கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

சீனத்துப் புறம்

ஆடையும் அணியும் அழகுற விருந்தும்
அவற்றை நீதான் அணிதற்கில்லை
தேரு மாவும் கொண்டனை எனினும்
ஏறி வூர்வலம் வருதற் கில்லை
இறப்பினி யதற்குள் இடைப்படின் அவற்றைப்
பிறனொரு வேந்தன் பெறுவா னறிக !

மயனமை முன்றிலும் மணிமண் டபங்களும்
பயன்படுத் தாமலே பளிச்சென் றிருக்கும்
ஒலிதரு மணியும் உரத்தெழு பறையும்
ஓசையெழுப் பாமலே உறங்கிக் கிடக்கும்
இறப்பினி யதற்குள் இடைப்படின் அவற்றை
பிறனொரு வெந்தன் பெறுவா னறிக !

களிக்கும் கள்ளும் கடிசுவை யுணவும்
அளிக்கும் சுகத்தொடு யாழினை மீட்டிக்
கடிதே செல்லும் காலந் தன்னை
நெடிதா யாக்கி நிறைவு கொள்வாய்
இல்லெனின் எவனோ எளிதாய் அவற்ரை
வெல்வான் என்படை விரைந்துநீ அறிகவே !

போரே வாழ்வெனவிருந்த சீனநாட்டு மன்னனுக்கு அந்நாட்டுப் புலவன் கூறிய அறிவுரைகள்.
மொழிப்பெயர்ப்பு முனைவர் இராம.குருநாதன்.
நூல்:புறநானூறு ஒரு புதிய பார்வை