கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 27 நவம்பர், 2014

மாவீரர் நாள் 2014

Tube tamil

இவ்வாண்டும் மாவீரர் எழுச்சி நினைவேந்தல் வடதுருவமாம் நோர்வேயிலும் நடைபெறுகிறது.பெருந்தொகையில் இளவல்கள் கலந்து கொண்டு நினைவேந்தலுக்கான முன்னேற்பாடுகளை இன்று விடியும் வரை செய்து விடைபெற்றார்கள்.ஆயிரம் ஆயிரம் வேங்களின்முதல் வித்தான 2ம் இலெப்டினன் சங்கர் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட 6:05க்கு மணிஒலித்து நினைவுச்சுடர் ஏற்றுவிக்கப்படும்.எங்கு தமிழர் வாழ்ந்தாலும் இந்நாளில் உருகிநிற்பார்கள்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

அடைக்கலம் தந்த வீடுகள்

தாயகமீட்புப்போரில் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து அரும்பணியாற்றினார்கள். அதனால் துணைப்படை என்றும் எல்லைப்படையென்றும் விரிவாக்கம் பெறுவதற்கு விழிப்புக்குழு மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டதை யாரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. மூத்தோரின் பங்களிப்பு என்பது விடுதலைக்கு எந்தளவு முக்கியம் என்பதை பல கட்டங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்ரன. கழற்றிக்கொடுத்த தங்கத்தில் இருந்து தங்கள் பிள்ளைகளை இயக்கத்துக்கு அனுப்பும் வரை எத்தனை தியாகங்கள்.எத்துணை அர்ப்பணிப்புகள் எத்தனை இழப்புகள். அகிம்சைக்கு உயிர்கொடுத்த அன்னை பூபதியில் இருந்து இயக்க வலிமைக்கு தன் குலத்தையே கொடுத்த வைத்திலிங்கம் இலக்குமி அம்மை வரை எத்தனை தாய்மார்.இராணுவத்தை கையோடு பிடிக்கும் வேளை அவன் குண்டைக் கழற்றி வெடிக்க வைக்கும் வரை உடும்புப்பிடி பிடித்த உழவனின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் எத்தகைய அளப்பரியது.முதல் மகன் மாவீரன் இரண்டாவது மகன் மாவீரன் மூன்றாவது மகனின் வித்துடலைக்கண்ட தாய் நான்காவது மகனும் தனக்குண்டு என போராளின் கையில் கொடுத்து விழவிழத் தருவேன் என்ற வீரத்தை எவரால் அளவிட முடியும். அந்த தியாகிகளின் வரிசையில் சோதியாச்சியையும் காண்க!
சோதியாச்சி
வரமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டு காங்கேயன் துறையை புகுந்த வீடாகக் கொண்டு செழிப்புற்று வாழ்ந்தவர் தாம் சோதியாச்சி.விடுதலைப் புலிகளின் தலைவர் மேதவத்திரு வே. பிரபாகரன் அவர்களின் வழிகாடலே சரியென்று வாழ்ந்தவர்.எத்தனையோ இன்னலுக்கு மத்தியில் போராளிகளைக் காத்து வளப்பதில் அக்கறையாக இருந்தார். அவருடைய மகன்களில் கடைசிமகன் இயக்க உறுப்பினராகவே செயற்பட்டவர்.சோதியாச்சி கொண்ட பற்றைப் பற்றி புலிப்போராளிகள் வன்னியில் பாசறையில் இருந்து நகைச்சுவையாகப் பேசுவர்.அந்த அளவுக்கு சோதியாச்சியின் வீரமும் விவேகமும் சிறப்பானவை.ஒருநாள்,
இந்திய இராணுவ முற்றுகை நிகழ்ந்தது.அக்கணம் ஒரு போராளி சோதியாச்சி வீட்டுக்கு வந்திருந்த வேளை அம்முற்றுகை இடம் பெற்றது. அடுத்த வீட்டில் இருந்து சோதியாச்சி வீட்டுக்கு வருவதற்கு வேலிக்கூடாக கடந்து கொண்டு வரப்போவதை ஊகித்துக்கொண்ட ஆச்சி அப்போராளியைக் காப்பாற்ற தன் ஏடலின் திறனால் அப்போராளியைக் காப்பாற்றினார். காப்பாற்றுப்பட்ட போராளி வெளியே வந்து "தும்மல் வந்ததனை வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு தாக்குப்பிடிக்க பெரும் பாடாய்ப் போய்விட்டது என்று சிரிக்கவும், இந்தா பிள்ளை சயனைட்டு ஆமியைக்கண்டு ஒன்றும் தெரியாமல் கடிச்சுப்போடாதைங்கோ பிள்ளையள் இறுதிவரைக்கும் போராடுங்கோ" என்று அறிவுரையும் வழங்கினார்.
அந்த அளவுக்கு ஆச்சியின் துணிச்சல் அபாரமானது. எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் ஆமிக்காரனை வெளியேற்றினால் தான் எங்கள் பிள்ளைகள் நலமாக வாழ்வார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை சோதியாசிக்கு என்று உடன் போராளிக்குச் சொல்லி படிப்பிப்பது தளபதிகளின் கடமையாக்வும் இருந்தது.
சோதியாச்சி வேறுயாருமில்லை மூத்த போராளிகளில் ஒருவரான பிலிப்பு அவர்களின் தாயாவார். பிலிப்பு அவர்கள் மன்னார் மாவட்ட தளபதிகளோடு தளபதியாக பல களங்களில் வெற்றியீட்டியவர்.பன்றிக்குட்டியைத் தாட்டு வைத்துவிட்டு அயலில் இருந்த உறவுகளை வேறிடங்களுக்கு அனுப்பிவிட்டு வரும் போது காந்த்திருந்த இராணுவம் சரிமாரியாகச் சுட்டதில் பிலிப்பப்பாவும் அவருடன் இருந்த இருபோராளிகளும் அத்தலத்திலேயே வீரச்சாவைத்தழுவிக்கொண்டனர். அந்த வீர மகவைக் கருவில் சுமந்த தாயின் பணியும் அளப்பரியதாகவே இருந்தது.ஆச்சியின் மூத்த மகளின் கடைசிமகனும் தன்னை போராட்டக் களத்தில் அர்ப்பணித்து ஈழத்தின் துயரைக் களையும் வேவுப்பணிப் போராளியாக தன்னை இணைத்துக் கொண்டு வீரம் செறிந்த களங்களுக்கு வழிகாட்டியாகவும் சென்று பல சாதனைகள் புரிந்தார் கலையரசன் என்னும் மேஜர் நிலையில் உள்ள போராளி. தேசியத்தலைவரிடம் விருதையும் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டனன்.
கலையரசன்
போரியலைக் கற்றுக்கொடுக்கும் லெப்.கேணல் சசி அவர்களிடம் கூட இருந்து போரியல் வலகரங்களைக் கற்றுக்கொண்டான்.தனது ஐயப்பாடுகளைக் கேட்டு தன்னுறுதியை வளர்த்துக்கொண்டான்.வேவுப்பணி முடிந்ததும் அதைச் சேகரித்து பால்ராஜிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஆசான் சசியிடம் சென்று அறிவுரைகளைக் கேட்டுக்கொள்வான்.வேவுப்பணியின் போது எதிரியவன் பாசறைக்குள் நின்று கொண்டே அவர்கள் தாகத்துக்கு தண்ணீர் வார்த்தான். திரும்பி வரும் போது அவர்கள் சாப்பாட்டுக் கோப்பையைக் கொண்டு வந்து விடுவான். நெடுநேரம் எதிரி பாசறைக்குள்ளேயே அவன் துணிச்சலோடு நடைபோட்டான். எல்லாம் பேத்தி சோதியாச்சி கொடுத்த துணிவுதான்.தமிழீழப் போராட்டத்துக்காக முப்பது ஆண்டுகள் மூன்று தலைமுறை துணிச்சலோடு போராடி ஐ.நாவிடம் தமிழரின் தாயகத்தின் தாகத்தை ஒப்படைத்திருக்கிறது.அடுத்த தலைமுறையான ஈழநிலாவும் களமிறங்குகிறாள்.
தவளைப்பாய்ச்சல் வேவுப்பணி வெற்றியின் பின் பரிசளிப்பு வழங்கப்பட்டது.


சனி, 4 அக்டோபர், 2014

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


ஈழத்தின் அமைதிக்காக!!!!!!!!!

உன்னிடத்தில்
எது நல்லதோ
அதைக் கொடு
என்றான் வள்ளுவன்
எந்தை எந்தம்பி
சிவகுமாரனை
தமிழரசனாய்
ஈழத்துக்குக்
கொடுத்தார்
எம் தலைவனோ
இளைய மகன்
பாலச்சந்திரனையும்
ஈழத்தின் அமைதிக்காக
ஈய்ந்தார்!
- தமிழரசி -



புதன், 6 ஆகஸ்ட், 2014

இலண்டன் சுற்றுச்செலவு

இலண்டனில் விடுமுறை
இலண்டன் சுற்றுச்செலவு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இரண்டு ஏழல்கள் எம் நண்பரின் வீட்டில் தங்கி சுற்றுச்செலவைக் கழித்தோம். ஓசுலோ விண்ணூர்தி நிலையத்தில் ஏறி கெற்விக்கு என்னும் பிரித்தானிய நாட்டில் உள்ள விண்ணூர்தி நிலையத்தில் இறங்கி விக்ரோறியா தொடருந்து வண்டியை எடுத்து விக்ரோறியா சென்றடைந்தோம். அங்கிருந்து குகைவண்டியை எடுத்து சில நிலையங்களை அடைந்து இறுதியாக தென்கறோ என்னும் இடத்தை அடைந்து அங்குள்ள பூங்காவுக்குச் சென்று ஓய்வெடுத்து சில படங்களை நிழல்களை பிடித்துக் கொண்டு வீட்டை அடைந்தோம்.

விலங்ககம்
விக்ரோறியா பிராந்தியத்தில் உள்ள விலங்ககத்துக்குச் சென்றுள்ளோம்.அங்கு சில விலங்குகளை பார்வையுற்றோம் முதலாவதாக புலிகளை வளர்க்கும் பகுதிக்குச் சென்றிருந்தோம்.யாமும் எம்மக்களும் பார்வையுற்று மகிழ்ந்தோம்.புலிகளைப் பார்வையிட்ட போழ்து நம் தமிழீழ விடுதலைப் புலிகள் எம் நினைவில் வந்து போந்தார். தொடர்ந்து குரங்குகள் உள்ள பகுதிக்குச் சென்றிந்தோம். அங்கு மனிதக் குரங்குகளையும்  மந்திக்குரங்குகளையும் ஒரு குருளையையும் கண்டு மகிழ்ந்தோம் . குரங்குகளை பார்த்த போழ்து. புலம்பெயர் தமிழர் நினைவில் வந்து போந்தனர். அதில் ஒரு காட்சி எம் மகவைத் தழுவியது. குருளையை மற்றைய மந்திகளில் இருந்து விலக்கி தம் மார்பில் தழுவி வேரொரு இடத்தில் விடவும் அவருக்கு மகிழ்வை ஏற்படுத்தியது. அவர் வியந்து சொன்னார் எம்மைப்போல நடந்து கொள்கிறதே! ஆகா என்னே அருமை. தொடர்ந்து ஒட்டகங்கள், முயல்கள், வடதுருவ வரையாடுகள்,வளர்ப்பு ஆடுகள்,தீக்கோழிகள்,கங்காருகள்,விதவிதமான பறவைகள் பலவித மீன்வகைகள் நாகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், மரைகள்,காட்டுப்பஃறிகள், நீர்யானை என பலதையும் பார்த்து விட்டு குகைஓவியத்தையும் பார்வையிட்டுக்கொண்டு உணவையுண்ண ஓரிடத்தில் அமர்ந்தோம்.

சிறைபட்ட விலங்குகள் உள்ளேயும் வெளியேயும்

அங்கிருந்து ஓய்வெடுத்துகொண்டு சிலவிடங்களைப் பார்வையிட்டோம் அங்கு அரிமாவை காணமுடியவில்லை.ஆனால் அரிமாக்களின் படிமங்களை விலங்ககத்துக்கு வெளியே பாவையிடக்கூடியதாக இருந்தது.இறுதியாக பென்குவின்களின் நீச்சல் விளையாட்டுகளைப் பார்வையிட்டுவிட்டு குகைவண்டியில் வீடு திரும்பினோம்.

கடற்கரைச் சுற்றுலா
ஞாயிறு காலை பேருந்தை வாடைக்குக்குப் பிடித்துக்கொண்டு சென்றோம்.ஒரு குடும்பத்துக்குத் தலா 45 பவுண்டு செலுத்தினோம். பின்னர் பேருந்து ஓட்டுனருக்கு எல்லோருமாக 50 பவுண்டு வழங்கினோம்.காலை எட்டுமணிக்குத் தொடங்கிய பயணம் சுமார் பதினாறு மணித்தியாலங்கள் செலவு செய்து சுற்றுச் செலவை நிறைவு செய்தோம். சுற்றுச்செலவில் எம் மனம் குளிர்ச்சி பெற்றது. காலை எட்டு மணிக்கு எம் நண்பர் மணி அவர்களோடு சிற்றூர்தியிற் சென்று சில நிமையங்களின் பின்னர் பேருந்து வந்தடைந்தது.வெறும் சுற்றுலாவாக யாம் அதைப் பார்க்கவில்லை பேருந்து எம் தாய நினைவுகளை நெஞ்சில் ஏற்றியிருந்தது.கறுப்பின தேசியத்துக்காகப் போராடிய உலக அமைதித்தூதர் நெல்சன் மண்டேலா அவர்களின் திருவுருவப் படத்தோடு தமிழ்த்தேசியத்துக்காகப் போராடிய தேரியத்தலைவர் வேங்கடம் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் அவர்களின் படத்தையும் இணைத்து இதயத்தினுள் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்த படமும் இன ஒழிப்பைச் செய்து முடித்துவிட்டு இறுமாப்புடன் இலங்கையெங்குமல்ல உலகெங்கும் வலம் வரும் சிங்களத்தேசியத் தலைவர் இரசபட்சே செய்து முடித்த போரில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆங்கில ஊடகங்களையும் உலுக்கிப் போட்டிருந்தது. அப்படக்காட்சியைச் சித்தரிக்கும் படமும் நெஞ்சத்தில் வலியைக் கொடுத்திருந்தது.தமிழீழத் தேசியப்பூவான கார்த்திகைப்பூ பிரித்தாளும் பிரித்தானியத் தேசியப்பூவும் தனிநாடு கோரும் தமிழீழத்தின் படமும் நாம் சென்றிருந்த பேருந்தில் இலக்காகப்பொறிக்கப்பட்டிருந்தது.
நிம்மி என்ற நண்பரின் ஏற்பாட்டில் அமைந்திருந்த அச்சுற்றுச்செலவு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்வையும் கொடுத்திருந்தது. பேருந்து ஓட்டுனர் சாலை விதிகளுக்கு அமைய பேருந்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். சாலை ஓரங்கள் பிரித்தானியரின் வாழ்வைச் சுட்டிக்  காட்டிக்கொண்டே வந்தது.மரக்கூடல்கள் தோட்டம் துறவுகள் வயல்கள் அத்தோடு சில குதிரைகளையும் கண்டு மகிழ்ந்தோம். பேருந்துக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் குடி கடி நகைச்சுவையென மிகவும் நன்றாக இருந்தது. ஆண்களும் பெண்களும் நகைச்சுவை உணர்வூள்ளவர்களாக இருந்தனர்.நண்பர்கள் மணி,சாமி,குரு, காந்தனோடு இன்னும் சில நண்பரும் இணைந்து அருமையாகப் பாடி கலகலப்பாக இருந்தார்கள்.
சேமைக்குப்பின் பேருந்து கடற்கரையைரைச் சென்றடைந்தது.அக்கடலின் பெயரைத் தடாகம் என அழைக்கலாம்.பேருந்திலிருந்து இறங்கி பொருள்களை சரிபார்த்து இறக்கிவிட்டு அனைவருமாக குளிக்குமிடத்தை அடைந்தோம். பெருவாரியான மக்கள் அங்கே திரண்டிருந்தனர். சிறுசிறு கூடாரங்களமைத்தும் இறைச்சிகளைச்சுட்டும் நீந்திக்கொண்டும் இன்னும் சிலர் விளையாடிக்கொண்டும் இருந்தனர். நாமும் ஓரிடத்தைப் புதருக்கருகில் எடுத்து அமர்ந்தோம். குளிப்பவர் குளிக்க சுட்ட இறைச்சியைக் கொறிப்பவர் கொறிக்க பாடுவோர் பாட வெள்ளைமணலில் மனமோடிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே படங்களையும் பிடித்த வண்ணம் உலாவித்திரிந்தோம். எம் பிள்ளைகள் நீச்சலடித்து விளையாடுவதையும் பார்த்து மகிழ்ந்தோம். எல்லோரையும் கவனித்தபடி கடற்கரை காவற்பணியினர் அவசர விசைப்படகுகளைக்கடலில் நிறுத்தியபடி கண்ணுக்குள் எண்ணையை விட்டுக்கொண்டு நின்றார்கள். காந்தனின் மகள் திடீரென எம்மை விட்டு நீங்கியிருந்தாள். அவளைத் தேடி எல்லோரும் அலைந்து இறுதியில் மணியின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். காவற்பணியினர் அச்சிறுமியைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அச்சுட்டிபெண் தானாகவே அவரிடம் சென்று முறைப்பாடு செய்திருந்தாள். அவளுடைய அகவை எட்டோ ஒன்பதோ தெரியவில்லை. அவள் காந்தனைப்போலவே தான் இருந்தாள். அவளைக் கண்டபின்புதான் மனநிறைவாக இருந்தது. கடற்குளிப்பும் பந்துவிளையாட்டும் மணற்குளிப்பும் மீண்டும் நீராடலுமென அமைந்திருந்தது. அங்கு எம்தேசியத்தாரைக் காணக்கூடியதாக இருந்தது. அங்கிருந்து அந்தி சாய்ந்து இரவாகும் வேளை மீண்டும் இலண்டன் நோக்கிப் புறப்பட்டுச் சில நேரம் ஓய்வெடுத்து பின் மாநகரை வந்தடைந்தோம்.


உப்புநீரிற் குளித்தாலும் உவப்பாகத்தான் இருந்தது சுற்றுலா

இயற்பியல் காட்சியகம்
எந்தப் பண ஈட்டத்தையும் எதிர்பாராமல் அவ்வருங்காட்சியகம் இயங்குகிறது. அங்கே நீண்ட தொன்மா உயரியான தினோசரின் எலும்புகளால் கோர்க்கப்பட்ட உருவம் வரவேற்பு மண்டபத்தில் காணப்பது.அதைத் தொடர்ந்து மானுடத்தின் மாற்றத்தைக் காணப் புறப்பட்ட மேதை இடார்வின் படிமத்துக்கு அருகில் நின்று நிழல்பிடித்தோம். அதைத் தொடந்து பலவாண்டுகளாய் வாழ்ந்த மரத்தின் அடித்தோற்றத்தைப் பார்வையுற்றோம் சித்தார்த்தரான புத்தரின் காலத்துக்கு முற்பட்ட காலத்தை அம்மரம் படம் பிடித்துக் காட்டியது. அதை யாமும் பிள்ளைகளும் பார்த்து உவந்தோம். ஆசிய நாடுகளுள் பல நாடுகள் வள்ளுவர் காலத்துக்கு முன்பிருந்தே வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. சிறப்பாக தமிழம் (இன்றைய இந்தியாவையும், பாக்கித்தானையும்,அப்கானித்தானையும்,இலங்கையையும்,பழநீர் தீவுகளையும் உள்ளடக்கியவை)சீனாவோடும் மொங்கோலியாவோடும் சப்பானோடும் வியத்னாமோடும் தாய்லாந்தோடும் தொடர்பு கொண்டிருந்தமை தமிழ வணிக எழுச்சிக்கு எடுத்துக்காட்டாகும். ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னர் தேயிலையை சீனத்திலிருந்து இந்தியா இலங்கைக்குக் கொண்டுசென்று அதன் உற்பத்திப் பெருக்கத்துக்கு ஊக்கமளித்த பெருமகனாரையும் பார்த்து பிள்ளைகள் மகிழ்ந்தார்கள். அதன் பின் தொன்மா உயிரியான அமையின் திருவுருவத்தையும் அந்த ஆமையின் வரலாற்றைக் கண்டறிந்த பெருமாடியையும்  மூடப்பட்டிருந்த நூலகத்தையும் ஓரக்கண்ணாடியால் பார்த்துவிட்டு அங்குள்ள சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று நீர்போத்தலை விலைக்கு வாங்கி நீர் அருந்தி விட்டு மீண்டும் பார்வையிட்டோம்.அச்சயன், தாரகன், பாவலன், கோவேரன் இவர்களோடு யானும் மிகக்குதூகலமாக இருந்தோம். அருங்காட்சியத்தில் நினைவுப்பொருள்களும் விற்கப்பட்டன. அதில் மகன் தாரகன் விண்கோள்கள் அடங்கியதும்  அச்சயன் காட்டு விலங்கு பற்றியதுமான  மூபக்கத்திரைகளை வாங்கிக்கொண்டனர்.அதன் பின்னர் உலக மாற்றம்  பற்றி விவரிக்கும் இடத்துக்கும் சென்று பூகோள மாற்றத்தையும் தெரிந்து கொண்டோம். அத்தோடு பறவைகள் பற்றியும் பார்த்து வியந்தோம். என்ன வியப்பு உலகத்தில் எத்தனை பறவைகள் எத்தகைய வியத்தகு வண்ணங்களிலான சிட்டுக்குருவிகள். இன்று உலகத்தில் அழிந்து கொண்டிருக்கும் பறவைகள் பெருந்தொகையாம். என்னே வியப்பு ஒவ்வோரு குருவிகளுக்குமிடையில் எத்தகைய திறமைகள் பொதிந்த அறிவிலான கூடுகள் ஓவ்வொரு கூடுகளும் வெவ்வேறு அழகுடனான செயற்பாடுகள்.எல்லாவற்றையும் நிறைவாகப் பார்வையிட்டுக் கொண்டு சப்பானுக்குச் சென்றோம்.என்ன மிரண்டுவிட்டீகளா? ஆம் நாமும் கூடத்தான். நிலநடுக்கம் எப்படி வருகிறது என்றும் அதை எப்படி சப்பானியர்கள் எதிர் கொள்கிறார்கள் என்பதையும் காட்ட நிலநடுக்க அறை ஒன்றை வடிவமைத்திருக்கும் அழகு மிக அழகானது. இறுதியாக மனிதர்கள், பூச்சிகள் ,விலங்குகள் நீர்வாழ் உயிரிகள் என அனைத்தினதும் புறத்தோற்ற மாற்றங்கள் பற்றிப் பார்த்து மகிழ்ந்தோம்.உண்மையிலேயே ஆங்கிலேயர்கள் அறிவானவகள் தான் என்பதை இவ்வருங்காட்டியத்தினூடாக அறிந்து கொண்டோம்.பல நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் முன்னேற்றங்களைப் படித்ததோடு எப்படி பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள்.

1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் பொது ஆங்கிலேய தளபதி இந்தியாவின் மிகபெரிய சொத்தான திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல் அது வெறும் மண்தான். ஆகவே அது நமக்கு தேவை இல்லைஎன்று கூறினாராம்..



வியாழன், 24 ஜூலை, 2014

தமிழீழ வான்படையும் போரில்

அன்றொரு நாள் செய்தி வானெங்கும் எட்டியது.தமிழீழ விடுதலைப்புலிகள் போர்விண்ணூர்தி வைத்திருக்கிறார்கள் என்றும்  இனி வான்படையும் போரில் பயன்படுத்தப்படும் என்றும் அறிந்த   உலகதமிழினத்துக்குத் தித்திக்கும் செய்தியாகவே இருந்தது.ஆனால் உலக வல்லரசு நாடுகளுக்கு பெருங்கசப்பாகவே அமைந்து  இருந்தது.தாங்கள் சிறிலங்காவை நம்பி விதைத்த முதலாளித்துவ முதலீட்டுகளுக்குப் பெரும் பாதிப்பைக் கொடுத்துவிடும் என்பதே அக்கசப்பு.

தமிழீழ வான்படையும் அவ்வாறே முதலாளித்துவ பொருளீட்ட தளங்களை தாக்கத்தொடங்கி சிறிலங்காவின் கொட்டத்தை அடக்கத் தொடங்கியது. அருகில் அமர்ந்திருந்த பெருவீரர் மெல்லமாகச் சிரித்துக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவர் காலடியில் சரணடைந்தார் சிறிலங்காவின் சனாதிபதி.

சதுரங்க ஆட்டம் தொடங்கியது. ஐநா நாயகத்தை மட்டுமல்ல அவரை இயக்கும் பொறுப்பில் இருக்கும்(R to P) நபரையும் விலைபேசி வாங்கிக்கொண்டு முப்பதாண்டு ஆய்தப்போரை எழுபதாண்டு அரசியற்போரை முடிவுக்குக் கொண்டுவருகிறார் பெருவீரர். கழுத்தறுப்பு,கருவறுப்பு,தாலிகொடியறுப்பு என மூக்கறுப்பு பயங்கரவாதப்போர் அரங்கேறி முள்ளிக்கரை இரத்த ஆறானது. சிங்களக் கலிங்கருக்கு இலங்கை முழுவதும் வந்தமாதிரி தமிழர் ஏதிலிகள் ஆனமாதிரி?

எல்லாப்போரும் வெற்றியில் முடிவடைவதில்லை. ஆனால் இலக்குத் தவறாமல் பயணிப்பது தான் போராளிகளுக்கு உகந்தது.
அன்றொருநாள் இப்படியான போர்மூட்டம் ஐரோப்பாவை மூடியிருந்தது. ஐநாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கிட்லர் தன்னாளுமையைத் தொடங்கினார். இங்கிலாந்து கிட்லரோடு போரிட்டிருந்த காலத்தில் கிட்லர் படை நோர்வேநாட்டையும் கைப்பற்றியது. நோர்வே நாட்டுப்போராளிகள் ஆங்காங்கே மறைந்திருந்து தாக்கத்தொடங்கி வெற்றியும் கண்டனர் தோல்வியும் அடைந்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு இங்கியாந்தில் இருந்து படைவீரர்கள் அனுப்பப்பட்டர் அவர்கள் என்னவானார்கள்?
ஆம்,
வீரரைத்தேடி..........
எங்கள் பயணம் தொடங்குகிறது. இன்றிருக்கும் விண்ணூர்தி நிலையத்துக்கு அருகாமையில் அதிர்ச்சியூட்டும் செய்தி காத்திருந்தது.போர்விண்ணூர்தி படப்பிடிப்பில் ஈடுபடத் தொடங்கினோம்.எங்கெல்லாமோ உதிரிபாகங்களை வாங்கி உலங்கு வானூர்தி செய்து வெள்ளிக்குத்துவிளக்கைத் தேசியத்தலைவர் ஏற்றிவைத்து வான்படைப் பொறுப்பாளர் கேணல் சங்கரின் தலைமையில் வெள்ளோட்டம் நடத்தி   வெறிபெற்று அடித்த கட்டத்துக்கு அறிவியல் அறிவை நகர்த்தி போர் விண்னூர்தி விடுதலைப்புலிகள் செலுத்தியும் காட்டினார்கள்    என்று என் பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்திக் கொண்டு  படமெடுத்தம்
நோர்வே நாட்டு போரூர்தியைப் பாருங்கள்.


இன்னும் சில ஊர்திகளை படம்பிடித்து மகிழ்ந்தேம்.




இப்படியாக அந்த சுற்றுவட்டாரத்தைப் பார்வையிட்டோம் அங்குதான் அந்த படிமத்தைப் பார்த்து மகிழ்ந்தோம் "செய் அல்லது செத்துமடி" என்ற கூற்றுக்கு அமைய அப்படிமக்கல் நல்லதொரு பாடத்தை நமக்காக விளக்கியது. என்மக்கள் அவ்வரலாற்றைப் படிக்கும் போழ்து மகிழ்வாய் இருந்தது.


மக்களின் அமைதிக்காகப் போராடி வீழ்ந்த அனைத்து மாவீரருக்கும் தமிழாசான் பதிவேடும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.









செவ்வாய், 22 ஜூலை, 2014

வடநாட்டு மென்முழவு


இணைவலையில் தேடித்தேடி அருமையன ஆசானைக் கண்டறிந்தேன். இவர் பரம்பரை சிந்துவெளிக்கு உரித்தானவர்கள். இந்தியத்தின் விடுதலைக்காக போராடி தூக்கு மேடையேறிய பலருள் பகவத்சிங் மதிக்கத்தக்கவர். அவர் மரபினனிடம் இசைபயில்வதைப் பெருமையாகக் கொள்கிறேன். தபேலாவெனும் வடநாட்டு மென்முழவைக் கற்பிப்பதில் மிகச்சிறந்த ஆசானாக இவரை யான் கலையுகத்துக்கு அடையாளப்படுத்துவதில் பெருமையும் அடைகிறேன்.இந்திராகாந்தியின் வலகரத்தால் ஈழத்தில் வளர்க்கப்பட்ட ஒரு போராளிக்குழுவால் சீக்கியப் பேராளிகள் பெற்கோயிலில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்காக ஈழவனாக யான் வெட்கப்படுகிறேன். சீக்கியர்கள் சிறப்புடன் வாழ்ந்து தம் தேசியத்தை மீட்கவேண்டுகிறேன்.










ஞாயிறு, 18 மே, 2014

தமிழ் இனஒழிப்பு

ஈழத்தமிழினத்தை ஒழித்து முடித்த நாளாக தனிச்சிங்கள நாடான சிறிலங்கா வெற்றியைக் கொண்டாடும் இந்நிலையில் தமிழினம் தன் உயிருக்கு உத்தரவாதத்துக்காக போராடிவருகிறது............
May 18



வெள்ளி, 16 மே, 2014

இருநூறாவது அகவையிலே!

Hipp Hipp Hura
http://en.wikipedia.org/wiki/File:Flag_of_Norway.svg
இருநூறாவது அகவையிலே நோர்வே நாட்டில் நாம். நோர்வே வாழ் மக்களுக்காக அவர் தம் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட சட்டமூலம் தொடங்கப்பட்டு இருநூறு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் பற்பல இடர்களுக்கு நடுவில் பற்பல இன்னல்களுக்கு நடுவில் இன்று வாழ்வியலில் முன்னுக்கு நிற்கும் நாடு நோர்வே எனலாம்.நோர்வே மக்களாட்சியில் முதன்மை எடுத்துக்காட்டான நாடு இல்லாத போதிலும் ஓரளவு மக்கள் நேயத்தோடு வாழும் வீடு அல்லது துறக்கம் எனலாம். அமைதி வேண்டியே நாம் இங்கு வந்துள்ளோம்.
http://en.wikipedia.org/wiki/Norway


சனி, 3 மே, 2014

இலைதுளிர்காலச் செலவு

ஓசுலோவிலிருந்து பேர்கன் வரை
Oslo to Bergen - Bergen to Oslo

திருவள்ளுவராண்டு ௨௰௪௫ எமது கால ஆண்டு 2014

ஓசுலோ நோர்வேயிலிருந்து பேர்கன் நகருக்கு சிற்றூர்தியில் மகன்களோடு சென்றிருந்தேம். கிட்டமட்ட ஐந்நூறு சதுரக்கல் சேய்மைவரை இச்செலவு அமைந்தது. பதினொரு மணிநேரப்பயணம் நிறைந்த பயனுள்ளதாக இருந்தது.நகரங்களையும் காடுகளையும் மலைகளையும் ஆறுகளையும் ஓடைகளையும் ஊர்திகளையும் கால்நடைகளையும் கட்டிடங்களையும் நகர்ந்து ஒரு வாழ்க்கைப்பயணம் நகர்வது போலும் நகர்ந்தது இலைதுளிர்கால விடுமுறை.
நல்ல காலநிலை நலமான வாழ்வோட்டம்.இரோவ்னரில்(Stovner) தொடங்கிய பயணம் திறம்மன்(Drammen) ஊடாக கடலோரச் சாலையூடாக ஒருமணி நேரத்திற்கு எழுபது, அறுபது,எண்பது என ஏ16 நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது எமது சிற்றூர்தி.
ஒருமணிநேரத்தில் முதலில் ஒரு குழுமச்சுற்றில் அடுத்த சாலையை(Rv7)
எடுத்தூஉர்ந்தோம்.அழகிய பண்ணைகளைக் கண்ட மகிழ்வு. ஓரங்களில் புற்கற்றைகளைக் கண்ண்டோம். வெள்ளை நிறத்திலான உறைஏந்துகளில் அடைக்கப்படு அவை அழகாக ஓரங்களில் காட்சியளித்தன.சற்று ஊர்ந்த பின் எரிபொருள் நிலையமொன்றில் ஓய்வெடுத்துக் கொண்டோம்.அங்கு இறைச்சிக் கலவைச் சுற்றை வாங்கி உண்டோம்.தற்பொழுதுள்ள காலத்தில் தான் மண்ணை உழுது கொண்டிருப்பர்.மேழமாத்தில் தான் விதைப்புக்கு அணியமாகி கொள்வர். இக்காலம் நோர்வே நாட்டுக்கு மங்கள மாதம் அதனால் தான் மஞ்சளால் முட்டைகளை அலங்கரித்துக் கொண்டு. சேவல்களும் கோழிகளுமே கேராக்கள்.மிகவும் மகிழ்வாக இருக்கும் காலம். இம்மாதத்தில் தான் புத்தாண்டு பிறப்பதாக நினைத்துக் கொள்வர். தமிழர் தையில் கதிரவனுக்கும் மகரத்தில் நிலவுக்குமாக இயற்கைக் கதிர்களுக்கு பெருவிழா எடுப்பர். இக்காலத்தை வேந்தனுக்குமுரிய நாளாகவும் கொண்டனர் என்பதே உண்மை.



இற்றைக்காலத்தில் நம் வாழ்நாளில் உள்ள தனி தொடர்மாடி வீடுகளின் தோற்றம்


 
ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நோர்வே மக்களின் குடியிருப்பு இது. இங்கு இவ்வகையான வீடுகள் இருக்கும் போழ்து நம் தாயகங்களில் இரவணன் பொன்னாலான முடியையுடைய அரண்மனையையும் அதன் பின்னதான கரிகாலன் கல்லணையையும் பெருங்கிள்ளியான அருண்மொழித்தேவன் பெருங்கோயிலையும் பல்லவர் காலத்தவனான நரசிம்மன் கற்சிலைத் தோட்டத்தையும் அமைத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்திருந்த தமிழகம் தமிழீழத்தின் இன்றைய தோற்றமும் இதுவே!

நீண்ட மலையகத்தில் கட்டடக்கைலையின் வரலாறே தனியானது அது பின்னர் தருவேம்.

இது வாடி வீடு . இதை வகைக்குப் பெற்றிருந்தோம் ஒரு நாளைக்கு நானும் பிள்ளைகளும் தங்குவதற்கு 790 குரோணர்கள் கட்டவேண்டும். 12 மணியிலிருந்து மறுநாள் 12 மணிவரையே இப்பணத்தினை அறவீடு செய்கின்றனர்.இப்படங்களை இறுதியாக வந்த தொழில்நுட்பம் கொண்டதான கையடக்க இயக்கி மூலம் இயற்கையை நிழல் பிடித்திருந்தோம். இப்படங்களுக்கு உரிமம் உள்ளவர்கள் சத்தியானந்தன் குடுப்பத்தினராகிய நாமே.
நோர்வே மலையகத்தின் கவினைக் காண்பவர் தம் மனைதைப் பறிகொடுத்துவிடுவர் என்பது திண்ணம்.
நன்றி
ச.உதயன்