கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 25 ஜூன், 2010

தனிநாயகம் அடிகளார்


1913ல் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணக்குடானாட்டில் கரம்பொன் என்ற ஊரில் சேவியர் என்பவர் ஒருவர் பிறந்தார். தனது முதற்படிப்பை ஊர்காவற்றுரையில் உள்ள தூய அந்தோனியார் பள்ளியில் முதற்படிப்பு படித்து பின்பு தமிழகத்தில் உள்ள அண்ணாமலை கல்லூரியில் மேற்ப்படிப்பு படித்தார். இங்கு பல பட்டங்கள் கிடைத்து தமிழில் புலமையடைந்தார். தமிழில் உள்ள ஆர்வத்தால் இவர் தன் பெயரை தனிநாயகமென மாற்றிக் கொண்டார். தமிழில் மட்டுமல்ல ஐரோப்பிய
மொழி படினெட்டிலும் புலமையடைந்தவர். தமிழ்மொழி ஒரு சிறப்பு தொன்மையும் மிக்க மொழி என்று கருதி இம்மொழியை உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முனைந்தார். தமிழ் நூல்கள் மொழிபெயர்த்து வந்தால் தமிழ் இன்னும் போற்றப்படும் என்று அமெரிக்காவில் இரு இதழ்களை வெளியிட்டார். " தமிழ்ப்பண்பாடு" மற்றும் "தமிழியல் இதழ்" என்ற இதழ்களை வெளியிட்டார். ஓராண்டில் இருநூறு உரைகளை அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உரையாற்றினார் என்று கூறப்படுகிறது. தமிழர்களின் வளர்ச்சி மற்றும் சிறப்புகளை பன்னாட்டு ஆய்வாளர்களுக்கு கூறுவதற்கு "தமிழர் ஆரய்ச்சி மன்றம்" என்ற நிறுவகத்தை தொடக்கி விட்டார். இம்மானாடு பரிஸ், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படுத்தினார். 1974ல் இரண்டாவது தமிழர் ஆரய்ச்சி மான்றத்தை யாழ்ப்பாணத்தில் பெரும் சிறப்புடன் நடத்தினார். இதை பொறுக்க முடியாத இலங்கை காவலர் இம் மானட்டை குழப்பினர், பல தமிழர்கள் கொல்லபட்டனர். சிலப்பதிகாரம், திருக்குறள், தமிழர் வணிகம் போன்றவற்றை ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மொழி பெயர்த்தார். செயக்ச்பேயர் போன்ற பெரிய எழுத்தாளர்களின். புத்தகங்கள் போல் இவை வரவில்லை. "தமிழ் மறை விருந்து" என்ற நூலை வெளியிட்டு, 1980ஆம் ஆண்டு இவர் இயற்கைச்சாவை அடைந்தார்.

எழுத்துரு : சர்மிலன் குணபாலா (நோர்வே)