கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 24 ஜூலை, 2014

தமிழீழ வான்படையும் போரில்

அன்றொரு நாள் செய்தி வானெங்கும் எட்டியது.தமிழீழ விடுதலைப்புலிகள் போர்விண்ணூர்தி வைத்திருக்கிறார்கள் என்றும்  இனி வான்படையும் போரில் பயன்படுத்தப்படும் என்றும் அறிந்த   உலகதமிழினத்துக்குத் தித்திக்கும் செய்தியாகவே இருந்தது.ஆனால் உலக வல்லரசு நாடுகளுக்கு பெருங்கசப்பாகவே அமைந்து  இருந்தது.தாங்கள் சிறிலங்காவை நம்பி விதைத்த முதலாளித்துவ முதலீட்டுகளுக்குப் பெரும் பாதிப்பைக் கொடுத்துவிடும் என்பதே அக்கசப்பு.

தமிழீழ வான்படையும் அவ்வாறே முதலாளித்துவ பொருளீட்ட தளங்களை தாக்கத்தொடங்கி சிறிலங்காவின் கொட்டத்தை அடக்கத் தொடங்கியது. அருகில் அமர்ந்திருந்த பெருவீரர் மெல்லமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவர் காலடியில் சரணடைந்தார் சிறிலங்காவின் சனாதிபதி.

சதுரங்க ஆட்டம் தொடங்கியது. ஐநா நாயகத்தை மட்டுமல்ல அவரை இயக்கும் பொறுப்பில் இருக்கும்(R to P) நபரையும் விலைபேசி வாங்கிக்கொண்டு முப்பதாண்டு ஆய்தப்போரை எழுபதாண்டு அரசியற்போரை முடிவுக்குக் கொண்டுவருகிறார் பெருவீரர். கழுத்தறுப்பு,கருவறுப்பு,தாலிகொடியறுப்பு என மூக்கறுப்பு பயங்கரவாதப்போர் அரங்கேறி முள்ளிக்கரை இரத்த ஆறானது. சிங்களக் கலிங்கருக்கு இலங்கை முழுவதும் வந்தமாதிரி தமிழர் ஏதிலிகள் ஆனமாதிரி?

எல்லாப்போரும் வெற்றியில் முடிவடைவதில்லை. ஆனால் இலக்குத் தவறாமல் பயணிப்பது தான் போராளிகளுக்கு உகந்தது.
அன்றொருநாள் இப்படியான போர்மூட்டம் ஐரோப்பாவை மூடியிருந்தது. ஐநாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கிட்லர் தன்னாளுமையைத் தொடங்கினார். இங்கிலாந்து கிட்லரோடு போரிட்டிருந்த காலத்தில் கிட்லர் படை நோர்வேநாட்டையும் கைப்பற்றியது. நோர்வே நாட்டுப்போராளிகள் ஆங்காங்கே மறைந்திருந்து தாக்கத்தொடங்கி வெற்றியும் கண்டனர் தோல்வியும் அடைந்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு இங்கியாந்தில் இருந்து படைவீரர்கள் அனுப்பப்பட்டர் அவர்கள் என்னவானார்கள்?
ஆம்,
வீரரைத்தேடி..........
எங்கள் பயணம் தொடங்குகிறது. இன்றிருக்கும் விண்ணூர்தி நிலையத்துக்கு அருகாமையில் அதிர்ச்சியூட்டும் செய்தி காத்திருந்தது.போர்விண்ணூர்தி படப்பிடிப்பில் ஈடுபடத் தொடங்கினோம்.எங்கெல்லாமோ உதிரிபாகங்களை வாங்கி உலங்கு வானூர்தி செய்து வெள்ளிக்குத்துவிளக்கைத் தேசியத்தலைவர் ஏற்றிவைத்து வான்படைப் பொறுப்பாளர் கேணல் சங்கரின் தலைமையில் வெள்ளோட்டம் நடத்தி   வெறிபெற்று அடித்த கட்டத்துக்கு அறிவியல் அறிவை நகர்த்தி போர் விண்னூர்தி விடுதலைப்புலிகள் செலுத்தியும் காட்டினார்கள்    என்று என் பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்திக் கொண்டு  படமெடுத்தம்
நோர்வே நாட்டு போரூர்தியைப் பாருங்கள்.


இன்னும் சில ஊர்திகளை படம்பிடித்து மகிழ்ந்தேம்.




இப்படியாக அந்த சுற்றுவட்டாரத்தைப் பார்வையிட்டோம் அங்குதான் அந்த படிமத்தைப் பார்த்து மகிழ்ந்தோம் "செய் அல்லது செத்துமடி" என்ற கூற்றுக்கு அமைய அப்படிமக்கல் நல்லதொரு பாடத்தை நமக்காக விளக்கியது. என்மக்கள் அவ்வரலாற்றைப் படிக்கும் போழ்து மகிழ்வாய் இருந்தது.


மக்களின் அமைதிக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து மாவீரருக்கும் தமிழாசான் பதிவேடும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.









செவ்வாய், 22 ஜூலை, 2014

வடநாட்டு மென்முழவு


இணைவலையில் தேடித்தேடி அருமையன ஆசானைக் கண்டறிந்தேன். இவர் பரம்பரை சிந்துவெளிக்கு உரித்தானவர்கள். இந்தியத்தின் விடுதலைக்காக போராடி தூக்கு மேடையேறிய பலருள் பகவத்சிங் மதிக்கத்தக்கவர். அவர் மரபினனிடம் இசைபயில்வதைப் பெருமையாகக் கொள்கிறேன். தபேலாவெனும் வடநாட்டு மென்முழவைக் கற்பிப்பதில் மிகச்சிறந்த ஆசானாக இவரை யான் கலையுகத்துக்கு அடையாளப்படுத்துவதில் பெருமையும் அடைகிறேன்.இந்திராகாந்தியின் வலகரத்தால் ஈழத்தில் வளர்க்கப்பட்ட ஒரு போராளிக்குழுவால் சீக்கியப் பேராளிகள் பெற்கோயிலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்காக ஈழவனாக யான் வெட்கப்படுகிறேன். சீக்கியர்கள் சிறப்புடன் வாழ்ந்து தம் தேசியத்தை மீட்கவேண்டுகிறேன்.