட்டம் ஓடியது. இத்தேர் அனலைதீவின் முதன்மையான ஐயனார் தலத்தில்லுள்ளது. ஊரின் உள்ளே கால் எடுத்து வைத்தால் அப்பப்பா! என்னே அழகு பச்சைப்பசேல் என்று பரத்த பாய் விரித்தாற் போல எங்கு பார்த்தாலும் ஒரே தோட்டமும் காயும் பஞ்சு கருமாக பொன் விளையும் பூமியே. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களும் பனை மரங்களும், வாழை மரங்களும் மரமெங்கும் இளநீர் குலைகளும், வருக வருக என ஆடி அசைந்து தலையாட்டி வரவேற்கும். சென்ற முறை ஐயனார் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தபோது கடலலையின் மத்தியில் மக்கள் கூட்டம் அலையடித்தும் தேரிழுக்க போட்டியிட்ட போது நானும் அந்தவடத்தை தொட்டிட வேண்டும் என்று மக்கள் வெள்ளதுள் சென்றுதேரின் வடத்தை ஒரு கணம் தொட்டு இழுத்த காட்ச்சி இன்றும் என் கண்முன்னே கரை பரண்டோடுகின்றது. கற்பூரசட்டிகள்ளும் காவடியாட்டங்களும் அருகருகே தாகம் தீரிக்கவென்றெ தண்ணீர் பந்தல்கரும் எத்தனை வியத்தகு விந்தையானது. இந்த புகழ் பூத்த எழில் நிறைந்த ஊரையும் மக்களயும் மறந்து என்னால் ஒரு நிமிடமேனும் வாழ முடியவில்லை. கடுகு சிறிது காரம் பெரிது இந்த சிறிய ஊரின் பெருமை எத்தனை சிறப்பு.
அனலைதீவின் சிறப்பினாலே அருள்மிகு ஆலையஙளும் சீர்பெரு கல்வி கற்கும் பெரியார் நிரம்பப்பெற்ற வாரி கடல் சூழ்ந்த பூமி என்றுமே வளம் பெறுகவே!போற்றிடுவோம் நாமெல்லாம் அன்லையியம் பதியினை பெற்ற தாயும் பிறந்த பொன் நாடென்றும் ஏற்ற முடனே வீறு நடை போட்டு உயர்ந்திடவே ஆற்றல் மிகு சிறப்புடனே அனைவரும் கூடிவளம் சேர்ப்போம்.







நோர்வே
ஐரோப்பாவின் வடக்குப் பகுதியில் நோர்வே என்னும் ஓர் நாடு உள்ளது. இந் நாட்டின் தலைநகரம் ஒஸ்லோவாகும். நோர்வேயின் பரப்பளவு 323 877 சதுரக்கிலோமிட்டர் ஆகும். இந் நாட்டில் 50 இலட்சம் குடிமக்கள் உள்ளனர். இந் நாட்டு மொழியின் பெயர் (நொஸ்க்) ஆகும்.
(கல்ஹோபிக்கன்) என்னும் மலை நோர்வேயில் உயரமான மலையாகும். இதன் உயரம் 2469 மீட்டராகும். நோர்வேக் கடலின் அடியில் எண்ணெய் உள்ளது. எண்ணெய் இந்நட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாகும். மீனும் இன்னும் ஒரு ஏற்றுமதிப் பொருளாகும். இங்கு பனிக்காலத்தில் நிறைய பனி கொட்டும். இக்காலத்தில் இந்நட்டு மக்கள் பனியில் சறுக்கி விளையடுவார்கள். இங்கு உள்ள மலைகளையும் இயற்கை அழகையும் பார்த்து (இரசிப்பதற்கு) பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.




நான் நோர்வேயில் பிறந்தேன். எனது வயது 13 ஆகும். நான் அன்னை பூபதி கலைக்கூடத்தில் தமிழ் கற்று வருகிறேன்.

வியாழன், 17 ஜனவரி, 2008

தமிழரசர் மரபுகள்

1. பாண்டியர் : சரித்திரத்திற்கு உட்படாதவர்: கபாடபுரம் மூழ்கியபின், மண்வூரிலிருந் தாண்டகுலசேகர பாண்டியன் முதல் திருஞானசம்பந்தர் காலத்துக் கூன்பாண்டியன்வரை, 74 பாண்டியர் பெயர்கள் திருவிளையாடற் புராணத்திற் கூறப்படுகின்றன. கடைக்கழக முடிவின் பின் , களப்பிரார் என்ற வகுப்பார் பாண்டிநாட்டைச் சிறிதுகாலம் ஆண்டுவந்தனர்.

சரித்திரத்திற்கு உட்பட்டவர்.

முதல்மரபு

கடுங்கோன் (கி.பி 590 - 620), மாறவர்மன் (620 - 45) , சேந்தன் ( 645 - 70) , அரிகேசரி மாறவன்மன் ( 670 - 710 ) , கோச்சடையன் ( 710 - 40 ) , மாறவர்மன் ராஜசிம்மன் i ( 740 - 65 ) , ஜடில பராந்தக நெடுஞ்செழியன் ( 765 - 815 ) , ஸ்ரீ மாறன் ( 815 - 62 ) , வரகுணவர்மன் ( 862 - 80 ) , பராந்தக வாரராகவன் ( 880 - 900 ), மாறவர்மன் ராஜசிம்மன் ii ( 900 - 20 ) .கி.பி 925 முதல் 12 ஆம் நூற்றான்டுவரை பான்டிநாடு சோழர் வயப்பட்டிருந்தது.

இரண்டாம் மரபு

ஜடாவர்மன் குலசேகரன் ( 1190 - 1217 ), மறவர்மன் சுந்தரபாண்டியன் ( 1216- 38 ) , மறவர்மன் சுந்தரன் ( 1238 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1253 ) , மறவர்மன் குலசேகரன் ( 1268 ) , ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ( 1276 ) , மாறவன்மன் வைகிரம பாண்டியன் ( 1283 ) , ஜடாவர்மன் வீரபாண்டியன் ( 1296 ) , ஜடவர்மன் சுந்தரபாண்டியன் ( 1330 ).

பின்பு, அலாவுடின், கம்பன்னவுடையார்,நாயக்க மன்னர், ஆர்க்காட்டு நவாபு, ஆங்கிலேயர் என்பவர் முறையே பாண்டி நாட்டைக் கைப்பற்றினர்.

சோழர்: (சரித்திரத்திற் குட்படாதவர் - முற்காலத்தவர்) :
சூரியன் , மனு , இக்குவாகு , ககுத்தன் , புலியும்மானும் ஒரு துறையுண்ண ஆண்டவன், மாந்தாதா, முசுகுந்தன் , தேவர்க் கமுதமளித்தவன், வல்லபன், சிபி , சுராதிராசன் , சோளன், இராசசேகரி, பரகேசரி, காலனிடத்தில் வழக்குரைத்தோன், காந்தன், காகந்தி , அனைத்துலகும் வென்றோன், வேந்தனைக் கொடியாக வைத்தோன், ஒருகடலில் மற்றொரு கடலைப்புக விட்டோன், தன் குருதியை உண்ணவளித்தோன், காற்றைப்பணிகொண்டோன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செப்பியன், வானவூர்தி செலுத்தினோன், அரசர் சூளாமணி , வீரவாதித்தன் , சூரவாதித்தன் முதலியோர்

மனுவுக்கு முன்னிருந்த சோழ மன்னவர் கணக்கற்றவர். அவர் பெயர் திட்டமாய்த் தெரியவில்லை.சோழர், திருவாரூர் சீகாழி உறையூர் புகார் தஞ்சை செயங்கொண்ட சோழபுரம் முதலிய பல நகரங்களைப் பல சமையங்களில் தலைநகராகக் கொண்டிருந்தனர்.

சரித்திரத்திற்கு பிற்கலத்தவர் : உருவப் பஃறேர். இளஞ்சேட் சென்னி , கரிகாலன் , கிள்ளிவளவன் , தித்தன் , பெருங்கிள்ளி , நல்லுத்தரன் , கோப்பெருஞ் சோழன் , கோச்செங்கட் சோழன் முதலியோர்.

இவருள் கரிகால் வளவன் பனிமலையிற் புலியைப் பொறித்து நாவலந்தேசம் முழுதும் தன் ஆணையைச் செலுத்தினான்.

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை சோழநாட்டின் வடபாகமான தொண்டைநாடும், ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை சோழநாடு முழுவதும் பல்லவராட்சிக்குட்பட்டிருந்தது.

சரித்திரத்திற் குட்பட்டோர்
விஜயாலயனும் முதலாம் ஆதித்தனும் (850 - 907), முதலாம் பராந்தகன் ( 907 ), இராஜாதித்தன் (947 ) , கண்டராதித்தன் மதுராந்தகன் அரிஞ்சயன் 2ஆம் பராந்தகன் 2ஆம் ஆதித்தன் முதலியோர் (970 - 985 ), முதலாம் ராஜராஜன் (985 - 1014 ), ராஜேந்திர சோழதேவன் ( 1012 ), ராஜாதிராஜன் ( 1018 ), விஜயராஜேந்திரதேவன் (1052 ), ராஜ மகேந்திரனும் வீரராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் (1055- 1070 ), முதலாம் குலோதுங்கன் ( 1070 ), விக்கிரமச்சோழன் ( 1118 ), இரண்டாம் குலோதுங்கனும் இரண்டாம் இராஜராஜனும் இரண்டாம் ராஜாதிராஜனும் (1143 - 78 ), 3ஆம் குலோத்துங்கன் ( 1178), மூன்றாம் இராஜராஜன் ( 1216 ), மூன்றாம் இராஜேந்திரன் ( 1246 ).

இவருள்,
ராஜேந்திர சோழதேவன் குமரியிலிருந்து கங்கைவரை தன்னடிபடுத்தி ஈழம் (இலங்கை ), கடாரம் ( பர்மா ), முதலிய நாடுகளையும் கைப்பற்றினான்.மாறவர்மபாண்டியன் 1222 - லும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் 1267-லும் சோணாட்டைக் கொண்டனர். பின்பு முறையே, துலுக்கர், உடையார், நாயக்கர், மராட்டியர்,ஆங்கிலேயர் என்பவர் சோணாட்டைக்கைக்கொண்டனர்.

சேரர் :பாரதப்போரில் இருபடைகட்கும் சோறு வழங்கியவன் பெரிஞ்சோற்றுதியஞ் சேரலாதன்.

சேரர் , கரூர் , வஞ்சிகொடுங்கோலூர், முதலிய நகர்களை முறையே தலைநகராகக் கொண்டிருந்தனர்.கடைக்கழகமரபினர்உதியஞ்சேரல், இமையவருமன் நெடுஞ்சேரலாதன்,பல்யானைச்செல்கெழு குட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்,செங்குட்டுவன், ஆடுகோட்பட்டுச் சேரலாதன், முதலியோர். செங்குட்டுவன் வடநாட்டின் மேற் படையெடுத்துச் சென்று ஆரியவரசரை வென்று , நாவலந்தேசம் முழுதும் தன்னடிப் படுத்தினான். மாந்தரம் பொறையன், கடுங்கோ , கருவூரேறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேர லிரும்பொறை, அந்துவஞ்சேர லிரும்பொறை, செல்வக் கடுஞ்கோ லிரும்பொறை, யானைக்கட்சேய் , மாந்தரஞ்சேர லிரும்பொறை, கணைக்கா லிரும்பொறை முதலியோர்.

கடைக்கழக காலத்தில் , தகடூரென்னும் தருமபுரியில், அதிகமான் நெடுமா அஞ்சி , அதியமான் பொகுட்டெழினி முதலிய அதிகர் மரபினர் ஆண்டுவந்தனர். 13ஆம் நூற்றாண்டிலும் அம்மரபைச்சேர்ந்த விடுகாதழிய பெருமாள்ளென்னும் சிற்றரசன் இருந்திருக்கின்றான்.

மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியல் 8ஆம் நூற்றாண்டில் குலசேகர ஆள்வாரும், 9ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் நாயநாரும் ஆண்டனர்.
மலைக்குகிழக்கிலுள்ள சேரநாட்டுப்பகுதியில் தென்பாகம் (கோயம்புத்தூர் வட்டம் ) கழககாலத்திலேயே கொங்கு நாடென பிரிந்துவிட்டது. பின்பு சில நூற்றாண்டுகளுக்குப்பின் வடபாகமும் (சேலம் வட்டம் ) கங்கபாடியென பிரிந்துவிட்டது. மலைக்கு மேற்கிலுள்ள சேரநாட்டுத்தமிழர் 14ஆம் நூற்றாண்டில் மலையாளியராகத் திரிந்துவிட்டனர். மைசூர் நாடு 12ஆம் நூற்றாண்டுபோல் கன்னட நாடாக மாறிவிட்டது. தெலுங்கர் 8ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாட்டிற் குடியேறத்தொடங்கிவிட்டனர்.

கழகத்திற்கு முற்காலம்







குமரிநாடு(Lemuria): தமிழர் அல்லது திராவிடர், ஆரியர் துருக்கியர் முதலிய பிறமக்களைப்போல் அயல்நாடுகளிலிருந்து நாவல் (இந்து) தேசத்துக்கு வரவில்லை தெற்கே இந்துமாகடலில் முழுகிப்போன குமரிக்கண்டமே தமிழரின் பிறப்பிடம். மனிதன் தோன்றிய இடமும் அதுவேயென்று மேனாட்டுக்கலைவல்லார் கூறுவது முற்றும் பொருத்தமாயிருக்கிறது.