கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 30 நவம்பர், 2012

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!


நன்றி

படத்துக்கும் பதிவுக்கும்


மூலிகைகளும், தீரும் நோய்களும்...!
-மன்னை வை.ரகுநாதன் -

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

மாவீரர்களின் கனவு



மாவீரர்களின் கனவுகளை மனதோடு சுமந்திருப்போம்…
==========================================

கார்த்திகைத் திங்களிலே கார் சூழ்ந்து நிற்கையிலே காலத்தை வென்ற – எம் காவிய நாயகர்களின் கல்லறையை கண்ணீரால் நீராட்டி கனத்த இதயத்துடன் பூஜித்து நிற்கின்றோம்.

தாய்மண்ணே மூச்சென்று தலைவனின் வழிநின்று பகைவென்ற வீரர்களே உம்பாதம் தேடி ஓடோடி நாம் வந்து ஒருகணம் தியானிப்போம்.

உள்மனம் தேம்பியழ, கண்மணிகளே….
உங்கள் கனவுகள் கலைந்துதான் போகலாமோ?
தமிழரெம் தலைவிதியும் தலைகீழாய் மாறலாமோ?
தளைத்து நின்ற எம்தேசம் சிதைவுண்டு போகலாமோ?
சிதறுண்ட எம்மினம் சிறைப்பட்டு வாடலாமோ?
கறைபட்ட கைகளிடம் கையேந்தி நிற்கலாமோ?

எம்தேசத்தின் விடுதலை வித்துக்களே விலைமதிப்பற்ற அழியாச்சொத்துக்களே என்றும் மனதில் குடியிருக்கும் முத்துக்களே, உங்கள் கல்லறைகளைக்கூட இந்தக்காடையர்கள் விட்டார்களா..? அவர்கள் அழித்தது கல்லறைகளை மட்டும்தான். எங்கள் நெஞ்சறைகளில் குடியிருக்கும் உங்களின் நீங்கா நினைவுகளையல்ல. ஆண்டாண்டுகாலம் ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள். மறவோம் ஒருநொடியும் மாணிக்கங்களே! உமை தொழுவோம் நாம் அனுதினமும். செழித்துத் தளைத்தோங்கிநின்ற தமிழீழ தேசமதின் தன்னிகரற்ற வளர்ச்சிகண்டு கிளர்த்தெழுந்ந வல்லரசுகள் வந்துவிடுமோ? வல்லரசாய் தலைநிமிர்ந்த தமிழீழதேசம் என அஞ்சி வஞ்சகமாய் எம்மினத்தை அடியோடு அழிப்பதற்கு குவிந்துவந்து அடித்ததல்லோ?



உலக வல்லரசுகளை களத்தில் கதிகலங்கவைத்து காவியமாகிய வீரத்தளபதிகளும் சூரப்புலிவீரர்களும் ஏராளம் ஏராளம். எப்படி நாமிதை மறப்பது? நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறதே, கண்ணீர் பெருக்கெடுக்கிறதே…

மாவீரர்கள் ஒவ்வொருவரும் எஞ்சியிருக்கும் எச்சத்தமிழர்கள் நாமும் கண்ட தமிழீழக் கனவு கலைந்துபோகவிடலாமோ, ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்!’ என்று அன்று பாடினான் பாரதி. ஈழத்தமிழர் நாம் தமிழீழப் பயிரை கண்ணீரோடு சேர்த்து செந்நீரையும் சிந்தி வளர்த்தோம்.. எப்பெரும் தியாகங்களால் வளர்த்த தமிழீழப் பயிரை தமிழர் நாம் கருகவிடலாமோ ?

உறுதியால் உங்கள் உள்ளங்களை உரமேற்றுங்கள். மனது தளராதீர்கள். இதுவே வழியயன வழிகாட்டிய தலைவன் ஈழமண்ணுக்காய் தன் தனயனையும் ஈகம் செய்தான். அப்பெரும் உன்னதத் தலைவனின் சிந்தனைகள் எம்மை நெறிப்படுத்தட்டும். அவரது ஆசிகள் எம்மை வழிநடத்தட்டும், வருங்காலம் என்னவென்று ஏங்குகின்ற இதயங்களே கலங்காதீர்கள் காலம் பதில் சொல்லும்.

தமிழீழக் கனவை மனமுழுதும் சுமந்திருக்கும் புலம்பெயர்வாழ் அன்புறவுகளே…

அணையாது ஒளிரட்டும் உங்கள் ஒற்றுமைச்சுடர்.
அழியாது தொடரட்டும் பேரார்ப்பாட்டங்கள்.
அதன்பால் அகலட்டும் எம்மீதான பயங்கரவாதத்தடை.
அதுவரை கொளுந்து விட்டெரியட்டும் எம்மின மீட்சிக்கானஇலட்சியத்தீ…!

தடைகள் தளர்ந்தபின் அரிதாரங்கள் பல களையப்படும் கவலைகள் காணாமல் போகும், ஈழத்தமிழரெம் தமிழீழ தேசத்திற்கான பயணத்தை தொடருவோம் நிச்சயம் கிடைக்கும் வெற்றி என்ற நம்பிக்கையோடும் மாவீரச்செல்வங்களின் கனவுகளை மறவாமல் சுமந்து செல்லும் மனதோடும்..!

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்
உதயன்

Xavier Fernando


வியாழன், 29 நவம்பர், 2012

வீட்டு மருத்துவக்குறிப்புகள்

நன்றி
படத்துக்கும் பதிவுக்கும்


எளிமையான வீட்டு மருத்துவக்குறிப்புகள்:-

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

மார்புச் சளி
வெறும் வயிற்றில் இஞ்சி சாறில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.

சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

புதன், 28 நவம்பர், 2012

வெறியாட்டம்



மாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம் - உதயன் ஆசிரியர் மீதும் படையினர் தாக்குதல்


தமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரா் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரா்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினா் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர்.
எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரா் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காலை முதல் இச் செய்தி பதிவேற்றம் செய்யும் வரை இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.


மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமகத் தாக்கத் தொடங்கினர். இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர்.
பாலசிங்கம் விடுதியில் பெரும் அமளி துமளி இடம்பெற்றுக்கெண்டிருக்க ஆனந்தக்குமாரசுவாமி விடுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சுடரேற்றப்பட்டது. காரிருளில் சுடர்கள் ஜெகஜோதியாய் ஒளிர்வதைக்கண்ட படைகள் தாங்க முடியாத கோபத்துடன் ஆனந்தக்குமராசுவாமி விடுதி நோக்கிப் பாய்ந்தனர்.


இவ்வேளையில் தனது கமெராவில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த கமெராவைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை. முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர்.
பல்கலைக்கழகத்தினுள் படையினர் பிரசன்னம் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாராய் முகமாய் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது



செந்தமிழன் வேழன்




ஞாயிறு, 25 நவம்பர், 2012

புறநானூறு கண்ட புலி நானூறே



புறநானூறு கண்ட புலி நானூறே !!!

அய்ம்பத்தேழு அகவை காணும் தமி(ழ)கமே
அகிலமே அகம் வணங்கும் அற்புதமே
புறநானூறு கண்ட புலிப் படையே
வள்ளுவநெறி கண்ட வான் புகழே
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் உனையே!

ஒழுக்க படையமைத்து ஒழுக்கநெறி நீபடைத்தாய்
வெஞ்சமர் புரிந்து வஞ்சகரை நீஅழித்தாய்
சிங்கமென்ற சிங்களவனை நீசிறு நரியாக்கினாய்
தடைகளை தகர்த்தெறிந்து தமிழீழம் நீ கண்டாய்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் உனையே!

தமிழனுக்கோர் தனிநாடா எனதரணியே படையமைக்க
அகிலமே திரண்டாலும் அஞ்சுமோ புலிப்படையென
அஞ்சாத புலியென அறநெறி போர்புரிந்தாய்
வஞ்சகர் வஞ்சகத்தால் வீழ்த்தினர் உனையே
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் எம்தலையே


மரணம் நின்னுடலை மரணித்தாலும் மன்னவா
உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் நின்புகழே
உனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
உன் வழியில் நாங்கள் தமிழர்கள்!

உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 மூச்சு, நிமிடத்திற்கு 360 மூச்சு வகுக்கப்பட்டுள்ளது.
(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. 

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

நன்றி

மதன் எல்லைத் தமிழன்

படத்துக்கும் பதிவுக்கும்

மூலிகைப் பொடிகள்


நன்றி
படத்துக்கும் பதிவுக்கும்



மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரிசா பாலு


நன்றி

படத்துக்கும்
பதிவுக்கும்



2012-2017 வரை தென்கிழக்கு கடல் என்று அழைக்கப்படும்

தூத்துக்குடியில் இருந்து குமரிமாவட்ட நீரோடி வரை உள்ள கடல் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து அதற்க்கு குமரிக்கடல் என்று பெயர் வைக்கும் நோக்கில் நகர்ந்து வருகிறேன்

வருடங்களில் நான்குமாதங்கள் ஆழ கடலில் உயிரை பணயம் வைத்து தொடர்ச்சியாக செயல் பட விரும்பும் கடல் சார் துறைகள் சார்ந்த நண்பர்கள் தொடர்பில் வரவும்

கடந்த சில வருடங்களில் பலர் உருவாகி உள்ளனர் ,உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறார்கள்

இன்று காலை மீன் வள ஆய்வாளர் வைதீஸ்வரன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த நேரம் எனக்கு மனம் நெகிழ்ந்தது

எத்தனை மீனவர்கள் இன்று ஆய்வாளர்களாக மாறி உள்ளார்கள் என்று கணக்கிட்டோம் , பாண்டிய நாட்டின் மூழ்கிய நிலங்களை அரசின் உதவிகள் இல்லாமல் தேட முடியும் என்ற புரிதல் எனக்கு

இந்த முயற்சிகள் வரலாறு என்பது பேசப்படுவதற்காக மட்டும் அல்ல மக்களின்பயன்பாட்டிற்கு கூடத்தான் என்று கடலில் உள்ள மூழ்கிய நிலங்கள் எப்படி மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்பதை உணரவைக்க தான் இந்த முயற்சிகள் ,

இதில் பல நுண்ணிய பின்புலங்கள் உள்ளன

கலைச்சொற்கள்


நன்றி
Tamil History and Culture
பதிவுக்கு


1. அகச்சுரப்பியியல் - Endocrinology
2. அடிசிலியல் - Aristology
3. அடையாளவியல் - Symbology
4. அண்டவியல் - Universology
5. அண்டவியல் - Cosmology
6. அணலியல் - Pogonology
7. அருங்காட்சியியல் - Museology
8. அருளரியல் - Hagiology
9. அளவீட்டியல் - Metrology
10. அற்புதவியல் - Aretalogy
11. ஆடவர் நோயியல் - Andrology
12. ஆய்வு வினையியல் - Sakanology
13. ஆவணவியல் - Anagraphy
14. ஆவியியல் - Spectrology
15. ஆறுகளியல் - Potamology
16. இசையியல் - Musicology
17. இந்தியவியல் - Indology
18. இயற்பியல் - Physics
19. இரைப்பையியல் - Gastrology
20. இலக்கிலி இயல் - Dysteleology
21. இறை எதிர் இயல் - Atheology
22. இறைமையியல் - Pistology
23. இறைமையியல் - Theology
24. இன உறுப்பியல் - Aedoeology
25. இன்ப துன்பவியல் - Algedonics
26. இனப் பண்பாட்டியல் - Ethnology
27. இனவியல் - Raciology
28. ஈரிடவாழ்வி இயல் - Herpetology
29. உடலியல் - Physiology
30. உடற் பண்டுவஇயல் - Phytogeography
31. உடற்பண்பியல் - Somatology
32. உடுவியக்கவியல் - Asteroseismology
33. உணர்வகற்றியல் – Anesthesiology
34. உயிர் மின்னியல் - electro biology
35. உயிர்ப்படிமவியல் - Paleontology
36. உயிர்ப்பொருளியல் - Physiology
37. உயிர்மியியல் - Cytology
38. உயிரித் தொகை மரபியல் - Population Genetics
39. உயிரித்தொகை இயக்க இயல் - Population
Dynamics
40. உயிரிய இயற்பியல் - Biophysics
41. உயிரிய மின்னணுவியல் - Bioelectronics
42. உயிரிய வேதியியல் - Biochemistry
43. உயிரிய வேதிவகைப்பாட்டியல் - Biochemical
taxonomy
44. உயிரியத்தொழில் நுட்ப இயல் - Biotechnology
45. உயிரியப் பொறியியல் - Bioengineering
46. உயிரியல் - Biology
47. உயிரினக் காலவியல் - Bioclimatology
48. உயிரினச் சூழ்வியல் - Bioecology
49. உருவகவியல் - Tropology
50. உருள்புழுவியல் - Nematology
51. உரைவிளக்கியல் - Dittology
52. உளவியல் - Psychology
53. ஊட்டவியல் - Trophology
54. எகிப்தியல் - Egyptology
55. எண்கணியியல் - Numerology
56. எரிமலையியல் - Volconology
57. எலும்பியல் - Osteology
58. எலும்பு நோய் இயல் - Osteo pathology
59. எறும்பியல் - Myrmecology
60. ஒட்பவியல் - Pantology
61. ஒப்பனையியல் - Cosmetology
62. ஒலியியல் - Phonology
63. ஒவ்வாமை இயல் - Allergology
64. ஒழுக்கவியல் - Ethics
65. ஒளி அளவை இயல் - Photometry
66. ஒளி இயல் - Photology
67. ஒளி உயிரியல் - Photobiology
68. ஒளி விளைவியல் - Actinology
69. ஒளி வேதியியல் - Photo Chemistry
70. ஒளித்துத்த வரைவியல் - Photozincography
71. ஓசையியல் - Acoustics
72. கசிவியல் - Eccrinology
73. கட்டடச்சூழலியல் - Arcology
74. கடப்பாட்டியல் - Deontology
75. கடல் உயிரியல் - Marine biology
76. கடற் பாசியியல் - Algology
77. கண்ணியல் - Opthalmology
78. கணிப்பியல் - Astrology
79. கதிர் மண்டிலவியல் - Astrogeology
80. கதிர் விளைவியல் - Actinobiology
81. கரிசியல் - Hamartiology
82. கரிம வேதியியல் - Organic Chemistry
83. கருத்தியல் - Ideology
84. கருதுகை விலங்கியல் - Cryptozoology
85. கருவியல் - Embryology
86. கருவியல் - Embryology
87. கல்வி உளவியல் - Educational Psychology
88. கலைச்சொல்லியல் - Terminology
89. கழிவியல் - Garbology
90. கனி வளர்ப்பியல் - Pomology
91. கனிம வேதியியல் - inorganic chemistry
92. கனியியல் - Carpology
93. கனியியல் - Pomology
94. காளானியல் - Mycology
95. காற்றழுத்தவியல் - Aerostatics
96. காற்றியக்கவியல் - Aerodynamics
97. காற்றியல் - Anemology
98. கிறித்துவியல் - Christology
99. குடல் புழுவியல் - Helminthology
100. குருட்டியல் -Typhology
101. குருதி இயல் - Haematology / Hematology
102. குளுமையியல் - Cryology
103. குற்றவியல் - Criminology
104. குறிசொல்லியல் - Parapsychology
105. குறிப்பியல் - Cryptology
106. குறியீட்டியல் - Iconology
107. கெல்டிக் சடங்கியல் - Druidology
108. கேட்பியல் - Audiology
109. கைம்முத்திரையியல்(செய்கையியல் / சைகையியல்)
-Pasimology
110. கையெழுத்தியல் - Graphology
111. கொள்ளை நோயியல்- Epidomology
112. கோட்பாட்டியல் - Archology
113. கோளியல் - Uranology
114. சங்குஇயல் - Conchology
115. சமயவிழாவியல் - Heortology
116. சரி தவறு ஆய்வியல் - Alethiology
117. சாணவியல் - Scatology
118. சிலந்தி இயல் - Araneology
119. சிலந்தியியல் - Arachnology
120. சிறப்புச் சொல் தோற்றவியல் - Onomatology
121. சீனவியல் - Sinology
122. சுரப்பியியல் - Adenology
123. சூழ் வளர் பூவியல் - Anthoecology
124. சூழ்நிலையியல் - Ecology
125. செதுக்கியல் - Anaglyptics
126. செய்கை இயல் - Dactylology
127. செல்வ வியல் - Aphnology
128. செல்வவியல் - Plutology
129. செவ்வாயியல் - Areology
130. செவியியல் - Otology
131. சொல்லியல் - Lexicology
132. சொல்லியல் - Accidence
133. சொற்பொருளியல் - Semasiology
134. தசையியல் - Myology
135. தண்டனையியல் - Penology
136. தமிழியல் - Tamilology
137. தன்மையியல் - Axiology
138. தன்னியல் - Autology
139. தாவர உள்ளியல் - Phytotomy
140. தாவர நோய் இயல் - Phytopathology
141. தாவர வரைவியல் - Phytography
142. தாவரஊட்டவியல் - Agrobiology
143. தாவரவியல் - Botany
144. திணைத் தாவர இயல் - Floristics
145. திணையியல் - Geomorphology
146. திமிங்கில இயல் - Cetology
147. திருமறைக் குறியீட்டியல் - Typology
148. திருமனையியல் - Naology
149. திரைப்படவியல் - Cinimatography
150. தீவினையியல் -Ponerology
151. துகள் இயற்பியல் - Particle physics
152. துகளியல் - Koniology
153. துதிப்பாவியல் - Hymnology
154. துயிலியல் - Hypnology
155. தூய இலக்கியல் - Heirology
156. தூள்மாழை இயல் - Powder Metallurgy
157. தேர்தலியல் -Psephology
158. தேவதை இயல் - Angelology
159. தேவாலயவியல் - Ecclesiology
160. தேனீ இயல் - Apiology
161. தொடர்பிலியியல் - Phenomenology
162. தொண்டை இயல் - Pharyngology
163. தொல் அசீரியர் இயல் - Assyriology
164. தொல் உயிரியல் - Palaeontology
165. தொல் சூழ்நிலையியல் - Paleo ecology
166. தொல் பயிரியல் - Paleobotany
167. தொல் மாந்தவியல் - Paleoethnology
168. தொல் மீனியல் - Paleoichthylogy
169. தொல் விலங்கியல் - Palaeozoology
170. தொல்தோற்ற இனவியல் (மாந்த -
மாந்தக்குரங்கினவியல்) - Anthropobiology
171. தொல்லிசையியல் - Ethnomusicology
172. தொல்லியல் - Archaeology
173. தொல்லினவியல் - Paleethnology
174. தொல்லெச்சவியல் - Archaeozoology
175. தொழில் நுட்பச் சொல்லியல் - Orismology
176. தொழில் நுட்பவியல் - Technlogy
177. தொழிற்சாலை வேதியியல் - industrial chemistry
178. தொழு நோயியல் - Leprology
179. தொற்றி இயல்/ பயிர்ப்பூச்சியியல் - Pestology
180. தொன்மவியல் - Mythology
181. தோட்டுயிரியியல் - Astacology
182. தோல்நோயியல் - Dermatology
183. நச்சியியல் - Virology
184. நடத்தையியல் - Praxeology
185. நரம்பியல் - Neurology
186. நல்லுயிரியல் - Pneumatology
187. நலிவியல் - Astheniology
188. நன்னியல் - Agathology
189. நாடி இயல் - Arteriology
190. நாணயவியல் - Numismatology
191. நாளவியல் - Angiology
192. நிகழ்வியல்- Chronology
193. நிலத்தடி நீரியல் - Hydrogeology
194. நிலநடுக்கவியல் - Seismology
195. நிலாவியல் - Selenology
196. நிலை நீரியல் - Hydrostatics
197. நீத்தாரியல் - Martyrology
198. நீர் வளர்ப்பியல் - Hydroponics
199. நீர்நிலைகளியல் - Limnology
200. நீராடல் இயல் - Balneology
201. நுண் உயிரியல் - Microbiology
202. நுண் வேதியியல் - Microchemistry
203. நுண்பொருளியல் - Micrology
204. நுண்மி இயல் - Bacteriology
205. நுண்மின் அணுவியல் - Micro-electronics
206. நூல் வகை இயல் - Bibliology
207. நெஞ்சக வியல் - Cardiology
208. நெடுங்கணக்கியல் - Alphabetology
209. நெறிமுறையியல் - Aretaics
210. நொதி இயல் - Enzymology
211. நொதித் தொழில் நுட்பவியல் - Enzyme tecnology
212. நோய் இயல் - Pathology
213. நோய்க்காரணவியல் - Aetiology
214. நோய்க்குறியியல் - Symptomatology
215. நோய்த்தடுப்பியல் - Immunology
216. நோய்த்தீர்வியல் - acology
217. நோய்நீக்கியல் - Aceology
218. நோய்வகையியல் - Nosology
219. நோயாய்வியல் - Etiology
220. நோயியல் - Pathology
221. படஎழுத்தியல் - Hieroglyphology
222. படிகவியல் - crystallography
223. பணிச்சூழ் இயல் - Ergonomics
224. பத்தியவியல் - Sitology
225. பயிர் மண்ணியல் - Agrology
226. பயிரியல்-Phytology
227. பரியியல் - Hippology
228. பருப் பொருள் இயக்கவியல் - kinematics
229. பருவ இயல் - Phenology
230. பருவப் பெயர்வியல் - Phenology
231. பல்லியல் - Odontology
232. பழங்குடி வழக்கியல் - Agriology
233. பழம்பொருளியல் - Paleology
234. பற் கட்டுப்பாட்டியல் - Contrology
235. பறவை நோக்கியல் - Ornithoscopy
236. பறவையியல் - Paleornithology
237. பனிப்பாளவியல் - Glaciology
238. பாசி இயல் - Phycology
239. பாப்பிரசு சுவடியியல் - Panyrology
240. பாம்பியல் - Ophiology
241. பார்ப்பியல் Neossology
242. பாலூட்டியல் - Mammalogy
243. பாறைக் காந்தவியல் - Palaeo Magnetism
244. பாறையியல் - Lithology
245. பாறை அமைவியல் - Petrology
246. பிசாசியல் - Diabology
247. பிளவையியல் - Oncology
248. புத்த இயல் - Buddhology
249. புத்தியற்பியல் - New physics
250. புதிரியல் - Enigmatology
251. புதைபடிவ இயல் - Ichnology
252. புல உளவியல் - Faculty Psychology
253. புல்லியல் - Agrostology
254. புவி இயற்பியல் - Geo physics
255. புவி உயிர்ப் பரவியல் - Biogeography
256. புவி வடிவ இயல் - Geodesy
257. புவி வளர் இயல் - Geology
258. புவி வேதியியல்- Geo-chemistry
259. புவியியல் - Geography
260. புவிவெளியியல் - Meteorology
261. புள்ளியல் - Ornithology
262. புறமண்டிலவியல் - Exobiology
263. புற்று நோய் இயல் - Cancerology
264. பூச்சி பொட்டு இயல் - Acarology
265. பூச்சியியல் - Entomology
266. பூச்சியியல் - Entomology
267. பூச்சியியல் - Insectology
268. பெயர்வன இயல் - Acridology
269. பெரு வாழ்வியல் - macrobiotics
270. பேயியல் - Demonology
271. பொதுஅறிவு இயல் - Epistemology
272. பொருள்சார் வேதியியல் - Physical Chemistry
273. போட்டியியல் - Agonistics
274. போதனையியல் - Patrology
275. மகளிர் நோய் இயல் - Gynaecology/ Gynecology
276. மண்டையோட்டியல் - Craniology
277. மண்ணியல் - Pedology
278. மண்புழையியல் - Aerology
279. மணி இயல் - Campanology
280. மணிவியல் - Gemology
281. மதுவியல் - Enology (or Oenology)
282. மர ஒளி வரைவியல் - Photoxylography
283. மரபு இயைபியல் - Genecology
284. மரபு வழியியல் - Geneology
285. மரவரியியல் - Dendrochronology
286. மரவியல் - Dendrology
287. மருத்துவ அளவீட்டியல் - Posology
288. மருத்துவ நோயியல் - Clinical pathology
289. மருத்துவ மரபணுவியல் - Clinical genetics
290. மருந்தாளுமியல் - Pharmacy
291. மருந்தியல் - Pharmacology
292. மருந்து வேதியியல் - Medicinal chemistry
293. மலையியல் - Orology
294. மழையியல் - Ombrology
295. மனக்காட்சியியல் - Noology
296. மனநடையியல் - Nomology
297. மன்பதை உளவியல் - Social Psychology
298. மன்பதையியல் - Sociology
299. மனைவளர்உயிரியல் - Thremmatology
300. மாந்த இனவியல் - Ethnology
301. மாவியல் - Morphology
302. மானிடவியல் - Anthropology
303. மின் ஒலியியல் - Electro-acoustics
304. மின்வேதியியல் - Electrochemistry
305. மின்னணுவியல் - Electronics
306. மீனியல் - Ichthyology.
307. முகிலியல் - Nephology
308. முட்டையியல் - Oology
309. முடியியல் - Trichology
310. முதற்கோட்பாட்டியல் - Archelogy / Archology
311. முதியோர் கல்வியியல் - Andragogy
312. முதுமையியல் - Gerontology
313. முரண் உயிரியல் - Teratology
314. முரணியல் - Heresiology
315. முறையியல் - Systomatology
316. முனைப்படு வரைவியல் - Polarography
317. மூக்கியல் - Rhinology
318. மூதுரையியல் - Gnomology
319. மூப்பியல் - Gerontology
320. மூலக் கூறு உயிரியல் - Molecular biology
321. மெய் அறிவியல் - Philosophy
322. மெய்ம்மி நோயியல் - Histopathology
323. மெய்ம்மியியல் - Histology
324. மேகநோயியல் - Syphilology
325. மொழியியல் - Philology
326. மோப்பவியல் - Olfactology
327. ரூனிக்கியல் - Runology
328. வகையியல் - Taxology
329. வண்ணவியல் - Chromatology
330. வழக்குப் பேச்சியல் - Dialectology
331. வழிபாட்டியல் - Liturgiology
332. வளி நுண்மியல்- Aerobiology
333. வளிநுகரியியல் - Aerobiology
334. வாந்தியியல் - Emetology
335. வாய்நோயியல் - Stomatology
336. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
337. வான இயற்பியல் - Astrophysics
338. வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்) -
Aerophilately
339. வானியல் - Astronomy
340. வானிலை இயல் - Neteorology/
Astrometeorology
341. வானோடவியல் - Aerodonetics
342. விசை இயக்க இயல் - Kinetics
343. விண்கற்களியல் – Aerolithology
344. விண்ணுயிரியியல் - Astrobiology
345. விண்பொருளியல் - Astrogeology
346. விந்தையியல் - Thaumatology
347. விலங்கியல் - Zoology
348. விளைச்சலியல் (வேளாண் பொருளியல்) -
Agronomics
349. வெளிற்றியல் - Agnoiology
350. வேதியியல் - Chemistry
351. வேதிவகைப்பாட்டியல் - Chemotaxonomy
352. வேர்ச்சொல்லியல் - Etymology
 – med
 Santhosh Kumar og Saravana Kumar.

அதிசயமான இசைத் தூண்கள்


நன்றி
படத்துக்கும் பதிவுக்கும்


உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் "மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது . அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது. இந்த இசைத்தூண்களை "மிடறு" என்று அழைத்தார்கள்.

இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான " அலைகற்றையை " உருவாக்குகின்றது . எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.அனிஷ் குமார் என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள "இயற்பியல்" அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"ஈன் சிடு மெடல்லொக்ரப்க்ய் " (உசெட் டொ fஇன்ட் ஒஉட் இந்செர்விcஎ டெக்ரடடிஒன் ஒf cரிடிcஅல் cஒம்பொனென்ட்ச் ஒf ப்ரொcஎச்ச் ப்லன்ட்ச் ஒபெரடிங் உன்டெர் கிக்க் டெம்பெரடுரெ/ கிக்க் ப்ரெச்சுரெ/ cஒர்ரொசிவெ அட்மொச்ப்கெரெ) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது " தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் " என தெரிய வந்தது . " ச்பெcட்ரல் அனல்ய்சிச் "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது " தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் " சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது ? நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் ! .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை .

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது ! அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை ! அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்..!

சனி, 24 நவம்பர், 2012

புலவர் இறைக்குருவனார்


நன்றி
பதிவுக்கும் படத்துக்கும்



வீரவணக்கம்! வீரவணக்கம்!!
****************************
தன்னுடைய மாணவர் பருவத்தில் மொழிப்போர் தொடங்கி இறுதி நாள் வரையிலும் தமிழுக்காகவும், தமிழ்த்தேச விடுதலைக்காகவும், ஈழ மக்களின்
உரிமைக்காகவும் தன் உழைப்பை செலுத்திவந்த புலவர் இறைக்குருவனார் அவர்கள் நேற்று காலமானார்கள்.

மொழிஞாயிறு பாவாணர் அவர்களுடன் இணைந்தும்,பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடன் இணைந்தும் தமிழுக்கும், தமிழ்த்தேச விடுதலைக்கும் அரும்பாடுபட்டவர்கள்.

அய்யா பாவலரேறு அவர்களின் மறைவிற்குப் பிறகு தென்மொழி இதழின் ஆசிரியராக இருந்து தன் கடமையை நிறைவேற்றி வந்தார்கள்.

வாழந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ்வேன், வளைந்தாலும் நெளிந்தாலும் த்மிழ் பொருட்டே ஆவேன் என தன் வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்து மறைந்த புலவர் இறைக்குருவனார் அவர்களுக்கு தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

அன்னாரின் குடும்பத்தாரின் வருத்தத்தை தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பகிர்ந்துகொள்கிறது!!

நாளை காலை சென்னை மேடவாக்கத்தில் நடைபெரும் இறுதி நிகழ்விற்கு தமிழக மக்களை கலந்துகொள்ளும்படி அழைக்கிறது........
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்!!!

இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு


உலகின் மூத்த குடி தமிழ் குடி.. அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.
தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.
தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.
1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.
இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.
1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.
இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். ”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.
1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.
அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.
ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். ”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்” எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.
இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு. இவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ?,
1. 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்தி தீர்மானம் போடுவார்கள்
2. மாநாடு வெற்றிகரமாக நடந்ததிற்காக தனக்குத்தானே பாராட்டு விழா நடத்துவார்கள்.
3. தீர்மானத்தை எப்படி நிறைவேற்றுவது என்று அமைச்சரவை கூட்டம் நடத்துவார்கள்.
4. கூட்டத்தின் முடிவில் இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது என்று தீர்மானம் போடுவார்கள்.
5. இல்லை என்றால் கொடநாட்டிற்கு ஒய்வு எடுக்க செல்வார்கள்

Murugiah Velalagan