கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 4 ஏப்ரல், 2009

எழுத்து அசை சீர்படுத்துவோம்


**அறத்துப்பால் - பாயிரவியல் - முதற்பகவன் வழுத்து**

அகர முதல எழுத்தெல்லா - மாதி
பகவன் முதற்றே யுலகு.
*
இவற்றை பிரித்துப் பார்ப்போம்.
*
அக/ர முத/ல எழுத்/தெல்/லா - மா/தி
பக/வன் முதற்/றே யுலகு
**
இனி அசைப்படுத்துவோம்.
நிரைநேர் நிரைநேர் நிரைநேர்நேர் - நேர்நேர்
நிரைநேர் நிரைநேர் பிறப்பு
**
இனிச் சீர்படுத்துவோம்
புளிமா புளிமா புளிமாங்காய் - தேமா
புளிமா புளிமா பிறப்பு(குற்றியலுகரம்).
*
:)உரை
எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகவுடையன;உலகு ஆதிபகவன் முதற்று- அது போல உலகம் முதற்பகவனை முதலாக வுடையது. உரை _தேவநேயப் பாவாணர்.(திருக்குறள் தமிழ் மரபுரை 1)



கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்
*
கற்/றத/னா லா/ய பய/னென்/கொல் வா/லறி/வ
னற்/றா டொழா/அ ரெனின்
**
நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நிரைநேர்
நேர்நேர் நிரைநேர் மலர்
**
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
தேமா புளிமா மலர்
:)உரை
வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்;கற்றதனால் ஆயபயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக் கல்வியால் உண்டான பயன் யாதாம்?




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
*
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் நாள்
*
நிரைநிரை நேர்நிரை நேர்நிரை நேர்நேர்
நிரைநிரை நேர்நிரை நேர்
*
கருவிளம் கூவிளம் கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் நாள்
*
:)உரை
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் - அடியாரின் உள்ளத் தாமரை மலரின்கண்ணே அவர் நினைந்தமட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்;நிலமிசை நீடு வாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார்.
**



வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில
*
வேண்/டுதல்/வேண் டா/மை யிலா/னடி சேர்ந்/தார்க்
கியாண்/டு மிடும்/பை யில
*
நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
நிரைநேர் நிரைநேர் மலர்
*
கூவிளங்காய் தேமா கருவிளம் தேமா
புளிமா புளிமா மலர்
*
:)உரை
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல - எங்கும் எக்காலத்தும் துன்பமில்லை.

**



இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
*
இருள்/சே ரிரு/வினை/யுஞ் சே/ரா விறை/வன்
பொருள்/சேர் புகழ்/புரிந்/தார் மாட்டு.
*
அசை வாய்பாடு
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நிரைநேர் நிரைநிரைநேர் (மாட்டு)
*
சீர் வாய்பாடு
புளிமா கருவிளங்காய் தேமா புளிமா
புளிமா கருவிளங்காய் காஃசு
**
:)உரை
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இருவினையும் இல்லாதனவாகும்.


பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
*
பொறி/வா/யி லைந்/தவித்/தான் பொய்/தீ ரொழுக்/க
நெறி/நின்/றார் நீ/டுவாழ் வார்.
*
அசை வாய்பாடு
நிரைநேர்நேர் நேர்நிரைநேர் நேர்நேர் நிரைநேர்
நிரைநேர்நேர் நேர்நிரை (வார்).
*
சீர் வாய்பாடு
புளிமாகாய் கூவிளங்காய் தேமா புளிமா
புளிமாகாய் கூவிளம் நாள்
*
:)உரை
பொறிவாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக் கொண்ட ஐவகை யாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்க நெறியில் ஒழுகினவர்; நீடுவாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.
**


தன‌க்குவமை இல்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது.
*
தன‌க்/குவ/மை இல்/லா/தான் றாள்/சேர்ந்/தார்க் கல்/லால்
மனக்/கவ/லை மாற்/ற லரிது.
*
அசை வாய்பாடு
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநிரைநேர் நேர்நேர் பிறப்பு.
*
சீர் வாய்பாடு
கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
கருவிளங்காய் தேமா பிறப்பு.
*
(இ.ரை)தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின் கண் நிகழுந் துன்பங்கலையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.
**


அறவாழி யந்தனன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது.
*
அற/வா/ழி யந்/தனன் றாள்/சேர்ந்/தார்க் கல்/லாற்
பிற/வாழி நீந்/த லரிது.
*
அசை வாய்பாடு
நிரைநேர்நேர் நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நேர்
நிரைநேர் நேர்நேர் (லரிது)
*
சீர் வாய்பாடு
புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய் தேமா
புளிமா தேமா பிறப்பு
*
உரை:
அற ஆழி யந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்தாருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும்.
**

__தேவநேயப்பாவாணர் (திருக்குறள் தமிழ் மரபுரை 1).