கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2007

காலநிலை மாற்றம்



உலகதின் காலநிலை மாற்றத்தினால் பல அழிவுகளை கண்டங்களும் நாடுகளும் எதிர்கொள்ளப் போகின்றன என்பதை (Al Gore) தெரிவித்துள்ளார்.உலக அமைதிக்காக நோபல் பரிசினை (Al Gore) அவர்களுக்கு நோர்வே வழங்கியதில் உலக நாடுகளின் அரசியலாளர்களின் செவிகளுகளுக்கு சங்கை ஊதியிருக்கிறது. வெள்ளம் வருமுன்பே இலங்கையும் அணை கட்ட வில்லையென்றால் அழுது பயனில்லை.

காலநிலை மாற்றத்துக்கான கரணியங்கள்




  • சூரியக்கோளின் வெடிப்பு.

  • உலகத்தின் புதிய தொழில்நுட்பமும் கந்தகக்குண்டுகளும்.

  • உலகம் முதுமை அடைந்தநிலை

நாம் உலகத்தைக் காப்பாற்ற செய்யவேண்டியவை



  • உலகத்தில் உள்ள காடுகளை காப்பாற்றுதல்.

  • மரங்களை நாட்டுதல்.

  • போர்களை நடாத்தாமல் அமைதி வழியை கடைப்பிடித்தல்.

  • மாந்தநேயத்துக்காக பொது அமைப்புகள் கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தல்.

  • நிலங்களை பாதுகாத்தல்.

சனி, 15 டிசம்பர், 2007

இலகுதமிழில் இலக்கணம்

எழுத்துகளின் பிறப்பு என்பது யாது ?
எழுத்துகளை ஒலிக்கும்போது, உள்நின்ற காற்று விசையுடன் எழுவதால் ஒலியணுக்களின் கூட்டம் ஒலியாகச் செவியில் புலனாகிறது. இவ்வொலி மார்பு, கழுத்து, தலை, மூக்கு என்னும் இடங்களில் பொருந்தி நாக்கு, மேல்வாய், பல், உதடு ஆகியவற்றின் முயற்சி வேறுபாட்டால் வெவ்வேறு எழுத்துகளாக ஒலிக்கிறது. இதுவே எழுத்துகளின் பிறப்பாகும்.

எழுத்து பிறக்கும் இடங்கள் யாவை ?

எழுத்து கழுத்து, மூக்கு, மார்பு, தலை ஆகிய இடங்களில் பிறக்கின்றன.

எவ்வெவ்வுறுப்புகளின் முயற்சியால் எழுத்துகள் பிறக்கின்றன ?

மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய இடங்களில் பொருந்தி எழும் ஒலி, வாயைத் திறத்தல் , இதழைக் குவித்தல், நாவின் நுனி, அடிப்பகுதிகள் பற்களோடும், மேல்வாயிலும் பொருந்துதல், உதடுகள் ஒன்றொடொன்று பொருந்துதல் ஆகிய முயற்சியால் வெவ்வேறு எழுத்துகளாய்ப் பிறக்கின்றன.

கீழ்வருக் எழுத்துகள் எவ்விடத்தில் பிறக்கின்றன ?

ஆ-கழுத்து , ர-கழுத்து , ம-கழுத்து , க-மார்பு , ய- கழுத்து , ஐ- கழுத்து , ற-மார்பு, ந-மூக்கு

வணக்கம் தமிழ்

வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினை
கையினாலுரை காலம் இரிந்திட
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள் தலை கொண்டு பணிகுவாம்

______

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தந்றுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்;
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலைய ளமும்துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துவமே.

சதுர்மறையா ரியம்வருமுன் சாலுலகே நினதாயின்
முதுமொழிநீ முதலிலியா மொழிகுவதும் வியப்பாமே.

பத்துப்பாட் டெண்தொகையே பகுத்தறிந்து பற்றினவர்
எத்துணையும் பற்றுவரோ இலக்கணமில் பொய்க்கதையே.

வாள்ளுவர்செய் திருக்குறளை மறவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுமுதலா ஒருகுலத்துக் கொருநயனே.

- மனோன்மணீயம் - சுந்தரம்பிள்ளை

சனி, 1 டிசம்பர், 2007

திருவள்ளுவமாலை


குறளிங்கு கூறாத விடயமில்லை
குணம் காக்கும் நூலது போல் எதுவுமில்லை
அறம் நிறைந்த வாழ்வுதரும் பொய்யேயில்லை
அதை அறியாக் கல்வியெனில் பயனேயில்லை
ஆட்சிமுறை வாழ்க்கைநெறி அனைத்தும் கூறும்
அன்புவழி இன்பநிலை அதுவும் பேசும்
வீழ்ச்சியற்ற வாழ்வுபெற வழியைக் காட்டும்
விரும்பியதைக் கற்றுவிடு அறிவைத் தீட்டும்
தூவல்>பா.சிவபாலன்.(இலங்கை)

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன் அளாய்
மோந்தபின் யார்க்கும் தலைகுத்தில்; - காந்தி
மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர்முப் பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு

- மருத்துவன் தாமோதரனார் -

மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார் அன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்?

- சீத்தலைச் சாத்தனார் -

ஒன்றே பொருள் எனின் வேறுஎன்ப; வேறுஎனின்
அன்றுஎன்ப ஆறு சமயத்தார்; - நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

- கல்லாடர் -

அறம்பொருள் இன்பம்வீடு என்னும் அந்நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை; அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடை யார்.

- மாமூலனார் -

தானே முழுது உணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்றும் மற்று!

- நக்கீரர் -

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாண் அடியால்
ஞாலம் முழுதும் நயந்துஅலந்தான் - வால் அறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்
உள்ளுவஎல்லாம் அளந்தார் ஓர்த்து.

- பரணர் -

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனைஅளவு
வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

- கபிலர் -

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைத்து வள்ளுவனாய்த் தந்து உரைத்த - நூன்முறையை
வந்திக்க சென்னி; வாய் வாழ்த்துக; நல்நெஞ்சம்
சிந்திக்க; கேட்க செவி.

- உக்கிரப் பெருவழுதியார் -

திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு
உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க
உருத்திர சன்மர் என உரைத்து வானில்
ஒருக்கஓ என்றதுஓர் சொல்.

- அசரீரி -

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாற!பின்
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு.

- நாமள் -

என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும்
நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்பேன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

- இறையனார் -

சனி, 24 நவம்பர், 2007

'மொழிஞாயிறு' தேவநேயப்பாவாணர்


தென்மொழியும் ஆங்கிலமும் வடமொழியும் முற்றும்
செறிவான இலக்கியமும் இலக்கணமும் கற்றும்
பன்மொழியும் பழமொழியும் பல்காலும் ஆய்ந்தும்
பன்மொழிக்கு நன்மொழியாம் பைந்தமிழில் தோய்ந்தும்
தொன்மொழியின் சொற்பிறப்பை அடிவேரைக் காட்டி
தொடர்புடைய மொழி இனத்தை ஒப்பிட்டுக் காட்டி
முன்மொழிக்கும் முதன்மொழியாம் முத்தமிழ்தான் என்றே
முனைப்புடனே பாவாணர் முழக்கமிட்டார் நன்றே!

ஒரு சொல்லை கேட்டவுடன் ஓராயிரம் சொற்கள்
அருவியெனப் பொழிகின்ற அனைத்து மொழிப் பெருஞ்செல்வ
தாய்வாழ மருந்துண்ணும் சேய்போலும் வாழ்வுடையாய்
ஆய்தமிழுக் காட்பட்டோர் வாழ இனும் வழியில்லையோ
அமிழ்தாம் மொழிவளர அனைத்தையும்நீ தந்து யர்ந்தாய்
தமிழ்த்தாயின் தண்ணருளால் தழைத்தென்றும் வாழியவே.

- பாவாணர் மணிவிழாக்குழு, மதுரை -
குறைமதியார் தேக்கிவைத்த கறையிருளை
நீக்கவந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார்!
தன்மதிப்பின் கொடுமுடியாய், தன்னுரிமை முகில் இடியாய்,
ஆர்த்திலங்கு சீர்த்தியினார்!
நன்றி கொன்ற தமிழினத்தின் பன்றித் தனத்தால்
புகழ் மறைக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும் குமைந்த ஈகஎரி!
அமைந்தொளிரும் குடவிளக்கு!
மடமைத் தமிழரின் அடிமைத் தனத்தால்
மிடிமை வாய்ப்பட்ட கடமைக் காவலர்!
- முனைவர் மு. தமிழ்க்குடிமகன் -
மொழிக்கென்றே தோன்று மொழிமீட்பர் நங்கள்
மொழிக்கென்றே ஆராய்ந்த முப்பர் - மொழிக்கென்றே
ஈகியாய் வாழ்ந்த இனமானப் பாவாணர்
ஆகியாய் வாழ்வார் அரண்.
வேர்கண்டார் வேரின் விளக்கமும் தாம்கண்டார்
கூர்கொண்ட வேரின் குலம்கண்டார் - யார்கண்டார்
தொல்லாசன் சொல்லெல்லாம் தோய்பொருள என்றதனைச்
சொல்லரிய மெய்ப்பாய்ச் சொல.
_______
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
வாயிறு வண்டமிழ் வாழவாழ் நம்மொழி
ஞாயிறு போல்விளங்க லான்.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
எங்கணும் தங்கிய இன்றமிழ் நேயருள்
தங்கிய நேயரென்ன லான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
பூமலர்த் தேனெனப் பொங்கிய வேர்வளம்
தாமுறுபா வாணரென்ன லான்.
தீந்தமிழ் போற்றுதும் தீந்தமிழ் போற்றுதும்
ஏந்திய ஞால முதன்மொழி ஈதெனத்
தேர்ந்தமீட் பர்கிளர லான்.
- புலவர் இரா. இளங்குமரன் -
ஆர்த்தபகை வெல்லும் அணிகள் பலதந்து
சீர்த்த புகழ்நிறுத்தும் செந்தமிழர் பாவாணர்
கூர்த்த புலமையராய்க் கொள்கை அரிமாவாய்ப்
போர்த்த இருளகற்றும் பொற்கதிரோன் பாவாணர்
ஞால முதல்மொழி நந்தமிழெ என்றுரைத்தும்
மூலத் தமிழெ திரவிடைடின் தாயென்றும்
ஆரியத்தின் மூலம் அதுவே எனவுரைதும்
பூரியரின் வாயடைக்கப் பூட்டறைந்தார் பாவாணர்
தென்குமரிக் கண்டமதே மாந்தன் பிறந்தகமாம்
செந்தமிழும் ஆங்கே பிறந்ததென்றார் பாவாணர்
முன்னை மொழிகாக்க மூத்த குடிகாக்கத்
தன்னை அழித்த தகையாளர் பாவாணர்
செந்தமிழே வாழ்வாய்த் தகழ்ந்ததனால் பாவாணர்
நந்தமிழ்த் தாத்தா நவில்.
- முனைவர் ந. அரணமுறுவல் -

சனி, 10 நவம்பர், 2007

தமிழிலக்கிய வரலாறு

பழங்காலம்
*
கழக ( சங்க ) இலக்கியம்: கி.மு 500 முதல் கி.பி 200 வரையில் அகம் புறம் பற்றிய பாட்டுகள்.
*
அற ( நீதி ) இலக்கியம்: கி.பி 100 முதல் கி.பி 500 வரையில் திருக்குறள் முதலிய நீதி நூல்கள். கார்நாற்பது முதலிய வெண்பா நூல்கள்.
*
பழைய வனப்புகள் ( காப்பியங்கள் ) : சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் முதலியன.
*
இடைக்காலம்
*
பத்தி ( பக்தி ) இலக்கியம்: கி.பி 600 முதல் 900 வரையில் நாயன்மார் ஆழ்வார் பாடல்கள். கலம்பகம் முதலிய பல வகை நூல்கள்.
*
வனப்பு ( காப்பிய ) இலக்கியம் : கி.பி 900 முதல் 1200 வரையில் சீவகசிந்தாமணி, பெருங்கதை, முதலிய சமணபௌத்த நூல்கள். இறையனார் களவியல் முதலிய இலக்கண நூல்கள். சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியவர்கள். உலா பரணி பிள்ளைத் தமிழ்.
*
உரைநூல்கள்: கி.பி 1200 முதல் 1500 வரையில் இலம்பூரணர், பேராசிரியர் முதலியவர்கள். வைணவ விளக்க நூல்கள், சைவசித்தாந்த அளவை( சாத்திர) நூல்கள், சிறு நூல்கள், தனிப்பாடல்கள்.
*
புராண இலக்கியம்: கி.பி 1500 முதல் 1800 வரையில் புராணங்கள், தலபுராணங்கள். இசுலாமிய இலக்கியம். கிறித்தவர் தொண்டு, வீரமாமுனிவர் முதலானவர்கள். உரைநடை வளர்ச்சி.
*
இக்காலம்
*
பத்தொன்பதாம் நூற்றாண்டு: கிறித்தவ இலக்கியம். இராமலிங்கர், வேதநாயகர் முதலியவர்கள். நாவல் வளர்ச்சி, கட்டுரை வளர்ச்சி.
*
இருபதாம் நூற்றாண்டு: பாரதி, கல்கி, புதுமைப்பித்தன். சிறுகதை, நாவல், நாடகம், வாழ்கை வரலாறு, கட்டுரை, ஆராய்ச்சி .........
*
**
இலங்கை
.
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்துவருகின்றது. இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப் பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுக்கு முன்பே ஈழத்துப் பூதந்தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வள்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் கழக ( சங்க ) இலக்கியத்துள் சேர்ந்துள்ளன. ( ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் தமிழ்ச்சொல்) இலங்கையின் ஆட்சிமொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது. சிங்களவரும் தமிழ் கற்றுவந்தனர். சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளார். ஆட்சி புரிந்து வந்த சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பத்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர். ஆகையால் நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்றுவந்ததில் வியப்பு இல்லை.
.
இலங்கைத்தமிழ் நூல்கள்
.
வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் ( பதினாறாம் நூற்றாண்டில் ) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்துநானூறூ செய்யுள்கொண்ட காப்பியம் அது. தமிழ் நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையில் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை உலா கலம் பகம் சதகம் தூது அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம் , கோணாசல புராணம், புலியூர்ப்புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப்புராணம் என்பனவும் இலங்கையில் பிறந்தவைகளே. சூது புராணம் வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது தாசியின் வாழ்வு பற்றியது. கிறித்தவ சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன. நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறைய பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்குக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகை பக்திப்பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.

சனி, 3 நவம்பர், 2007

ஆங்கிலச்சொல் - தமிழ்ச்சொல்

ஆங்கிலத்தால் பற்பல தமிழ்ச்சொற்கள் அழிந்துபோயுள்ளன. அவற்றை திருத்திக்கொள்ள பட்டியலிடப்பட்டுளது வாசித்துப் பயன் பெறுங்கள் .
ஆங்கிலம் - தமிழ்
Absent - ( அழகன்) வரவில்லை
Academy - கலைக்கழகம்
Academic Council - கலைமன்றம்
Admission - சேர்ப்பு
Aerodrome - வானூர்தி
Aeroplane - வானூர்தி
Mono - plane - ஒற்றைச்சிறை வானூர்தி
Bi - plane - இரட்டைச் சிறை வானூர்தி
Sea - plane - கடல் வானூர்தி
Zeppelin - வானக்கப்பல்
Arch Bishop - அரசக் கண்காணியார்
Art - கம்மியம், கம், கலை
Artist - கம்மியன், ஓவியக்காரன்
Artisan - கம்மாளன்
Astronomy - வானநூல், கோள்நூல், உடுநூல்
Attendance - வரவுப் பதிவு, உடனிருக்கை
Attendance Register - வரவுப் பதிவுப் புத்தகம்
Badminton - பூம்பந்து
Band - கூட்டியம்
Bank - தவணைக் கடை, வட்டிக்கடை, காசுக்கடை
Bar-at-law - சட்டப்பாரர், பார் வழக்கறிஞர்
Basket ball - கூடைப்பந்து
Bat - மட்டை
Bench - அறுகாலி, விசி
Blotting paper - மையொற்றி
Boarding school - விடுதிப்பள்ளி
Book- keeping - கணக்கு வைப்பு
Botany - பயிர் நூல்
Brush - தூரிகை
Camera - படம்பற்றி
Camp - தங்கல், பாசறை, தாவளம்
Certificate - தகுதித்தாள்
Certify - தகவுரை
Challenge - அறைகூவு
Chalk - சீமைச் சுண்ணம்
Champion - வல்லான், அண்ணாவி
Chemistry - வேதிநூல், கெமியம், சாற்றியம்
Cheque - காசோலை
Cinima - திரைப்படம்
Circle - வட்டம், வட்டகை, வட்டாரம்
Civil case - உரிமை வழக்கு
Criminal case - குற்ற வழக்கு
Coach - வையம், வண்டி
Coat - மேற்சட்டை, மேற்பூசு
Collect - தண்டு
Collector - தண்டலாளர்
Communism - பொதுவுடைமை
Competition - இசலாட்டு, போட்டி
Compound - வளாகம், பறம்பு
Constitution - சட்ட அமைதி
Cork - அமைப்பான், தக்கை
Court - கோட்டம், மன்றம், அரங்கு
Corporation - இணைப்பாயம், மாநகராண்மை
Course - கடவை
Cricket - மண்டிலப்பந்து
Criticism - வக்கணை, அங்கதம்,திறனாய்வு
Cub-pack - குருளையர் குழு
Cup - கிண்ணம்
Cycle - மிதிவண்டி
Cyclo-style - கல்லச்சடி (வி.)
Cyclo-pen - கல்லச்செழுதுகோல், உருளையெழுத்தாணி
Dictator - தன்மூப்பாளன்
Damocracy - குடியரசு
Dictate - சொல்லியெழுதுவி, தன்மூப்பாணையிடு
Dictation -சொல்லியெழுதுவிப்பு
Dictator - தன்மூப்பாணையர்
Dictatorship - தன்மூப்பாட்சி
Direct - ஆற்றுப்படுத்து, இயக்கு
Director - இயக்குநர்
District - கோட்டகம், மாவட்டம்
District Board - நாட்டாண்மைக்க்ழகம்
Division - பிரிவு, வட்டம்
Doctor - பண்டிதர், பண்டுவர்
Drawing - ஓவியம், வரைவு
Duster - துடைப்பான்
நூல்>கட்டுரை வரைவியல்ஆசிரியர்>தேவநேயப்பாவாணர்

சிங்களச்சொல் - தமிழ்ச்சொல்

சிங்களத்தில் கலந்த தமிழ்ச்சொற்கள் . சிங்களமாக உள்ளன எண்ணற்ற தமிழ்ச்சொற்கள்.

சிங்களச்சொற்கள் - தமிழ்ச்சொற்கள்

அக்கா(அக்கே) - அக்கா
அக்கி - அக்கி(நோய்)
அசமோதகம் - அசமோதகம்
அக - அகம் (இல்லம்)
அகம்படிச்(சேனாவ)- அகம்படி
அகல - அகழ்
அகில் - அகில்
அங்காணி - அங்காடி
அச்சுவ - அச்சு
அட்டம் - அட்டம்
அடங்குவ - அடங்கு
அடக்கம் - அடக்கம்
அட(தியனவா) - அட்டு (க்கொடுத்தல்)
அடய - அடை, அடைப்பு
அடையாலம் - ஆடையாளம்
அட(மாநய) - ஆடை(கனம்)
அடவிய - அடவி
அடஸ்வி - அடைசல்
அடா - அடா
அடிய - அடி(பாதம்)
அடித்தாலம் - அடித்தலம்
அடுக்குவ - அடுக்கு
அடுத்து - அடுத்த
அண்டுவ - அண்டு (அண்டிப்பிடிப்பது)
அண்டய - அண்டை
அத்தம் - அற்றம்
அத்திக்கா, - அட்டிக்காஅத்திக்காய்
அத்திகாரம் - அச்சகாரம்
அத்திவாரம் - அத்திவாரம்
அதிவிடயன் - அதிவிடம்(அதிவிஷம்)
அதிகாரம் - அதிகாரம்
அன,அண - ஆணை
அப்பச்சி அப்பாச்சி - அப்பச்சி
அப்பஐ;ஐh அப்பொச்சி
அப்பா - அப்பன், அப்பா
அம்மா - அம்மை, அம்மா
அமத்து - அமர்த்து
அமுக்கரா - அமுக்கிரா
அமுண - அவணம்
அமுது - அ-முது(புதிய,புதமை)
அயியா - ஐயன்(தமையன்)
அயியோ - ஐயா
அரன் - அரண்
அருமய - அருமை
அருமயக்கெ - அருமையாய்
அல்லனவா - அள்ளல்
அல - அளை(இல்)
அலகுவ - அலகு
அலமப - அலம்பல்
அலரிய,அரலிய - அலரி
அலியா - அலியன்
அவர - அவரை
அவலெ,ஹவல - சவள்
அவுல - அவலம்(சோர்வு)
அசல்,அசல் - அயல்,அசல்
அண்ணவி - அண்ணாவி
ஆப்பே - அப்பம்
ஆனவாலு - ஆலைவாழை
ஆற - ஆற
ஆண - ஆணி
ஆரச்சி - ஆராய்ச்சி
ஆண்டுவ - ஆண்டு
இடஆப்பே - இடியப்பம்
இலவுவ - இழவு
இயந்தாரிய - இயவ்தாரி
ஒத்துவ - ஒற்று
ஓடெ - ஓடை
குற - குறு
கூலி - கூலி
ஹெட்டி - செட்டி
கொலுவ - குழை
கொலுவ - கோள்(பை)
கோலம் - கோலம்
கோட்டய - கோட்டை
சதகுப்ப - சதகுப்பை
சுட்டுக்கோல - சுசுட்டுக்கோல்
சுசுளு - சுசுள்
செக்குவ - செக்கு
செப்புவ - செப்பு
தைலம - தைலம்
தொட்டில - தொட்டில்
நடு - நடு
நரிய - நரி
நில - நிலம்
நிலமெ - நிலமை
நூல - நூல்
பட்டிய - பட்டி
பட்டண - பட்டணம்
பம்பரய - பம்பரம்
பளிங்குவ - பளிங்கு
பங்குவ - பங்கு
மட்டி - மட்டி
மல - மலர்
மஞ்சாடி - மஞ்சாடி
மட்டம் - மட்டம்
மடிசல் - மடிச்சீலை
மடப்புலி(றால) - மடைப்பள்ளிஐயன்
மலமாலய - மணவாளன்
மணமாலி - மணவாளி
மண்டி - மண்டி
மயில் - மயில்
மல,மல் - மழ
மஸ்வுpன - மைத்துனன்,மச்சுனன்,மச்சினன்
மாஞ்சுவ - மாய்ச்சி
மாந்து - மாற்று
மாயம் - மாயம்
மாறுவ - மாறு
முதல - முதல்
முறெ - முறை
முன - முனை
முத்தெட்டு - முற்று}ட்டு நிலம்
மொல - மூளை
வண்டக்கா - வெண்டிக்காய்
வல - வளை
வலங்கு - வழங்கு
வாச்சிய - வாசில
மயா - இளமை
றனலி(றன்-பொன்) - பொன்னாலரை

நூல்> யாழ்ப்பாண வைபவ கௌமுதி
ஆசிரியர்> கல்லடி

வடசொல் - தென்சொல்

வடசொற்கள் - தென்சொற்கள்

அங்கம் - உறுப்பு , கூறு
அங்கவஸ்திரம் - மேலாடை
அத்தியாவசியம் - இன்றியமையாதது
அசங்கியம் - அருவருப்பு
அசாத்தியம் - கூடாமை , முடியாமை
அத்தியசஷர் - கண்காணியார்
அன்ன சத்திரம் - உண்டிச் சத்திரம்
அத்தியாவசியம் - இன்றியமையாமை
அதிசயம் - வியப்பு , வியக்கத்தக்கது
அதிர்ஷ்டம் - ஆகூழ் , பொங்கு ( திடீர் உயர்ச்சி )
அந்தரங்கம் - மறைமுகம்
அநேக - பல
அப்பியாசம் - பயிற்சி
அபிவிர்த்தி - மிகு வளர்ச்சி
அபராதம் - குற்றம் ( தண்டம் )
அபிசேகம் - திருமுழுக்கு
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபூர்வம் - அருமை
அமாவாசை - காருவா
அர்ச்சனை - தொழுகை( வழிபாடு)
அர்த்தம் - பொருள்
அர்த்தபுஷ்டி - பொருட்கொழுமை
அவசரம் - விரைவு , பரபரப்பு
அவசியம் - தேவை , வேண்டியது
அவயவம் - உறுப்பு
அவஸ்தை - பாடு
அற்புதம் - புதுமை , இறும்பூது , மருட்கை
அன்னசத்திரம் - சோற்றுமடம்
அன்னவஸ்திரம் - ஊணுடை
அன்னியம் - அயல்
அனாவசியம் - தேவையின்மை , வேண்டாதது
அனுக்கிரகம் - அருளிப்பாடு , அருள்
அனுபவி - நுகர்,துய்,பட்டறி
அனுபவம் - பட்டறிவு, துய்ப்பு, பயிற்சி
அனுஷ்டி - கைக்கொள்
அசஷி - கண்ணி
அக்ஞாதவாசம் - மறைந்த வாழ்க்கை , கரந்துறைவு
அசஷ்யன் - கேடிலி
அஸ்திபாரம் - அடிப்படை
ஆக்கினை - ஆணை, கட்டளை
ஆகாரம் - உணவு ஆச்சரியம் - வியப்பு
ஆசாரம் - ஒழுக்கம்
ஆசீர்வாதம் - ஆசியுரை,வாழ்த்து
ஆதரி - தாங்கு, அரவணை,சார்த்துரை
ஆபத்து - துன்பம்
ஆபரணம் - நகை, அணி
ஆதியோடந்தமாய் - முதலிலிருந்து முடிவுவரை
ஆமோதி - வழிமொழி
ஆரண்யம் - காடு
ஆரம்பம் - துவக்கம், தொடக்கம்
ஆரோக்கியம் - நலம்,நோயின்மை
ஆலோசி - சூழ்
ஆயுள் - வாழ்நாள்
ஆனந்தம் - களிப்பு
ஆஸ்தி - செல்வம்
ஆட்சேபி - தடு
இந்திரன் - வேந்தன்,புரந்தரன்
இருதயம் - நெஞ்சம், நெஞ்சாங்குலை
இராப்போஜனம் - இராவுணவு, திருப்பந்தி
இஷ்டம் - விருப்பம்
ஈஸ்வரன் - இறைவன்
உத்தேசம் - மதிப்பு
உத்தியோகம் - அலுவல்
உபத்திரவம் - வேதனை
உபகாரம் - நன்றி
உபசாரம் - வேளாண்மை
உபசார வழக்கு - சார்ச்சி வழக்கு
உபயசேமம் - இருபால் நலம்
உபயானுசம்மதமாய் - இருமையால் நேர்ந்து
உபவாசம் - உண்ணா நோன்பு
உபாத்தியாயர் - ஆசிரியர்
உஷ்ணம் - வெப்பம்
உற்சவம் - திருவிழா
உற்சாகம் - ஊக்கம்
உஷ்ணம் - வெப்பம்
ஏகாதிபத்தியம் - ஒற்றையாட்சி
ஐசுவரியம் - உடமை ஒரு
சந்தி - ஒரு வேளை
கங்கணம் - வளையள் , காப்பு
கங்கண விஸர்ஜனம் - சிலம்பு கழி நோன்பு ஆக்கினை
கபிலை - குரால்
கர்த்தா - தலைவன் , செய்யோன்
கருணை - அருள்
கர்வம் - செருக்கு
கவி - செய்யுள்
கனகசபை - பொன்னம்பலம்
கனிஷ்ட - இளம்
கஷ்டம் - வருத்தம் , பாடு, கடினம்
கஷாயம் - கருக்கு
காஷாயம் - காவி
காவியம் - வனப்பு, தொடர்நிலைச்செய்யுள், [இராமாயணம் ( பாவியம்)] கானாசபா - இசைக்குழாம்
கிரமம் - ஒழுங்கு
கிரகம் - கோள்
கிரகி - உட்கொள்
கிரயம் - விலை
கிராமம் - சிற்றூர், நாட்டுப்புறம்
கிரியை - செய்கை
கிரீடம் - முடிக்கலம்
கிருகப்பிரவேசம் - புது வீடு புகல்
கிருபை - அருள், இரக்கம்
கிருஷ்ணபகஷம் - இருட்பக்கம் , தேய்பிறை
கிருஷிகம் - உழவு
கோஷ்டி - குழாம்
கோத்திரம் - சரவடி, கொடிவழி
சக்கரவர்த்தி - மாவேந்தன்
சக்தி - ஆற்றல்,வலிமை
சகலம் - எல்லாம்
சகஜம் - வழக்கம்
சகுனம் - குறி,புள்
சகோதரன் - உடன் பிறந்தான்
சங்கடம் - இடர்பாடு
சங்கரி - அழி
சங்கீதம் - இன்னிசை
சங்கோசம் - கூச்சம்
சத்தம் - ஓசை
சத்தியம் - உண்மை
சத்துரு - பகைவன்
சதுரம் - நாற்கரம் , நாற்கோணம்
சதுர் - நடம்
சந்ததி - எச்சம்
சந்தி - தலைக்கூடு,எதிர்கொள்,காண்
சந்தியாவந்தனம் - அந்திவழிபாடு
சந்திப்பு - கூடல்
சந்திரன் - மதி, நிலா
சந்தேகம் - ஐயம், ஐயுறவு
சந்தோஷம்( ஆனந்தம் ) - மகிழ்ச்சி, உவப்பு
சந்நிதி - முன்னிலை
சந்நியாசி - துறவி
சபை - அவை
சம்பந்தம் - தொடர்பு
சம்பாஷணை - உரையாட்டு
சம்பூரணம் - முழுநிறைவு
சமாச்சாரம் - செய்தி
சமீபம் - அண்மை
சமுகம் - குமுகம், மன்பதை
சமுசாரம் - குடும்பம்
சகுசாரி - குடும்பி ( குடியானவன் )
சமுச்சயம் - அயிர்ப்பு
சமுத்திரம் - வாரி
சமுதாயம் - குமுகாயம்
சர்வமானியம் - முற்றூட்டு
சரணம் - அடைக்கலம்
சரஸ்வதி - கலைமகள்
சரீரம் - உடம்பு
சன்மார்க்கம் - நல்வழி
சாகரம் - கடல்
சாதம் - சோறு
சாதாரணம் - பொதுவகை
சாஸ்திரம் - கலை ( நூல் )
சாஸ்வதம் - நிலைப்பு
சாஸனம் - பட்டயம்
சாசஷி - கண்டோன்
சிங்கம் - அரிமா
சிங்காசனம் - அரியணை , அரசுகட்டில்
சிநேகிதம் - நட்பு
சிரஞ்சீவி - நீடுவாழி
சிருஷ்டி - படைப்பு
சிலாசாஸனம் - கல்வெட்டு
சீக்கிரம் - சுருக்கு
சீதம் - குளிர்ச்சி
சுக்கிலபகம் - ஒளிப்பக்கம், வளர்பிறை
சுகம் - நலம், உடல் நலம், இன்பம்
சுத்தம் - துப்புரவு சுதந்திரம் - உரிமை ,தன்னுரிமை
சுதி ( சுருதி ) - கேள்வி
சுபம் - மங்கலம்
சுபாவம் - இயல்பு
சுய - தன்
சுயமாய் - தானாய்
சுயராஜ்யம் - தன்னாட்சி , தன்னரசு
சுயாதீனம் - தன்வயம்
சுரணை - உணர்ச்சி
சுவர்க்கம் - துறக்கம், உவணை
சுவாசம் - மூச்சு ( உயிர்ப்பு)
சுவாமி - ஆண்டான், கடவுள்
சுவாமிகள் - அடிகள்
சூத்திரம் - நூற்பா
சேவகன் - இளையன், ஊழியன் , காவலாளன்
சேவை - தொண்டு ( ஊழியம் )
சேனாதிபதி - படைத்தலைவன்
சேனாவீரன் - பெருநன்
சேஷ்டை - குறும்பு
சொப்பனம் - கனா ( கனவு )
சோதி - நோடு,ஆய்
சௌகரியம் - ஏந்து, சலக்கரணை
சௌபாக்கியவதி - நிறைசெல்வி
ஞாபகம் - நினைப்பு
ஞானம் -அறிவு , ஓதி, காட்சி
தந்திரம் - வலக்காரம் , நூல்
தயவு - இரக்கம்
தருமம் - அறம்
தனம் - பணம்
தட்சணை - கொடை
தாட்சண்யம் - கண்ணோட்டம்
தாசி - தேவரடியாள்
தாமதம் - தாழ்ப்பு, தவக்கம், தாயமாட்டம்
தாமிரசாஸனம் - செப்புப் பட்டயம்
தானியம் - கூலம், தவசம்
தாகிணாத்ய கலாநிதி - தென்கலைச் செல்வர்
தியாகம் - ஈகம்
தியாகி - ஈகி
திரவியம் - பொருள்
திருப்தி - பொந்திகை
திவசம் - இறந்த நாள்
தினம் - நாள்
துக்கம் - துயரம்
துர் அதிஷ்டம் - போகூழ்
துரோகம் - இரண்டகம்
துஷ்டன் - தீயவன்
தூரம் - சேய்மை
தேகம் - உடல்
தைலம் - எண்ணெய்
தோஷம் - சீர் ( குற்றம்)
நதி - ஆறு
நமஸ்காரம் - வணக்கம்
நஷ்டம் - இழப்பு
நவம் - புதுமை
நசஷத்திரம் - வெள்ளி ( நாண்மீன்)
நாசம் - அழிவு
நாதம் - ஒலி
நாணயம் - காசு
நாவம் - ஒலி
நாமகரணம் - பெயரீடு
நிச்சயம் - தேற்றம்
நித்திரை - தூக்கம்
நித்தி - இகழ், ஏளனம்செய்
நியதி - யாப்புறவு
நியமி - அமர்த்து
நியாயம் - முறை
நிஜம் - மெய்
நிச்சம் - தேற்றம்
நீதி - நயன்
பிரயோஜனம் - பயன்
பிரஜை- குடிகள்
பிராகாரம் - சுற்றிமதில்
பக்தன் - அடியான் ( தேவடியான்)
பிராணன் - உயிர்
பிராணி - உயிர்மெய்( உயிர்ப்பொருள்), உயிரி
பக்தி - தேவடிமை
பகிரங்கம் - வெளிப்படை
பிராயச்சித்தம் - கழுவாய்
பசு - ஆன் ( ஆவு)
பிரியம் - விருப்பம்
பஞ்சேந்திரியம் - ஐம்புலன்
பத்திரம் - தாள் ( இதழ்)
பத்திரிகை - தாளிகை
பத்தினி - கற்புடையாள்
பதார்த்தம் - பண்டம் ( கறி)
பதிவிரதை - குலமகள் ( கற்புடையாள்)
பந்து - இனம்
பர - பிற
பரம்பரை - தலைமுறை
பரிகாசம் - நகையாடல்,பகிடிபண்ணல்
பரியந்தம் - வரை
பட்சி - பறவை ( புள் )
பாத்திரம் - ஏனம் ( தகுதி)
பார்வதி - மலைமகள்
பாவம் - தீவினை
பானம் - குடிப்பு ( குடிநீர்)
பாஷாணஸ்தாபனம் - கல்நாட்டல்
பாஷை - மொழி
பிச்சை - ஐயம்
பிச்சைக்காரன் - இரப்போன்
பிசாசு - பேய் பிரகாசம் - பேரொளி
பிரகாரம் - படி
பிரச்சாரம் - பரப்புரை
பிரசங்கம் - சொற்பொழிவு
பிரசாதம் - திருச்சோறு, அருட்கொடை
பிரவசம் - பிள்ளைப்பேறு
பிரபல - பெயர்பெற்ற
பிரசுரம் - வெளியீடு
பிரதமம் - முதல்
பிரத்தியட்சம் - கண்கூடு
பிரதசஷிணம் - வலஞ்செய்தல்
பிரதிக்ஞை - மேற்கோள், சூளுரை
பிரதி - படி
பிரபந்தம் - பனுவல்
பிரமாணம் - அளவை
பிரயாசம் - முயற்சி
பிரயாணம் - வழிப்போக்கு
பிரயாணி - வழிப்போக்கன்
பிரயோகம் - எடுத்தாட்சி, வழக்கு
பிரயோசனம் - பயன்
பிரவேசி - புகு
பிரஜை - குடிமகன்
பிராகாரம் - சுற்றுமதில்
பிராணன் - உயிர்
பிராணி - உயிரி
பிராயச்சித்தம் - கழுவாய்
பிரியம் - விருப்பம்
பிரேரேபி - முன்மொழி
பிரேதம் - பிணம்
புண்ணிய தோத்திரம் - திருக்களம்
புண்ணியம் - நல்வினை ( அறப்பயன்)
புத்தி - மதி
புத்திமதி - மதியுரை
புத்திரன் - மகன்
புராதனம் - பழைமை
புருஷன் - ஆடவன்
புஷ்டி - தடிப்பு ( சதைப்பிடிப்பு)
புஷ்பம் - பூ
புஷ்யவதியாதல் - முதுக்குறைதல் ( பூப்படைதல்)
பூமி - ஞாலம், நிலம்
பூர்வீகம் - பழைமை
பூர்வ ஜென்மம் - பழம்பிறவி
பூரணசந்திரன் - முழுமதி
பூஜை - வழிபாடு
போதி - கற்பி, நுவல்
போஜனம் - சாப்பாடு
போஷி - ஊட்டு
பௌரணை - நிறைமதி,முழுநிலா,வெள்ளுவா,மதியம்
மத்தி - நடு
மத்தியானம் - நண்பகல் ( உச்சிவேளை)
மயானம் - சுடுகாடு , சுடலை
மரியாதை - மதிப்பு
மாமிசம் - இறைச்சி
மார்க்கம் - வழி
மிருகம் - விலங்கு
முத்தி - விடுதலை
முகஸ்தூதி - முகமன்
மூர்க்கன் - முரடன்
மைத்துனன் - அத்தான் ( கொழுந்தன்), அளியன்
மோசம் - கேடு
மோசஷம் - வீடு, பேரின்பம்
யதார்த்தம் - உண்மை
யமன் - கூற்றுவன்
யஜமான் - தலைவன் ( ஆண்டான்)
யாகம் - வேள்வி
யாத்திரை - வழிப்போக்கு
யுத்தம் - போர்
யோக்கியம் - தகுதி
யோசி - எண்
யௌவனம் - இளமை
ரகசியம் - மறைபொருள்,மருமம்,குட்டு,கமுக்கம்
ரசம் - சாறு
ரணம் - புண்
ரத்தினம் - மணி
ரதம் - தேர்
ரசை - காப்பு
ரசாயனம் - சாற்றியம் , கெமியம்
ராசி - ஓரை
ராஜன் - அரசன்
ரிஷி - முனிவன்
ருசி - சுவை
ரோமம் - மயிர்
லட்டு - இனிப்புருண்டை
லஜ்ஜை - வெட்கம்
லசஷ்மி - திருமகள்
லாபம் - ஊதியம்
லீலை - திருவிளையாடல்
லோபம் - இவறன்மை
லோபி - இவறி ( கஞ்சன், பிசிரி )
வசனம் - உரைநடை
வந்தனம் - வணக்கம்
வமிசம் -மரபு
வயசு - அகவை
வர்க்கம் - இனம்
வர்த்தகம் - வணிகம்
வருஷம் - ஆண்டு
வஸ்து - பொருள் , பண்டம்
வாகனம் - ஊர்தி, அணிகம்
வாசனை - மண்ம்
வாத்தியம் - இயம்
வாயு - வளி
வார்த்தை - சொல்
விகடம் - பகடி
விகாரம் - திரிபு
விசுவாசம் - நம்பிக்கை
விசனம் - வாட்டம்
விஷயம் - பொருள்
விசாரி - வினவு, உசாவு
விசாலம் - சாலம், அகல்ம்
விசேஷம் - சிறப்பு
வித்தியாசம் - வேறுபாடு
வித்துவான் - புலவன்
விநோதம் - புதுமை
வியபிசாரம் - அலவை
விபத்து - இடுக்கண்
வியவகாரம் - வழக்கு
வியர்த்தம் - வீண்
வியவசாயம் - பயிர்த்தொழில்
வியாதி - நோய்
வியாபாரம் - பண்டமாற்று, விற்பனை
விரதம் - நோன்பு
விருத்தாப்பியம் - கிழத்தன்மை, மூப்பு
விரதம் - நோன்பு
விரோதம் - பகை
விவாதம் - திருமணம்
விஸ்தீரணம் - பரப்பு
விஷம் - நஞ்சு
வீரன் - வயவன் ( விடலை)
வேசி - விலைமகள்
வேதம் - மறை
வைசியன் - வணிகன்
வைத்தியம் - மருத்துவம்,பண்டுவம்
ஜ்வரம் - காய்ச்சல்
ஜயம் - வெற்றி
ஜலதோஷம் - நீர்க்கோவை, தடுப்பு
ஜன்மம் - பிறவி
ஜன்னி - இசிவு
ஜனம் - நரல் (நருள்)
ஜனசங்கியை - குடிமதிப்பு
ஜனன மரணம் - பிறப்பிறப்பு
ஜாக்கிரதை - விழிப்பு
ஜாதகம் - பிறப்பியல்
ஜாதி - குலம்
ஜீரணம் - செரிமானம்
ஜீரணோத்தாரணம் - பழுது பார்ப்பு
ஜீவன் - உயிர்
ஜீவனம் - பிழைப்பு
ஜீவியம் - வாழ்க்கை
ஜோஷ்ட - மூத்த
ஜோதி - சுடர்
ஜோதிடன் - கணியன்
ஸ்தாபனம் - நிறுவனம்
ஸ்திதி - நிலை, நிலையம்
ஸ்துதி - போற்று, புகழ்
ஸ்திரீ - பெண்டு
ஸ்தோத்திரி - பராவு,வழுத்து
ஸ்நானம் - குளிப்பு
ஸ்வீகாரம் - தத்தெடுப்பு, தத்து
சஷீணம் - மங்கல்
சேமம் - ஏமம், நல்வாழ்வு (காப்பு)

நூல்>ஒப்பியன் மொழிநூல் ஆசிரியர்>மொழிஞாயிறு

ஞாயிறு, 15 ஜூலை, 2007

நினைவுகள்

  1. விபுலானந்த அடிகள் (27.03.1892 - 19.07.1947).
  2. வாக்கியப் பஞ்சாங்க கணித மேதை இராகுநாத ஐயர் நினைவுநாள் ( 1969 ).
  3. தனிநாயகம் அடிகளார் நினைவுநாள் ( 02.08.1913 - 01.09.1980 ).
  4. புலோலியூர் சைவப்பெரியார் க. சிவபாதசுந்தரனார் நினைவுநாள் ( 17.01.1878 - 14.08.1953 ).
  5. சிறீ இராமகிருஸ்ண பரமஹம்ஸர் நினைவு நாள் ( 17.02.1836 - 16.08.1884 ).
  6. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை நினைவு நாள். ( 19.10.1888 - 24.08.1972).

திங்கள், 9 ஜூலை, 2007

செப்புமொழி

  • உன் மகன் நல்லவனாக இருந்தால், நீ ஏன் சேமிக்கவேண்டும். உன் மகன் தீயவனாக இருந்தால் ( அவனுக்காக ) நீ ஏன் சேமித்து வைக்கவேண்டும். * இந்தியா*
  • பிறரை சீர்திருத்தும் கடமையைவிட தன்னை சீர்திருத்துவதே முதல் கடமை. உன் கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே * கீதை*
  • பணத்தை மனிதன் ஆளவேண்டுமே தவிர, பணம் மனிதனை ஆளக்கூடாது.
  • தனது மனவுலக ஆசைகளிருந்தும், அச்சங்களிருந்தும் தன்னை விடுதலை செய்துகொள்பவன் தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகமையைப் பெறமுடியும். *வே.பிரபாகரன்*
  • ஒரு வார்த்தையை உன் உதடுகள் உதிர்க்கும் முன் உன் உள்ளம் அதனை இரு தடவைகளேனும் சிந்திக்குமானால் அதன் விளைவு ஒரு போதும் விபரீதமாக இருக்காது.

செவ்வாய், 3 ஜூலை, 2007

துருவவடலிகள்

புலத்தில் வாழும் குழந்தைகளின், இளையவர்களின் சாதனைகளைப் பற்றிப்பேசவேண்டும் பேசியாகவேண்டும். பிற மொழியில் படித்து அவர்கள் விரும்பும் கல்வியையோ துறையையோ தெரிவுசெய்தாலும் கூட தமது தாய் மொழியிலும் நிறைய படைப்புகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தமது மொழி, இசை, கலைகள் அழியாது பேணவேண்டும் என்று விருப்புக்கொண்டவர்கள். எந்த படைப்புகளாக இருந்தாலும் அந்தப்படைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டிய கடைமைப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அவர்கள் ஆக்கங்கள் பற்றிப்பேசுவதே ஊக்கம் கொடுப்பதற்கு நிகராகிறது. 'துருவவடலிகள்' துருவத்தேச தமிழ்ச் சாதனையாளர்களை அடையாளப்படுத்துவதிலும் தமிழாசான் மகிழ்வுகொள்கிறேன்.

*அர்ச்சனா.ஆனந்தகரன்*

அர்ச்சனா. ஆனந்தகரன் நோர்வேயிலேயே பிறந்து வளர்ந்து வரும் சிறுமி. தனது ஐந்தாவது அகவையில் பாடல் போட்டியில் பாடி முதல் பரிசு பெற்றுக்கொண்டாள். தமிழ்க்கல்வி தேர்வுகளிலும் முதல் மாணவியாகத் திகழ்பவள். புலத்து தமிழ்க்குயிலாக சில பாடல்களை பாடியுள்ளாள். வெளியிட்ட முதல் ஒலிவட்டு ' புலத்திலிருந்து ஒரு தமிழ்க்குயில்' .இவ் ஒலிவட்டு வெளியீட்டின் போது தமிழீழத்தின் வெளியீட்டுகுழுவினரால்'சின்னக்குயில்' பட்டமும் கொடுக்கப்பட்டது.26 மார்கழி கடற்கோளினால் தமிழீழ மக்கள் இறப்பைக் கண்டும் கேட்டும் அச்சோக நிகழ்வை எண்ணி 'Mørke dager' (இருண்ட நாட்கள்) என்று ஓர் உரைநடையை நோர்வே நாட்டு மொழியில் எழுதி நோர்வே நாட்டு மக்களுக்கு தாம் தொப்புள்கொடி உறவை மறக்காமல் இருப்பதை அவ் உரைநடையில் உணர்தினாள். அவ் உரைநடைபரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

*ரூபன். சிவராஜா*

இலங்கையில் பிறந்து சிறுஅகவையிலே நோர்வேக்கு குடிபெயர்ந்த இவர் தமிழிலும் நோர்வேசிய மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். இவருடைய கட்டுரைகள் பல தாளிகைகளில் ( பத்திரைகையில் ) இடம் பெற்றுள்ளன. நோர்வேத்தழிழ் நாடகக்குழுவோடு சேர்ந்து சில நாடகங்களை எழுதியும் உள்ளார். அத்தோடு பல நாடகங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்தும் உள்ளார். சிறந்த பாடல்களை எழுத்தக்கூடிய பாடல் ஆசிரியராக மட்டும் அல்லாது தனித்தமிழுக்கும் உரமூட்டி வருகிறார் . இவர் இலக்கியப் பணி தொடர நாமும் வாழ்த்துகிறோம். இவர் எழுதிய பாடல் தொகுப்பு சுதந்திரவாசல் இறுவெட்டு வெளிவந்துவிட்டது.

*வசீகரன்.சிவலிங்கம்*

தமிழீழ தாயகத்தில் பிறந்து புலத்தில் வளர்ந்து வாழ்ந்து வரும் மூத்த தலைமுறைப் படைப்பாளி இவர். முதன்முதல் வெளியிட்ட நூல் ' இன்ரநெற்றும் இருபதாம் நூற்றாண்டும் ' ஆகும். அதோடு பாடல்களையும் கவிதைகளையும் எழுத வல்லவர். இவருடைய கவிதைகள் தாளிகைகளில் இணையத்தளங்களில் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய காதல் பாடல்களின் தொகுப்புகளாய் வெளியிட்ட ' காதல் கடிதம்' ' காதல் மொழி ' உலக தமிழ் மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழக பாடலாசியர்களின் காதல் பாடல்களுக்கு இணையாக இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் வெளியிட்ட ஒலிவட்டுகளில் ஒன்றான 'காதல் கடிதம்' பாடல்களைக் கொண்டு 'காதல் கடிதம்' திரைக்காவியமாக திரையில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய தனி முயற்சியால் தமிழக கலைஞர்களையும் இணைத்து படைப்புகளை செய்யும் இவரையும் தமிழாசான் வாழ்த்துகிறேன்.

*கவிதா.இரவிக்குமார்*

சின்னஞ்சிறு அகவையில் இடம்பெயர்ந்து நோர்வேநாட்டில் குடியேறிய பின்பு நோர்வேயில் தமிழும் கற்று புது உரைநடை எழுதுவதில் வல்ல பெயர் சொல்லத்தக்க இளம் பெண் எழுத்தாளராகத் திகழ்பவர். குமுகத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதையும் அதிலிருந்து பெண்கள் எப்படித் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை உரைநடையே அவர் எழுத்தில் இடம்பெறும். அவர் வெளியிட்ட நூல்கள் கரைசேரும் கடிதங்கள், பனிப்படலத்தாமரை ஆகும். நல்ல பாடல்களையும் தருபவர் அவர். நடனத்தையும் கற்று பல புலத்து அவலத்தையும் அக்கலை ஊடாக வெளிப்படுத்தி வருபவர். அவர் எழுத்தும் கலையும் மேம்பட தமிழாசான் வாழ்த்துகிறேன்.

www.nortamil.com

வியாழன், 28 ஜூன், 2007

சாமர்களின் வரலாறு

சாமர் ( Samar )
.
உலகெங்கும் " ஆதிப் பழங்குடி மக்கள் " என்று ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 300 மில்லியன் மக்கள் 70 நாடுகளில் பரந்து வாழ்ந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக கிறீன் லாந்தில் வாழும் எக்சிமோவர் , வட அமெரிக்காவில் வாழும் இந்தியானர் , மற்றும் அவுஸ்ரேலியாவில் வாழும் பழங்குடி மக்கள் போன்றோர் வரிசையில் இந்த சாமரும் அடங்குவர் . சாமி மொழியை வீட்டுப்பாவனை மொழியாகக் கொண்டவர்களை சாமர் என்று அழைப்பர். இவர்கள் ஏறத்தாழ 70,000 பேர் உலகில் வாழ்கின்றார்கள் . இவர்கள் வாழும் பிரதேசம் " சாம லாண்ட்" அல்லது " லப்லாண்ட்" என்று அழைக்கப்படும்.
இது ஏறத்தாழ 150,000 km2 பரப்பளவை உள்ளடக்கியது. இந்தப்பிரதேசம் வடநோர்வே , வடசுவீடன் , வட பின்லாந்து மற்றும் ரஸ்சியாவின் கோலா பிரதேசங்களைக் கொண்டு அமைந்துள்ளது. நோர்வேயில் சுமார் 40,000 சாமரும் , சுவீடனில் 20,000 சாமரும், பின்லாந்தில் 6,000 சாமரும், மற்றும் ரஸ்சியாவில் 2,000 சாமரும் வாழ்கின்றார்கள். இம்மக்கள் கூட்டத்தினர் தங்களுக்கே உரித்தான தனித்துவமான பண்பாடு , சமய , மற்றும் சமூக வாழ்வியல் விழுமியங்களைக் கொண்டவர்கள்.
இவர்கள் பேசும் மொழி சாமி மொழியாகும். இது பின்ஸ்க் - உர்கிஸ்க் ( Finsk -Urkisk ) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது பின்லாந்து , லற்வியா , எஸ்ரோனியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளின் சகோதர மொழியாகும் . சாமி மொழியிலும் பல்வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. சாமர் வாழும் பிரதேசத்திற்கு ஏற்றவாறு மொழியிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. வடசாமி , தென்சாமி , கிழக்கு அல்லது கோலாசாமி மற்றும் மத்தியசாமி அல்லது லுலசாமி என்பனவாகும் .
சாமி மொழி ஒரு வளம் நிறைந்த மொழியாகும் . அதிலே " Snow" ஐ அதாவது பனித்துகள்களை குறிப்பதற்கு 300 வகையான சொற்கள் பயன்படுகின்றன. சாமர்களின் மதம் " ஷாமானிஸம்" எனப்படுகின்றது. இவர்கள் சூரியன் , இடி மற்றும் மின்னல் போன்றவற்றை வணங்குகின்றார்கள். இவர்களின் ஆடை அணிகலன்கள் பல வர்ணங்களைக் கொண்டவை. அவ் ஆடைகள் கைகளால் பின்னப்படுகின்றன. அவற்றில் ஆண் , பெண் வேறுபாடுகளைக் காணக் கூடியதாக இருப்பதுடன் பிரதேச வேறுபாடுகளையும் காணலாம்.
உணவுப் பழக்கத்தைப் பொறுத்த வரையில் துருவ மானின் இறைச்சியை பதப்படுத்தி உணவாக்கி உண்கிறார்கள். அவற்றின் தோலை கூடாரம் அமைக்கவும் வீட்டுப் பாவனைப் பொருட்களாகவும் பயன்படுத்துகிறார்கள். சாமரின் இசை வடிவம் "ஜொய்க்" என்று அழைக்கப்படுகிறது. இது மலைச்சாரலில் காற்று வீசும் போது எழுப்பும் ஒலி வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனித்துவமான இசை வடிவம் ஆகும். விளையாட்டைப் பொறுத்தவரையில் சாமர் பனிச் சறுக்கல் ஓட்டம், பனிச்சறுக்கல் வண்டியில் துருவ மான்களை இணைத்து ஓடுதல் மற்றும் துருவ மான்களை கயிறு வீசிப் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.
தொழிலைப் பொறுத்த வரையில் கடலை அண்டிய பிரதேசங்களில் வாழும் கரையோரச் சாமர் மீன் பிடித்தல் மற்றும் வேட்டையாடலை பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர்.
மலையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மலைச்சாரல் சாமர் துருவ மான் வளர்ப்பு மற்றும் வேட்டையாடலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். சாமர்கள் வருடத்தில் 11 நாட்களை சிறப்பு நாட்களாகக் கொண்டாடி வருகின்றார்கள். அவற்றுள் பெப்ரவரி 6 ஆம் திகதி சமாரின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது. சாமருக்கு என்று ஒரு தேசியக் கொடியும் தேசிய கீதமும் இருக்கிறது. எனினும் அவர்களுக்கென்று சுதந்திரமான தனியான நாடு இல்லை. ஏனைய பழங்குடி மக்கள் போன்று சாமரின் உரிமைகளும் காலம் காலமாக மறுக்கப்பட்டே வந்துள்ளன. அவர்கள் தமது உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார்கள். நோர்வேயில் சுமார் 1850 முதல் 1950 வரையான 100 ஆண்டு காலப்பகுதியில் சாமரின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்களின் சாம அடையாளங்களை அழித்து, அவர்களை தூய நோர்வேசியர்களாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பபட்டது. எனினும் சில சாமர்கள் விழித்துக் கொண்டு , நாடுகள் தழுவிய ரீதியில் சாமரின் தேசிய மாநாட்டைக் கூட்டினர். இந்த மாநாடு 1917 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி " துரோண்கெய்ம்" ( Trodheim-Norway) என்னும் இடத்தில் நடைபெற்றது. அந்த மகாநாட்டில் சாமரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். அந்த நாளே சாமரின் தேசிய நாளாக இன்றும் கொண்டாடப் படுகின்றது. 1959 ஆம் ஆண்டுவரை நோர்வேயில் சாம மொழியை பொது இடங்களில் பயன்படுத்துவற்குத் தடை இருந்தது. 1980களில் நோர்வே அரசு, வட நோர்வேயில் உள்ள அல்தா ( Alta ) என்ற இடத்திலுள்ள ஆற்றை மறித்து அணை கட்ட முயன்றது. இந்த முயற்சி சாமரின் வாழ்வியலைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எனினும் அப்போராட்டம் தோல்வியில் முடிந்தது. நோர்வே தாம் நினைத்தது போல் அணையைக் கட்டி முடித்தது. ஆயினும் இப்போராட்டம் சாமரிக்கிடையே மேலும் ஒற்றுமையை ஏற்படுத்தியது.
சாமர்கள் எங்கு வாழ்ந்தாலும் , அவர்கள் எல்லோரும் ஒரே கொடியை சாம தேசியக் கொடியாகவும் , ஒரே கீதத்தை சாம தேசிய கீதமாகவும் 1986 முதல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சாமரின் தேசியக் கொடி பல வர்ணங்களால் ஆனது. அது அவர்களின் பனி படிந்த பிரதேசத்திலே தோன்றுகின்ற சூரிய , சந்திர காட்சிகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.1906 ஆம் ஆண்டு நோர்வேசியரான ஈசாக்- சாபா ( Isak Saba ) என்பவரால் இயற்றப்பட்ட பாடலே தேசிய கீதமாக விளங்கி வருகிறது. சாமரின் முக்கியமான கொண்டாட்டங்கள் அனைத்திலும் அவர்களது தேசியக்கொடி ஏற்றலும் , தேசியகீதம் இசைத்தலும் முக்கிய கடமையாக மேற்கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் சாமரின் உரிமைகளைப் பாதுகாக்க நோர்வேயில் ' சாமதிங்' எனப்படும் சாம பாராளுமன்றம் 1989 இல் உருவாக்கப்பட்டது. இதற்கு ஜனநாயக முறைப்படி 4 வருடங்களுக்கு ஒரு தடவை, மக்கள் வாக்களிப்பின் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் படுகின்றார்கள். இந்த வாக்களிப்பில் சாமராய்த் தம்மை பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். நோர்வேயில் பல்லாயிரக்கணக்கான சாமர்கள் வாழ்ந்த போதிலும் 1989ல் 5500 சாமர் மட்டுமே தம்மை சாமராக பதிவு செய்து கொண்டனர். ஒருவர் தன்னைச் சாமராகப் பதிவு செய்வதற்கு அவரின் வீட்டு அன்றாடப் பாவனை மொழி சாமியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. நோர்வேயில் பல்லாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட , சாமரை தூய நோர்வேசியர்களாக்கும் முயற்சி, அவர்கள் பலரின் சாம அடையாளங்களை இல்லாது ஒழித்துவிட்டது.
அத்தோடு சிலர் தம்மை சாமராகப் பதிவு செய்ய முன்வரவும் இல்லை. இந்த 'சாமதிங்' எனப்படும் சாமப்பாராளுமன்றுக்கு நிறைவேற்று அதிகாரங்கள் எதுவும் இன்று வரை கிடையாது. வெறும் ஆலோசனை சபையாகவே செயற்படுகின்றது. நோர்வே அரசால் சாமர் தொடர்பான விடையங்களில் முடிவு எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது இந்த சபை அதற்கு ஆலோசனைகள் வழங்குவதாக அமையும். இந்த சபையின் நோக்கம் சாமரின் தனித்துவமான பண்பாடு, கலாச்சார வாழ்வியல் விழுமியங்களைப் பாதுகாத்தலும், அபிவிருத்தி செய்தலும் கூட்டிணைத்தலுமாகும். இப்படியான ஒரு சபை பின்லாந்தில் 1973ல் இருந்து இயங்கி வருகின்றது. எனினும் சுவீடனில் 1993ல் இருந்தே இயங்கி வருகின்றது. இந்த மூன்று சாம பாராளுமன்றங்களும் ஒன்றிணைந்து நூடிக் சாம கூட்டமைப்பு ( Nordic Sama Convention) என்ற ஒரு பொது அமைப்பாக இயங்கிவருகின்றது.
.
நோர்வேயின் முதலாவது சாமப் பாராளுமன்றத்தை 1989 ஆம் ஆண்டு, அன்று நோர்வேயின் மன்னராக இருந்த 'ஊலா' ( Ola) 'கரசோ' ( karasjo) என்ற இடத்தில் தொடக்கி வைத்தார். 2000 ஆம் ஆண்டு அதே இடத்தில் புதிய சாம பாராளுமன்ற கட்டடம் இன்றைய மன்னர் 'கரால்ட்' ( Harald) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் , அவர்களது வளமையான வாழ்விடமான, துருவ மான்களின் தோலினால் வேயப்பட்ட கூடாரங்கள் போன்று , புதிய கட்டடக்கலை வடியப்பிலே உருவாக்கப்பட்ட அழகான கட்டடமாகும். சுவீடனில் புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய சாம பாராளுமன்ற கட்டடடம் 2009 ஆம் ஆண்டு 'கிருனா' ( Kiruna) என்ற இடத்தில் திறந்து வைக்கப்படட உள்ளது.
பின்லாந்திலும் சுவீடனிலும் சாமரின் சில உரிமைகள் அரசியல் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நோவேயில் அவ்வாறு அவர்களின் உரிமைகள் அரசியல் சட்டரீதியாக உறுதி செய்யப்படவில்லை. நோர்வேயில் வாழுகின்ற சாமரில் பெருபான்மையானோர் ஒஸ்லோவிலேயே வசிக்கிறார்கள். 1959 ஆம் ஆண்டு வரை நோர்வேயில் பாடசாலைகளில் சாம மொழியைக் கற்பதற்குத் தடை இருந்தது. இன்று அவர்கள் சாம மொழிப் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் அமைத்து தங்களது மொழியையும் கல்வியையும் மேன்படுத்தி வருகின்றார்கள். இன்று சாம மொழியிலே நாளிதழ்கள் வெளிவருகின்றன. வானொலி,தொலைக் காட்சி, இணையத் தளம் என்பன இயங்குகின்றன.
முன்புஅவர்கள் தங்கள் போக்குவரத்துக்கு பனிச்சறுக்கல் மரத்தினாலான பனிச்சறுக்கல் பொருட்களையும் துருவ மான் வண்டிகளையும் நம்பியிருந்தார்கள். இன்றோ ' snow skooter' எனப்படும் பனிச்சறுக்கல் உந்துருளி மற்றும் உலங்கு வானூர்தி போன்றவற்றை போக்குவரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
உலக மயமாதல் அவர்களின் வாழ்விலும் பல மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. எனினும் அவர்கள் தாம் ஒரு சாம தேசியம் என்ற உணர்வோடு வாழ்கின்றார்கள்.
.
எழுத்து வடிவம்> தயா. சொக்கநாதன்.

பொது அறிவு

  • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.
  • யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.
  • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது.
  • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.
  • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.
  • 'விடுதலைப்புலிகள்' முதலாவது இதழ் ( குரல்- 1) 15.03.1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.
  • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.

செவ்வாய், 26 ஜூன், 2007

முத்தமிழ்

இன்தமிழ் மூன்று



  1. இயற்றமிழ்
  2. இசைத்தமிழ்
  3. நாடகத்தமிழ்

இயற்றமிழ்

இயல்பாகவுள்ளது இயற்றமிழ் எனப்படும்.

செந்தமிழ் - பைந்தமிழ் - அந்தமிழ் - வண்டமிழ் - தண்டமிழ் - ஒண்டமிழ் - தென்றமிழ் - இன்றமிழ் - மன்றமிழ் - நற்றமிழ் - பொற்றமிழ் - முத்தமிழ் - தேந்தமிழ் - தீந்தமிழ் - பூந்தமிழ் - பழந்தமிழ் - இளந்தமிழ் - பசுந்தமிழ் - அருந்தமிழ் - இருந்தமிழ் -நறுந்தமிழ் - மாத்தமிழ் - சீர்த்தமிழ் - தாய்த்தமிழ் - ஒளிர்த்தமிழ் - குளித்தமிழ் - உயத்தமிழ் - வளர்த்தமிழ் - மரத்தமிழ் - அறத்தமிழ் - திருத்தமிழ் - எழிற்றமிழ் - தனித்தமிழ் - கனித்தமிழ் - பொங்குதமிழ் - கொஞ்சுதமிழ் - விஞ்சுதமிழ் - விளங்குதமிழ் - பழகுதமிழ் - அழகுதமிழ் - தூயதமிழ் - ஆயதமிழ் - கன்னற்றமிழ் - வண்ணத்தமிழ் - இன்பத்தமிழ் - செல்வத்தமிழ் - வெல்கதமிழ் - கன்னித்தமிழ் - முத்தமிழ் - அன்னைத்தமிழ் - தெய்வத்தமிழ் - அருமந்தமிழ் - அமிழ்தினுமினிய தமிழ்
.
இசைத்தமிழ்

.
உலகத்திலேயே இசையால் வளர்த்த மொழிகளுள் தமிழ் மொழி முதல் மொழியாகும். இந்த கருத்துக்கு வலிமை சேர்க்க ஆங்கில அறிஞர் கூறியதையும் குறிப்பிடலாம். " சிவனும் தமிழும் நடமாடும் போது எம் முன்னோர் குகைகுள் இருந்தார்கள்" . அதாவது நாகரிகம் அடையாத மக்களாய் வாழ்ந்தார்கள் என்பதேயாகும். நம் முன்னோர் பொருளறிந்து இசையறிந்து இசைத்தமிழை வளர்த்தார்கள். அக்காலத்தில் தான் தமிழோடு இசையும் வளர்ந்தது. உலகத்திலேயே நிறைய இசைக்கருவிகள் மீட்டிப் பாடிய பெருங்குடி நம் குடியாகத்தான் இருந்திருக்கிறது. முதன்முதல் முத்தமிழ் இலக்கண நூல் தோன்றியதும் எம் இனத்தில் தான். அகத்தியர் படைத்த அகத்தியம் வழி நூலேயன்றி மூல நூலல்ல. முந்து நூல்கள் அதற்கும் முந்தியவை. அவ் ஓலைச்சுவடிகளில் தமிழையும் இசையையும் ஆய்ந்து அறிந்து நம் முன்னோரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.அவை பத்தாயிரம் ஆண்டு காலத்துக்குரியவையாக இருந்திருக்கலாம். இனி
.
கருவி : கல்>கரு>கருவி
.
தோற்கருவிகள்
.
அடக்கம் , அந்தரி , அமுதகுண்டலி , அரிப்பறை , ஆகுளி , ஆமந்திரிகை , ஆவஞ்சி , உடல் , உடுக்கை , உறுமி , எல்லரி , ஏறங்கோள் , ஒருவாய்க்கோதை , கஞ்சிரா , கண்விடு தூம்பு , கணப்பறை , கண்டிகை , கரண்டிகை , கல்லல் , கல்லலகு , கல்லவடத்திரள் , கிணை , கிரிக்கட்டி , குட முழா , குண்டலம் , கும்மடி , கைத்திரி , கொட்டு ,கோட்பறை , சகடை , சந்திரபிறை-சூரியபிறை , சந்திவளையம் , சல்லரி , சல்லிகை , சிறுபறை , சுத்தமத்தளம் , செண்டா , டமாரம் , தக்கை , தகுணித்தம் , தட்டை , தடாரி , தண்டோல் , தண்ணுமை , தபலா , தமருகம் , தமுக்கு , தவண்டை , தவில் , தாசரி , தப்பட்டை , திமில , துடி , துடுமை , துத்திரி , துந்துபி , தூரியம் , தொண்டகச்சிறுபறை , தோல்க் , நகரி , நிசாளம் , படவம் , படலிகை , பம்பை , பதலை , பறை , பாகம் , பூமாடு , பெரும்பறை , பெல்ஜியக் கண்ணாடிமத்தளம் , பேரி , மகுளி , மத்தளம் , மதங்கம்முரசு , முருடு , மேளம் , மொத்தை , விரலேறு , ஜமலிகா என்பன தோற்கருவிகளாகும்.
.
நரம்புக்கருவிகள்

யாழ் , வீணை



ஊது கருவிகள்

இசைக்குழல் ( நாகசுரம் ) , புல்லாங்குழல் , மகுடி

உணர்வுகள்

புலத்தில் வாழும் குழந்தைகளும் நானும்.எம் பெற்றோரில் பலர் நினைக்கிறார்கள் படிப்பு என்றால் சப்புவது தான் என்று அதிலும் தமிழ்க்கல்வியை பொறுத்தமட்டில் தேர்வுக்காகவே குழந்தைகள் கட்டப்படுகின்றனர். சுற்றுலாவும் பெற்றுக்கொண்ட அனுபவங்களையே எழுதுவதும் ஆசானிடம் அதை ஒப்படைத்தலுமே அதாவது ஒப்படை குழந்தைகளை தமது தாய்மொழிப் பற்றை ஊக்குவிக்கும்.
.
குழந்தைகள் உண்மைதான் பேசுவார்கள்.
.
நாளுலா சென்ற வளர்நிலை நான்கு ஈ மாணவர்களின் உணர்வுகள்>:
*
'பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம் பூச்சி'
.
என்பது போல எனது மனம் மிக மகிழ்ச்சியாக 3.4.07 ஆம் திகதி இருந்தது. இது வெறும் நாளுலா மட்டும் இல்லாமல் ஒரு நல்ல அறிவுள்ள சுற்றுலா போன்று எனது உணர்வு கூறியது.லக்சிகனுடம் மற்றும் எல்லா நண்பர்களுடனும் சேர்ந்து பழகும் வாய்ப்பும் ஆசானுடன் சுதந்திரமாக கதைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் இதுவாகும்.
உணர்வுடன் சு. பவித்திரன்.
*
சென்ற செவ்வாய்க்கிழமை நானும் ஆசானும் சக நண்பர்களுடன் சென்ற சுற்றுலா மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. இது நல்ல அறிவுள்ள சுற்றுலா போன்ற எனது உணர்வு ஆகும். ஜெசிக்கா.
*
எனது நாளுலா உணர்வு, எனது இலைதுளிர் கால சுற்றுலா ஆசானும், தமிழ் பாடசாலை நண்பர்களுடனும் மிக மகிழ்ச்சியாகவும் அறிவுபூர்வமான ஒரு சுற்றுலாவாகவும் என் மனதில் உணர்ந்தேன்.
லக்சிகன்.
*
என்னுடைய நாளுலா உணர்வுகள், நான் மிகச்சந்தோசமாக எனது நாளுலாவை ஆசானுடனும் சக மாணவமாணவிகளுடன் பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தது எனக்கு மிகப்பிரயோசனமாக இருந்தது. நான் பல புதிய விடையங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. நான் நான்காம் வகுப்பில் எனது ஆசானுடன் சென்ற நாளுலாவை என்றுமே மறக்கமாட்டேன்.
சிவராம்.
*
எனது நாளுலா உணர்வு, நானும் சக மாணவர்களும் எங்கள் ஆசானுடன் சென்ற சுற்றுலா மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு நாளுலா திரும்பவும் வராதா என்று நினைக்கக் கூடியதாக அமைந்தது.
வதூஷன்.
*
எனது உணர்வு, 3.4.07 அன்று ஒரு நாளுலா ஆசானும் சக மாணவர்களுடன் ஒரு நாளுலா சென்றோம் அது மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. அந்நாளுலாவில் நீர்வீழ்ச்சி பழைய பொருட்கள், காட்சிகள் பார்த்தோம்.11 மணித்தியாலங்கள் பார்த்து மகிழ்ந்தோம்
அனுசா.
*
எனது உணர்வு, 3.4.07 அன்று நானும் எனது தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசானுடன் நாளுலா போனோம். நாங்கள் இயற்கை காட்சிகளையும் பல அறிவு சம்பந்தமான இடங்களையும் பார்த்தோம். இந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த நாளாகும். இதை என்றும் மறக்க முடியாது.
யொனாத்தன்.
*
உணர்வின் வரிகள், என் நண்பர்களுடனும் என் ஆசானுடனும் நான் நாளுலா சென்றேன். அந்த இனிய நாள் மீண்டும் வருமா என ஆசை படுகின்றேன். நாங்கள் உலகின் வளர்ச்சிக்கேற்ப முறையில் வளர ஆசைப்படுகின்றனர் பெற்றோர் அதை செயல் வடிவத்தில் உருவாக்க வழி நடத்தும் என் அன்பின் ஆசான் ஓயாமல் பணி தொடர கை கொடுப்பேன்.
என்றும் மழலைச்செல்லம் அஜந். சிவஞானம்.
*
எனது உணர்வு , 3.4.07 அன்று ஒரு நாளுலாவாக எனது தமிழ் ஆசிரியர் ஆசானும் சக மாணவர்களுடனும் நான் முதல் முறையாக சுற்றுலா சென்ற நாள் இதுவாகும் எனது படிப்பிற்கு மிகவும் உதவி கொடுக்க கூடியா ஒரு காட்சியாக இந்த சுற்றுலா சென்ற நாள் இதுவே முதல் நாள் உலா ஆகும்.

ஞாயிறு, 24 ஜூன், 2007

ஊர்மனை

*

எனது தாத்தா மண்ணைத் தோண்டினார்

தங்கம் கிடைத்தது

எனது அப்பா மண்ணைத் தோண்டினார்

தண்ணீர் கிடைத்தது

நான் மண்ணைத் தோண்டுகிறேன்

வெடிகுண்டுகள் கிடைக்கின்றன

எனது மகன் மண்ணைத் தோண்டும் போது

எலும்புக்கூடுகள் தான் கிடைக்கும்

*

  • அம்மானைக்கொண்டு ஆப்புவைக்கலாம் எண்டு பாருங்கோ சிங்களவர் நினைத்தவயள், ஆனால் இருட்டிலும் புலிக்கண் விழிப்பாய் இருக்கும் பாருங்கோ! அம்மானைப்போல ஆயிரம் பேரை கண்டவர் பாருங்கோ தலைவர் பிரபாகரன்; எல்லா இரண்டர்களும் கும்மாளம் கொட்டேக்கில, இவயளுகு !அ! எல்லாளன் தான் சரியான ஆள் சிங்களத்தாரின் தலையில ஆப்பிறக்கினார் ஆப்பு. புலிக்கே புல்லா?
  • சிரித்துக்கொண்டே தமிழர் மனுவை வாங்குகிறார்கள் பாருங்கோ (வெள்ளையர்கள்) சிந்திக்காமலே பணத்தைக்கொடுக்கிறார்கள் காணும் சிறிலங்காவுக்கு. இது தான் சொல்லுவார்கள் எங்கட படியாத சுருட்டுச்சுத்துகற கைநாட்டுகள் "சிரித்துக்கொண்டே கழுத்தறுப்பான் பார்த்துக்கொள்". அதிலும் நோர்வேகாரன் வலு கெட்டிக்காரன்.
  • நித்திரையில் நடக்கும் நோயில தமிழரை நாடு கடத்தினார்களாம் மகிந்தர் கூட்டணி.
  • செம்மணியில் மனிசரைப் புதைச்சுப்போட்டு பல்லியையும் பாம்பையும் தான் புதைச்சனாங்கள் எண்டேக்க நம்பின உலகம் தானே! நாசங்கெட்ட உலகம்
  • அந்தாள அதுதான் சிவராம கொண்டு போட்டு அந்தாளுண்ட மண்டைக்குள்ளேயும் கிளறிப்பாத்தாங்களாம் இந்தாள் இதுக்குள்ளேயும் ஏதும் மறைச்சு வைச்சிருக்கோ எண்டு.
  • புத்தனுக்கு எழுதின வரலாறு (மகாவம்சம்) ஒன்று எழுத்திப்போட்டு அதையிப்ப திரும்பவும் தமிழ்ரோட சண்டைய போட்டு புதுப்பிச்சுக்கொண்டெல்லே திரியினம் .
  • கறுப்பு யூலையில சூளை நெருப்புக்குள்ள போட்டு எரிச்சுப்போட்டு சேர்ந்து வாழ் சேர்ந்து வாழ் என்கிறான்களே எப்படி வாழுறது காணும்.
  • வெள்ளை நிற புத்தகோயிலில புத்தரின் இரத்தக்கண்ணீர் இது தான் சிறிங்காவோட நிலமை காணும்.
  • விறகு வெட்டத்தெரிஞ்சா, இளநீர் வெட்டத்தெரிஞ்சா நீங்க தான் ராசா சிறிலங்காவில.
  • ஆய்தம் எல்லாம் வேணாமாம் ' லாடர்' தந்தா காணுமாம்.
  • கீழால கொடுத்தது பத்தாது எண்டுகாணும் மேலால கொடுக்கப்போயினம்.
  • கொழுப்பில இருந்து அனுப்பின தமிழருக்கு புதுசா சத்துணவு திட்டமாமெல்ல கேள்விப்பட்டனீங்களோ?
  • சிங்கள இராணுவம் நிறைய சாகிறதுக்கு என்ன காரணம் தெரியுமே? பைல்லா தான்.
  • இனி நாய் வளர்க்கிற சனங்களெல்லாம் பொடியங்களோட கடுப்பா இருக்கப்போகுது. ஏனென்று சொன்னால் நாயையும் கவனமாய் பேணவேணுமாம். ஆள் சாப்பிடவே சட்டியில சாப்பாடில்ல. நாயெங்க சாப்பிடுறது.
  • இப்பவே உலகம் வெப்பமாகிக்கொண்டெல்லே போகுது காணும். வட துருவத்தில இருக்கிற பனி மலையெல்லாம் உருகிக்கொண்டெல்லே போகுது மகிழ்ச்சி கொள்ளாக் கூடாது கீழ்திசையில இருக்கிற சின்னச்சின்ன தீவெல்லாம் மெல்ல மெல்ல மூழ்கப்போகுது பாருங்கோ. இன்னுமொரு 2050 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகத்தில் பெரிய மாற்றம் வரப்போகுது. நாளைக்கு வரப்போற துன்பத்தைத் தெரியாமல் குதுமங்குத்துகினம் மக்களென்றால் பாருங்கவன்.
  • வறுமையைத் தாங்கலாம் வெறுமையைத் தாங்க முடியாது பாருங்கோ.
  • இப்பதான் சிறுவர் மேல் அக்கறை எடுக்கினம் பாருங்கோ உலகத்தார். அதுவும் கண் துடைப்பு தானோ பார்க்கலாம்.

புதன், 20 ஜூன், 2007

ஊர்களின்பெயர்

யாழ்ப்பாணம் (Jaffna) என்ற நாட்டின் பெயர் இலங்கையில் தமிழர் என்ற நூலில் செய்தித்தொகுப்புகளோடு கூறப்பட்டுள்ளது பக்கம்122 ஐ பார்க்கலாம்.

இஆழ்ப்பானாயந் பட்டினம் - (கி.பி 1435) , யாழ்ப்பாணம் - (கி.பி 1532 ), யாட்பாணம் - ( கி.பி 1603 ) , யாள்ப்பாணம் ( கி.பி 1604 ) , யாப்பாண பட்டனம் (கி.பி 1685 ) , கியல்பான தேசம் ( கி.பி 1715 ) , யாட்பாணதேசம் ( கி.பி 1734 ) ,

யாபா பட்டுன கி.பி 1450 ஆண்டளவில் எழுதப்பட்ட நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள்

  • பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி
  • திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை
  • பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை
  • நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு)
  • சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம்
  • திருநெல்வேலி - திண்ணைவேலி
  • சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை
  • சங்குவேலி
  • ஆல்வாய் - அல்வாய்
  • கருணைவாய் - கரணவாய்
  • பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை
  • புத்தூர்
  • கிளாலி ( பச்சிலைப்பள்ளி )
  • கரம்பன்
  • நாகர்கோயில்
  • பழை
  • தெல்லிப்பழை
  • கொட்டைக்காடு
  • அச்செழு
  • இடைக்காடு
  • வல்லிபுரம்
  • மன்னறத் - மன்னார்
  • யாவகர் சேரி - சாவகச்சேரி
  • கச்சாய்
  • சாவகக்கோடு

ஒல்லாந்து நாட்டு ஊர்களோடு ஒத்த எங்கள் ஊர்கள்.

  • காரைதீவு ( Amsterdam)
  • அனலைத்தீவு ( Rotterdam )
  • வேலணை ( Leyden )
  • நெடுந்தீவு ( Delft )
  • நயினாதீவு ( Haarlem )
  • புங்குடுதீவு ( Midelburg )
  • ஊராத்துறை ( Kayts )
  • ஊராத்துறைக்கோட்டை ( Halmenhiel)
  • காக்கைத்தீவு (Galienye )
  • பாலைதீவு ( Galue )
  • இரணைதீவு ( Twee Gebroeders )

சிங்களப் பெயரோடு ஒட்டும் எம் ஊர்கள்

  • இணுவில் [ ஹினிவில்/ஹினிவில - 'சின்னக்குளம்' 'சின்னவயல் வெளி', 'இனிவில்/இனிவில - பிரித்த வயல்வெளி ]
  • உடுவில் [ உடுவில - ' மேட்டுக்குளம்/மேட்டுவயல்வெளி ]
  • கொக்குவில் [கொக்காவில ( கொக்கா- கொக்கு) ]
  • கோண்டாவில் [ கொண்டவில/கொண்டாவில ]
  • மட்டுவில் [ மட்டிவில ]
  • சுருவில் [ சுருவில]
  • மத்துவில் [ மந்தவில - ' காய்வேளைக்குளம் ' ]
  • நுணாவில்
  • வேராவில் [ வேரவில ( வேர- கத்தரி,மஞ்சள்) ]
  • இத்தாவில் [ இத்தவில் ( இத்த' பூக்கொத்து' ' குலை' ]
  • மிரிசுவில் [ மிரிஸ்வில ( மிரிஸ் - மிளகாய் ) ]
  • வேவில் [ வேவில ( வே- பிரம்பு ) ]
  • கெருடாவில் [ கருடாவில - தேளுள்ளகுளம் ( கருட - தேள்)]
  • நந்தாவில் [ நந்தா -உடுப்பு துவைக்கும் பெண்]
  • நீவில் [ நீவில ( நீ - நீர்) ]
  • மல்வில் [ மல்வில ( மல் - மலர்,வேடர், மலை முதலிய பல பொருள் குறித்த ஒரு சொல்)]
  • முகாவில் [ முகவில ( முக- முதன்மை,விசேஷம்,சிறந்த)]
  • இருவில் [ ஹிருவில ( ஹிரு - எருக்கஞ்செடி)]
  • பண்டாவில் [ பண்டாவில ( பண்டர் - அரசகுமாரன்)]
  • சுளுவில் [ சுளுவில ( சுளு - சிறு) ]
  • தளுவில் [ தல - பனை,தாழ்வு ]
  • கூவில் [ குவில ( கு - அற்ப,சிறிய)]
  • யாவில் [ யாயவில ( யாய - பெருவெளி) ]

செவ்வாய், 19 ஜூன், 2007

தமிழரின் வாழ்வியல் சடங்குகள்

சட்ட+அம்+கு=சடங்கு

வாழ்வியல் சடங்குகளில் தமிழர் பேணவேண்டியவைகளை தொகுத்து தருகிறோம்.

*
*



திருமணம்
*
*
இரு மனம் இணைந்தால் திருமணம் என்பார். சில வேளைகளில் பெற்றோரின் கட்டாயத்தில் இருமனம் இணையாமலே திருமணம் நடந்தேறுகின்றது. ஆனாலும் திருமணம் என்ற சொல் தெய்வத் தன்மையோடு நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற சடங்கு பற்றி ' வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள்' என்ற நூலில் அழகாக எடுத்துக்காட்டுகளோடு மு.பெ.சத்தியவேல்முருகனார் எழுதியுள்ளார் அதை தேவை கருதி அப்படியே தருகிறோம்.
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான திருப்பத்தை உண்டு பண்ணுவது. திருமணம் என்கின்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது. திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத்தன்மை என்ற பொருளை உடையது என்று பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை செய்யும் போது கூறுகிறார்.
இன்னாருக்கு இன்னார் என்று தெய்வம் ஒரு திட்டம் போட்டு வைத்துள்ளது. அது நமக்குத் தெரிவதில்லை. அதனை இறைவனது மறைத்தல் தொழிலில் ஒன்றாகக்கொள்ளலாம். தெய்வத்தின் இந்தத் திட்டத்தை மீறி எந்தத் திருமணமும் கைகூடுவதில்லை என்பது கண்கூடு.
ஆக, இந்தப் பெண்ணுக்கு இந்த மணமகன் என்று திடீரென்று திருமண உறவு ஏற்படுதில்லை. அதாவது அது திடீரென ஏற்படும் ஒரு வாய்ப்பு அல்ல. எங்கேயோ ஒருவரை ஒருவர் அறியாமல் பிறக்கும் போதே தெய்வத்தின் திட்டம் அரும்பி விடுகிறது. ஆனால் அது நமக்குப் புலப்படுவதில்லை. எப்படியென்றால் ஒரு செடியில் தோன்றுகின்ற அரும்பு அதிகமாக நமக்கு புலப்படுவதில்லை. ஆனால் அந்த அரும்பே வளர்ந்து மொக்குளாகி முறுக்கிதழ் நீங்கி மலரும் போது மணம் வீசி மலரைக் காட்டிக்கொடுக்கிறது. அது போல புலப்படாமல் அரும்பாய் மறைந்து இருந்த தெய்வத்தின் பங்கு மலந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது தெய்வத்தின் மணம் அங்கே கமழ்கிறது.
அதனால் தான் அதனைத் திருமணம் என்று பெயரிட்டனர் பெரியோர். நம்மால் மீற முடியாத தெய்வத்தின் மணம் அங்கே வீசுவதால் அது திருமணம்.
இப்படி ஒரு பெரும் பொருளை வடமொழியில் கூறும் கல்யாணம் என்ற சொல்லில் காணமுடியாது. wedding என்ற ஆங்கிலச் சொல்லில் காணமுடியாது. திருமணம் என்று பெயர் வைத்த தமிழனின் கூர்த்த மதியே மதி.
*
*
தாலி
*
*
தாலி கட்டுதல் தமிழ் வழிவந்த திராவிட குடினருகே உரியது. இது வடவருக்கு உரிய பண்பாடு அல்ல. தாலி பற்றியும், ஏன் தாலி கட்டும் முறையை தமிழர் ஏற்படுத்தினார்கள்? என்பது பற்றியும் பார்ப்போம்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உள்ள உரையில் (திரணதூமாக்கினியர்) தொல்காப்பியர் கூறுவதாவது
.
" பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப "
.
அரண் - அரணம் - கரணம்
அரண் ( காப்பு ). ஒ.நோ காப்பரண், முன்னரண், அரண்மனை
அரண் என்பதே கரணம் என்றே திரிந்தது.
.
ஐயா என்போர் பொறுப்பில் உள்ள சான்றோரே அன்றி பூசை செய்யும் பூசாரிகளல்ல.
அதனால் தான் பாரதியும் பாடினார் "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே"
இனி..
.
மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் ஆணும் பெண்ணும் தாங்கள் விரும்புவோரை தெரிவு செய்து கூடி வாழ்ந்தார்கள். கூடி வாழும் போது முன்னையவளை விட ஒருத்தியை மனதுக்கு பிடித்து விட்டால் அவளோடு சென்று விடுவான். தன் முதல் மனைவியை தனக்கு தெரியாது என்றும் வாய் கூசாமல் கூறிவிடுவான். இப்படியே போனால் குமுகம் சீரழிந்து விடுமே என்று தான் பொறுப்புள்ள சான்றோர் தாலி கட்டும் சடங்கை கொண்டு வந்தனர். அதாவது திருமணம் செய்யும் ஆண் தான் மணந்து கொள்ளும் பெண்ணிடம் உறுதி மொழி கொடுக்கவேண்டும். அதை ஓலையில் எழுதி மாழை குழையில் இட்டு மஞ்சள் கயிற்றில் கோர்த்து கட்டவேண்டும். பெண்ணுக்கு பாதுகாப்பானது அவள் கழுத்தே என்று கழுத்தில் ஆணால் கட்டப்பட்டது. அதுவே தான் தாலி எனப்பட்டது.
.
தாலி என்ற சொல் பற்றி ஆராய்வோம்.
தாலம் என்பது பனையையும் அதன் ஓலையையும் குறித்தது. தாலம் - தாலி எனப்பட்டது.
.
தாலி பெண்ணுக்கு மட்டுமல்ல நம் பண்பாட்டுக்கும் வேலி.
.
ஆண் என்ற சொல்லின் வேர் ஆள்( ஆள்பவன் ) என்பதே . பெண் என்ற சொல்லின் வேர் பெள்-விருப்பம் அதாவது பெண் என்பவள் ஆணால் விரும்பப்படுபவள் என்பதே.
.
ஆள்>ஆண்>ஆண்மை>ஆணவம்
பெள்>பெண்>பெண்மை
.
பெண்ணே காப்பாற்றப்பட வேண்டியவள். எந்த ஒரு ஆணும் பெண் தன்னை காப்பாற்றுவதை
விரும்பமாட்டான் என்பதை தொல்காப்பியரும் கூறியிருத்தல் காண்க.
'வினையே ஆடவர்க்கு உயிரே'
.
இதிலிருந்து கூறியவற்றால் இக்காலத்திலோ இனி வருங்காலத்திலோ எந்தப்பெண்ணும் தாலியை ஆடவர் கழுத்தில் கட்டும்படி கூறமாட்டாள். தான் கழுத்தில் கட்டிய தாலியை பேணிக்காக்கக் கூடியவளாக வளர்ந்துகொள்வாள்.

ஞாயிறு, 17 ஜூன், 2007

உலக உலா

*
குடும்பச்சுற்றுலா
*
கிரேக்கம்
*
நாடு - கிரேக்கம்
.
தலைநகரம் - ஏதென்ஸ்அமைவிடம் - ஐரோப்பா
நாணயம் - யூரோ
.
பரப்பளவு - 131,944 km2
.
மக்கள் தொகை - 9,750.000
.
எழுத்தறிவு - 75%
.
மொழி - கிரேக்கம்
.
மதம் - கிரேக்க ஒக்டோடொக்ஸ்
.
வாழ்க்கை - 75 [ அகவை]
*
ஐரோப்பாவில் தென்கிழக்காக அமைந்துள்ளது.ஒரு பெரு நிலப்பரப்பையும் பல தீவுக்கூட்டங்களையும் ஒருங்கே கொண்டு, சுமார் 97 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நாடு. 1830 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. துருக்கியின் ' ஒட்டோமான்' ஆட்சியில் தனது கட்டுப்பாட்டிற்குள் இருந்து இன்று கூட அதன் தடயங்களும் நினைவிடங்களும் உள்ளது. பல தத்துவ மேதைகளையும், அறிஞர்களையும் தந்ததோடு உலகின் நாகரீக வளர்ச்சிக்கும் வித்திட்ட நாடு.சுற்றுலாத் துறையைப் பொறுத்த வரை நூற்றுக்கணக்கான் இடங்கள் உள்ளன. எவ்வேளைகளிலும் உலகின் பல பாகங்களிலும் இருந்து உல்லாசப் பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பர். உலகில் முதன் முதலாக (ஒலிம்பிக்) நடந்த இடம் இந்த கிரேக்கமாகும். 'அக்ரோபொலிஸ்' என்னும் மலைக்கோவில் மற்றும் பல பிரசித்தி பெற்ற அருங்காட்சியகம் போன்ற பல இடங்கள் உள்ளது. இன்று கூட ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனெஸ்கோ' வின் சின்னமாக இந்த 'அக்ரோபொலிஸ்' கட்டிட அமைப்பின் முகப்பு விளங்குகின்ற. மேலும் உலகிலேயே மிக அதிகமாக கப்பல் கட்டும் இடமும், சிறந்த கப்பல் ஓட்டிகள் வாழும் நாடாகும். மிகச் சர்வசாதாரமாக கப்பலை ஓட்டுவதும், சிறிய இடங்களுக்குள் மிக இலாவகமாக அதைத்திருப்புவதும் கொள்ளையழகு. தீவுக்கூட்டங்களிடையே அதிவேக படகுகளில் பயணிக்கும் போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அங்கு கட்டாயம் இருக்கைப்பட்டி அணிந்திருக்க வேண்டும் அந்தளவுக்கு பிரயாணம் அதி வேகமாக இருக்கும். இங்கு சீதோஷ்ண நிலை அண்ணளவாக எட்டு மாதத்திற்கு எங்கள் நாட்டு காலநிலை போன்றே இருக்கும். இங்கு இருக்கும் ' ஒலிவ் எண்ணை ' உலகப்பிரசித்தி பெற்ற தரமான எண்ணையாகும். இங்கு செவ்வரத்தம் பூ, வாழைமரம், மாதுளை மரம் போன்றவற்றை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். உல்லாசப்பிரயாணிகளுக்கு எற்ற நல்லதோர் தெரிவு கிரேக்கம்.
எழுத்து வடிவம் > சிவகுமரேஸ் நோர்வே.

சனி, 16 ஜூன், 2007

தமிழ் அறிஞர்கள்

தமிழிலக்கிய வாழ்வும் வளர்த்தவர்களும்
*
கருவிநூல்கள்< தமிழ் இலக்கிய வரலாறு , வெள்ளிப் பாதசரம்>
*
.
வரதபண்டிதர்
இப்பண்டிதர் சுன்னாகப்பகுதியிலே ஒல்லாந்தர் கால முக்கூற்றில் பிறந்தவர். அரங்கநாதன் என்பவர் இவருக்குத்தந்தை.சதுர்வேதம் ஆயுள்வேதங்களில் மிகுந்த அனுபவசாலியன்றி இலக்கண இலங்கியங்களை மிகவும் பயின்று திறகையுற்ற பாவாணருமாகச் சிவராத்திரிப்புராணம்,ஏகாதசிப்புராணம் என்னும் என்னும் இரு புராணங்களையும் பாடினார். சிவராத்திரிப்புராணத்தில் எழுநூற்றுப் பதினைந்து (715 ) விருத்தங்களும் மேற்குறிப்பிட்ட இரு புராணங்களைவிட அமுதாகரம் என்னும் பெரியமருத்துவ நூலையும் இவர் செய்தனன். அவற்றுள் முந்நூற்றுப்பத்து (310 ) விருத்தங்கள் உள்ளன.
"ஐயமின் முந்நூற்றையிரு விருத்தம்
செய்ய செந்தமிழாற் றெரிந்துரை செய்தனன்
கங்கை மாநதி சூழ் காசி மாநகரும்
பங்கமில் பங்கயப் பைந்துணர் மாலைலையும்
கோதகலோமதிக் கொடியுமிங் குடையோன்
கன்னியங்கமுகிற் கயவினங்குதிக்கும்
துன்னிய வளவயற் சுன்னைநன்னாடன்"
தாமோதரம் பிள்ளை
சி.வை. தாமோதரம் பிள்ளை ( கி.பி 1832 - 1901 ) பல பாட்டுகளையும் உரைநடை நூல்களையும் இயற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல்முதலில் பி.ஏ.பட்டம் பெற்றுச் சிறப்பாகத் தேறிய அவர், ஆங்கிலத்தில் பெற்றியருந்த புலமையையும் ஆராய்ச்சியறிவையும் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு நல்ல முறையில் பயன்படுத்தினார். அவருடைய பாட்டுகளும் உரைநடையும் பழைய முறையில் சொற்செறிவும் பொருட்செறிவும் உடையன. இன்று அவர் இயற்றிய நூல்கள் மறைக்கப்பட்ட போதிலும், பனையோலையில் இருந்த பழைய தமிழ் ஏடுகள் சிலவற்றைப் பெருமுயற்சியுடன் படித்து முதல்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறுக்கப்படவில்லை. நீதிபதி அளவிற்கு உயர்பதவி பெற்று விளங்கிய அவர், அக்காலத்தில் தமிழ்த் தொண்டைப் பெருமையாகக் கருதினார். உதய தாரகை என்ற தாளிகைக்கும் ( பத்திரைகைக்கும்) ஆசிரியராக இருந்து தொண்டு புரிந்தார். பனையோலை ஏடுகளைப் புறக்கணித்தால் பழைய நூல்கள் அழிந்துவிடுமே என்று பெருங்கவலை கொண்டு முதல் குரல் எழுப்பிப் பல தமிழ் நூல்களைக் காப்பாற்றியவர் அவர். தமிழ் மொழியைத் தாய் என்று வணங்கிப்போற்றும் அளவுக்கு முதல்முதலில் உணர்ச்சி ஊட்டியவர் அவர். " சங்கம் மரீஇய நூல்களுள் சில இப்போதுதானும் கிடைப்பது சமுசயம்... எத்தனையோ திவ்ய மதுர
கிரந்தங்கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!அயலான் அழியக் காண்கிலும் மனம் தளம்பிகின்றதே! தமிழ்மாது நும் தாய் அல்லவா? இவள் அழிய நமக்கு என் என்றுவாளா இருக்கின்றீர்களா?" என்று எழுதிய சொற்களில் தமிழ் மொழியிடத்திலும் இலக்கியங்களிடத்திலும் அவர் கொண்டிருந்த பத்தி உணர்ச்சி புலனாகிறது. (பரிதிமாற்கலைஞர்) வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் முதலான தமிழறிஞர் பலர் முன்னேற ஊக்கம் ஊட்டியவர் அவர்.
.
இலங்கையர்கோன்
மாணவப் பருவத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர் ' இலங்கையர்கோன்' இயற்பெயர் ந. சிவஞானசுந்தரம். பதினெட்டாவது வயதிலே இவரது முதற் கதையான ' மரிய மதலேனா' 1930 களில் ' கலைமகள்' இதழில் வெளியாகிற்று.
சமஸ்கிருதம், லத்தீன், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் ஆழ்ந்தபயிற்சி இவரை விரிந்த தளத்தில் சிந்திக்கவும் எழுதவும் வைத்தது. ஷேக்ஸ்பியர் இவரைப் பெரிதும் கவர்ந்தவர். இதன் விளைவாக நிறைய ஒற்றையங்க, தொடர் நாடங்களை எழுதினார். அவற்றுட் பல இலங்கை வானொலியில் நடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்களை மகிழச்செய்தன ' பச்சோந்திகள்' 'லண்டன் கந்தையா', 'விதானையார் வீட்டில்' ' மிஸ்டர் குகதாஸன்' ஆகியன மேடை நாடகங்களாயும் வெற்றிபெற்றன.
ஈழகேசரி,கலைச்செல்வி,ஈழநாடு,தமிழின்பம்,வீரகேசரி,தினகரன் ஆகிய ஈழத்து இதழ்களிலும், கலைமள், சூறாவளி, மணிக்கொடி,பாரதத்தாய், ச்க்தி, சரஸ்வதி, ஆகிய தமிழக இதழ்களிலும் இவரது படைப்புக்க்கள் வெளியாகின.
எல்லாமாக இவர் முப்பது சிறுகதைகள் வரை எழுதியிருப்பார் இவரது பதினைந்து சிறுகதைகள் அடங்கிய ' வெள்ளிப்பாதசரம்' என்ற ஒரே ஒரு தொகுதி 1962 ஆம் ஆண்டு வெளியாகிற்று. பிறநாட்டுக் கதைகளையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். நூலாக இவான் துர்க்கனேவின் ' முதற்காதல்' மட்டும் வெளிவந்துள்ளது.
' மாதவி மடந்தை' , ' மிஸ்டர் குகதாஸன்' என்ற நாடகங்களும் நூலுருப் பெற்றுள்ளன.
இவரது கதைகள் ' கதைக்கோவை' போன்ற திரட்டுகளில் அந்தக் காலத்திலேயே வெளியாகி உள்ளன.
தமிழில் சிறுகதை தோன்றி வளர்ந்த காலத்தில் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர்க ளில் ' இலங்கையர் கோன்' முன்னனியில் நின்ற ஒருவர் என்று அப்போதே பாரட்டுப்பெற்றவர். கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா,வல்லிக்கண்ணன் ஆகியோருடன் எழுதிக்கொண்டிருந்த இவரிடத்தில் கு.ப.ராவின் இலக்கியப்பார்வையும், நடையும் வசப்பட்டிருந்தன. எனினும் நாடக எழுத்தில் பல புதிய சிகரங்களை இவர் தொட்டிருக்கிறார். ஈழத்தமிழர் வாழ்வை மண்மணங்கமழ காவியநயத்துடன் உணர்ச்சி பொங்க சித்தரித்தவர் இவர்.
படைப்புத்துறையி மட்டுமன்றி சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய அழகுக்கலைகளிலும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தவர் அருங்கலை விநோதர் ' இலங்கையர் கோன்'
சட்டக்கல்லூரியில் பயின்று, வழக்கறிஞராகவும், நிர்வாக சேவையில் காரியாதிகாரியாகவும் (DIVISIONAL REVENUE OFFICEER) பணிபுரிந்தார்.
காரியாதிகாரியாக பணியாற்றுகிற போது தனது அருமையான பழகு முறையால் சாதாரண மக்களின் பேரபிமானத்தைப் பெற்றவரென்று சிறப்பு ' இலங்கையர் கோனு' டைய மானிட நேயத்தை உணர்த்தி நிற்கிறது. இவருடைய படைப்பின் தளமும் எழுத்தின் வசீகரமான வெற்றியும் இதுதான்.
.
கனகசபைப் புலவர்
யாழ்பாணத்துக் கனகசபைப் புலவர் ( 1829 - 1873 ) கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர். விரைந்து கவிதை இயற்றுபவர். திருவாக்குப் புராணம், அழகிரிசாமி மடல் என்னும் நூல்களைப் பழைய மரபை ஒட்டி இயற்றியவர்.
.
வி.கனகசபைப்பிள்ளை
வி.கனகசபைப்பிள்ளை ( 1855 - 1906 ) என்ற அறிஞரும் யாழ்ப்பாணத்துக் குடும்பத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தவர். ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த அவர், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், '1800 ஆண்டுகட்குமுன் தமிழர்' என்ற ஆராய்ச்சி நூல் எழுதியும் ஏடுகளை ஆய்ந்தும் தொண்டு செய்தார்.
.
தி.க.கனகசபைப்பிள்ளை
இலங்கை அளித்த வழக்கறிஞர்களுள் தி.க.கனகசபைப்பிள்ளை ( கி.பி. 1863 - 1922 ) என்பவரும் குறிப்பிடத்தக்க இலக்கியத் தொண்டு புரிந்தவர். வடமொழி வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தையும் சுந்தரகாண்டத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணத்தின் பாலகாண்டத்திற்கு உரை எழுதினார்.
.
நா. கதிரைவேற்பிள்ளை
நா.கதிரைவேற்பிள்ளை ( 1844 - 1907 ) மற்றொரு யாழ்ப்பாணப் புலவர். தமிழ்நாட்டில் பல சைவ நூல்களையும் நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். ஒரு நல்ல அகராதியும் தொகுத்தார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார்.
.
கு.கதிரைவேற்பிள்ளை
கு.கதிரைவேற்பிள்ளை ( 1829 - 1904 ) யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து தொண்டு புரிந்தார்.
.
சிவசம்புப் புலவர்
ஏறக்குறைய அறுபது செய்யுள் நூல்களை இயற்றிய யாழ்ப்பாண அறிஞர் சிவசம்புப் புலவர் ( 1830 - 1909 ) அந்தாதிகள் பல பாடியுள்ளார். எல்லாம் இடைக்காலத் தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றிப் பழைய போக்கில் பாடப்பட்டவை. சில நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
.
குமாரசாமிப் புலவர்
சுன்னாகம் குமாரசாமிப் புலவர் ( 1854 - 1922 ) வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார்; சாணக்கிய நீதி வெண்பா, மேகதூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை.சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு. சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதினார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த நல்ல வரலாற்று நூல். வேறு சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.
.
ஆறுமுக நாவலர்
.
யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று வளங்கியவர் ஆறுமுக நாவலர் ( கி.பி. 1822 - 1889 ) . அவர் சிலகாலம் தமிழ்நாட்டுக்கு வந்த சென்னையில் தங்கி தமிழ்த்தொண்டு செய்ததும் உண்டு. சைவ சமயப் பற்று மிகுந்த அவர். பெரிய புராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார். சென்று நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்புக்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப்படுத்தியவர் என்பர். பலர் தமிழ் நூல்கள் படிக்குமாறு படசாலை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு அச்சகமும் வைத்து நடத்தினார். அவற்றை நடத்துவதற்கு ஆகும் பணத்திற்கு வீடு வீடுடாகச் சென்று அரிசிப்பிச்சை எடுத்துத் தமிழ்த்தொண்டு செய்த சான்றோர் அவர். தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் நூல்களை அச்சிட்டுத் தரும் வகையில் சிறந்த வழிகாட்டிய விளங்கினார். மாணவர்களுக்கு உரிய தொடக்கப் பாடப் புத்தகங்களை எளிய தமிழில் இலக்கணப் பிழை அற்ற தமிழில் தாமே எழுதினார்.சைவ சமயத்தை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினார். இலக்கணத்தை எளிதில் கற்பதற்கு உதவும் நூல்களும் எழுதினார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதிப் பலர்க்கும் பயன்படுமாறு செய்தார். வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார். சென்ற ஆண்டில் தமிழில் உரைநடை வளச்சிபெறத் தொடங்கிய சூழ்நிலையில், அதற்கு நல்ல வழிகாட்டிப் பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்தார். தமிழ் உரைநடையின் தந்தை என்று அவரைக் குறிப்பிட்டுப் போற்றுதல் தகும்.

ஞாயிறு, 20 மே, 2007

கண்ணீர்

'எரியும் கொள்ளிகள் எல்லாமே நெருப்புக் கொள்ளிகள்'

நம்பி ஏம்மாந்தார் தமிழ்க்குடிகள். தெரிந்து ஏமாறினார் தமிழ் தலைவர்கள். நம்பவைத்து கழுத்தறுத்தார் சிங்களத்தார்.

1955 ஆம் ஆண்டுக்குப்பின் கருப்பு 'சூளை ' எரிப்பும் மண் இழப்பும்.

சேகரித்த செய்தித் திரட்டு

  1. யாழ். கிளாலி நீரேரியில் 50ற்கும் மேற்பட்ட பயணிகள் சிங்களப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நாள். ( 1993)
  2. முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை 1987 (ஜனவரி) 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  3. மணலாறு பிரதேசத்தை தடைவலயமாக்கி சிங்கள அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டிய நாள். ( 1984)
  4. யாழ் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தின் ( ரொக்கற்) தாக்குதலுக்கு உள்ளான நாள் ( 1984)
  5. பண்டா- செல்வா ஒப்பத்தம் கிழிக்கப்பட்ட நாள். ( 1958)
  6. மட்டு - பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் ( 1981)
  7. சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழத்தின் மொத்த நிலப்பரப்பான 20.369.1 சதுர கிலோமீற்றரில் (6500 ) ற்கும் மேற்பட்ட (சதுர கிலோமீற்றர்) நிலப்பரப்பு தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
  8. யாழ். வல்வை நூல் நிலைத்தில் சிங்களப்படை நிகழ்த்திய படுகொலையில் 50 - ற்கும் மேற்பட்ட மக்கள் பலி ( 1985)
  9. நெடுந்தீவு - குறிகட்டுவான் கடற்பாதையில் சென்ற 30 -ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடற்படையால் குமுதினிப் படகில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாள். ( 1985)
  10. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ( 31.05.1981)
  11. 150 தமிழர்களைப் பலிகொண்ட அம்பாறை பலிகொலை.
  12. சுதந்திரபுரப் பகுதியில் விமானத்தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
  13. மண்டதீவில் 31 குருநகர் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  14. 2-வது கொக்கட்டிச்சோலைப் படுகொலையில் 65 தமிழர்கள் சிங்களப் படையால் கொல்லப் பட்டனர். ( 12.06.1991 )
  15. நவாலி தேவலயத்தில் சிங்களஅரச விமானத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 141 தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
  16. தமிழருக்கு எதிராக, மிகவும் கொடுரமான பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலான நாள் 1979.
  17. 1- ஆம் கட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலை 35 பேர் இந்நாள் கொல்லப்பட்டனர்.
  18. அமைதியாக ஈழத்துக்கு வந்த இந்திய படை 8000 தமிழரை கொன்றுவிட்டு மீண்டும் அமைதியாக இந்தியா சென்றது.
  19. முல்லைத்தீவில் வள்ளிபுனம் செஞ்சோலை சிங்கள விமனக்குண்டு வீச்சில் 52 மாணவிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பின்னர் இறந்தார்.
  20. 1977 இனப்படுகொலை 400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 10 000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
  21. சிங்கள படையால் 600க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று செம்மணியில் புதைக்கப்பட்டனர்.
  22. 2- ஆம் கட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலை 19 பேர் கொல்லப்பட்டனர்.

புதன், 16 மே, 2007

அரியகலையூரின் (அரியாலை) பேரன்

சிவகுமார் சத்தியா னந்தனெனும் ஈழத்
தவப்புதல்வன் ஐப்பசித் திங்கள் - அவதரித்தான்
அப்பன் எதிர்பார்த்த வீரன் தமிழரசன்
ஐப்பசியே வீழ்ந்தான் மடிந்து

மடிந்ததம் சேயவன் நாட்டுப் பணியை
முடிப்பேனெ னத்தானு மொருவனாய்ப் - பொட்டு
படையணியிற் சேர்ந்து வெடிவிபத்தின் போதே
யுடல்சரித்தான் தந்தை அரசன்

மன்னனுக்கு மந்திரிபோல் மானத் தலைவனுக்
கண்ணன் மதியுரைஞர் போரிடும் - மண்ணாம்
தமிழீழ நம்நாட்டுத் தேசக் குரலோனே
மாமணியாய் வந்த திரு

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினாள் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

கரும்புலி வான்புலி எல்லைப் படையுமா
வாரிக் கடற்புலி காலால் தரைப்புலி
வேவுப்புலி வேங்கைப் புலனாய்வும் பெண்புலியும்
சாவுக்கு மஞ்சாப் படை

மூவிலக்க மக்களை முள்வேலிக் கம்பிக்குள்
ஈவிரக்க மின்றியே இலங்கையின் - தீவிலே
சாவடிக்கும் சிங்கள னாணவம் தூளாகத்
தீவிரமாய்ப் போரிடுவோம் நாம்

உலக வலமும் வடமலை நோர்வே
வலமும் தமிழீழ மக்கள் - நிலையும்
கூறி யுலகத் தமிழரை யொன்றிணைக்கும்
பேரிகையே நம்வான் முரசு

ஞாயிறு செவ்வாய் வியாழன் தினங்களில்
நேயமிக்க நல்லோ(ர்) ரொலிவிளம்பி யென்றே
முழங்குக சங்கே முழங்கு

அன்னைநம் பூபதிநல் கல்விக் கலைக்கூடம்
சென்று பயிலடா தம்பீஇ - நன்றாய்
மொழியூறும் தெள்ளு தமிழ்ப்புலமை கொண்டு
செழும்பா செயலாமே நீ

கொக்குப்போல் கூகையை வெல்லும் வலகரக்
காக்கைபோல் பாயும் வரிப்புலிபோன்ம் - திக்கெட்டும்
வாழும் தமிழரே நாம் வலிமையானால்
ஈழம் மலரும் விரைந்து

எரிபொருளு(ம்) மேவுமெரி குண்டும் வடக்கே
யுருகும் பனிமலையும் காட்டு – மரத்தீயும்
ஓட்டை விழுமோசோன் மண்டலமும் வெய்யிலின்
சூடும் கடற்கோளும் கேடு

நிலமிசை நீள்வான் கடலிசை சோலை
மலர்மிசை மூச்சுக் குழலிடை – விலிமையுந்
தாழா வுறுதியும் தந்தவரே நம்தமிழ்
ஈழமா வீரர் நிறைந்து

செந்தமிழ் மண்ணைப் புடைசூழ்ந்து சூறையாடி
கந்தகமும் வெந்தணலும் தூவித் தமிழீழ
மாந்தரை கொன்றழித்த கொல்மகிந்த
குந்தகச் சிங்களத்தைக் கொல்

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்க
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க(ள்) அவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

வீரனாய் தீரனாய் ஈழநாட் டரசனாய்
கீரனாய் சூரிய தேவனாய்ப் - பிரபா
கரன் வாழ்ந்தாரே காண்

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினால் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்கச்
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க ளவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

ஈழமண் மீட்புப்போ ரில்கள மாடி
விழுந்தனன் சங்கரும் வித்தாய் - எழுந்தது
மீண்டும் நடுகல் வழிபாடு போற்றிப்
பணிந்து தொழுவோமே நாம்

அரியாலை யூரிலே யமர்ந்திருப்பா ளம்பாள்
அருள்மிகு தெய்வ முமவளே - பிரப்பங்
குளமுத்து மாரியம்மன் நல்கு மருள்வேண்டி
யுள்ளம் தொழுதேன் நினைந்து.

ஊரெழு மண்ணிற் பிறந்து திறமைகள்
தீரமாய்க் கற்றுக் கரிகாலன் - போரியல்
வீரனாய்த் தேர்ந்து மதியுரைஞ் மாணவனாய்ப்
பேராள னாய்த்திகழ்த் தான்

முடியுமென் போர்க்கவர் மூச்சே தடையன்று
முட்டிமோ தியேனுந் தாய்மண் - விடிவு
வருமென யெண்ணி முடி

ஊரெழு மண்ணிற் பிறந்து திறங்கள்
தீரமா யமைந்து மருத்துவத் தேர்விலுந்
தேர்ந்து தமிழீழ நாட்டுக்காய் திலீபன்
ஆற்றிய தொண்டே சிறப்பு

ஆழிப்பேய் வந்தூழித் தாண்டவ மாடி
யுழித்ததே யெம்மழகு நாட்டை – மழலையர்
தாய்மார் சிறுவர் பெரியோ ரெனவங்கு
மாய்ந்தனரே பாழ்பாடு நாள்

மேலைத் துருவத்தின் நோர்வே நிலத்திலே
ஆல்போ லிலங்கு மருந்தமிழைச் - சாலவும்
ஆய்ந்தப் புலமையிற் சொல்பொருள் நற்சுவையிற்
தோய வமைத்த களம்

கத்தியும் கதறியும் காப்பாற்ற வாரின்றி
யேதிலியாய்ச் சென்று சிறைபட்டோம் - புத்தாண்டோ
புத்தாண்டாய் இந்நாட்டில் வந்துமென்ன பாரும்
புதைகுழியிற் தானேநம் வாழ்வு

தலைவன் பிரபா கரனியக் கத்தில்
தறைமுறை காக்க விணைந்து – புலியாய்
செருக்கள மாடிவீழ்ந்த நம்மாவீ ரர்தம்
பெருமையோ டெண்ணிப் பணித்து

ஒற்றைச் சிறகிழந்து மோயாத வீரனவன்
சற்று முறுதி குலையா – மறவன்
கரிகாலன் தூது வனாயுல கெங்குங்
குரலெழுப்பி னான்தமிழ்ச் செல்வன்

புனித வுடைக்குள்ளே பேயாவி வாழுவதோ
புன்செயலால் ஈழத்தில் புத்தனெறி ஊன்றிடுமோ
புண்ணியன் சித்தார்த்தன் சொல்காக்கு மெப்போதும்
நன்மணி மேகலையே காண்

உயிரை நினைந்து விடுதலை நாள்மறந்து
மாய்தல் மறவர் சிறப்பல்ல – வயிரம் போல்
தாய்மானங் காக்கும் பிரபா கரன்வழியே
பாயும் புலியாகி வா

பாமாலை

அகர மமுதா எழுதி வழங்கும்
முகனை எதுகை மரபியல் - பாக்கள்
இணைவலையில் காணலாம் கற்கலாம் நீயிர்
வெண்பாவும் வடிக்கலாம் போய்

பங்குனித் திங்கள் பதினொராம் நாளன்று
எங்களது வீடும் இலங்கிற்று – கங்குலுஞ்
ஞாயிறுங் கைசேர்த்த போதுநம் சாமந்தி
சேயாய் கிடைத்ததே பேறு


அந்திப் பகல்காரி கார்த்திகைத் திங்களிலே
செந்நாப் புலவோர் அருந்தமிழ்ப் - பந்தலிலே
செய்யுளுஞ் சித்திரமுஞ் சேர்த்தே குணதாசன்
பயிற்றிய பாடமோ நன்று

உதயா வசியு மிணைந்தால் போதும்
இதமாய் வருடு மிசைவரி ரெண்டும்
புதமாய்ச் சுரத்தில் கதைகளுஞ் சொல்லும்
புதிய யிசை வார்ப்பு

கட்டளை கலித்துறை

செவ்வையும் மஞ்சளும் வண்ணங்கள் வீரத்தோ டமைதியாய்
செவ்வக் கொடியிற் சீறும்வரி புல்இ வலிமையதாய்
மாவலி வேந்தன் கரிகாலன் தந்த படைஞருமாய்க்
காவியஞ் செய்தே யெழுந்தாரே ஈழ நிலந்தனிலே

**

கதிரவேலு.பொன்னம்பலம்.சத்தியானந்தன்
முப்பாட்டன்,பாட்டன்,ஐயா
ச.உதயன்

செவ்வாய், 15 மே, 2007

செந்தமிழ்ப்பாட்டு

1
கடவுள் வணக்கம் ( படர்க்கைப் பரவல் )
' பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு
இசைத்த பண்ணிற் பாடுக தாளம் - முன்னை/ ஆதி
ப.
காலையிலே விழித்தெழுவோம் - முதற்
கடவுளின் அழகிய கழலிணை விழுவோம்
கைகுவித்தே தொழுவோம் ( நாளும்) ( காலை)
அ.
வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி
வினைகளை முறையே நிறைவேற்றி
மாலையில் நல்ல மனவமைதியுடன்
மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்) ( காலை)
*
நூல்>இசைத்தமிழ் கலம்பம்
ஆசிரியர்>'மொழி ஞாயிறு' ஞா.தேவநேயப்பாவாணர்
*
2
*
தமிழின் பதினாறு தன்மை
ப.
தொன்மையொடு முன்மை
தென்மையொடு நன்மை
தாய்மையொடு தூய்மை
தழுவிளமை வ்ளமை
அ.
எண்மையொடும் ஒண்மை
இனிமையொடும் தனிமை
செம்மையொடு மும்மை
திருமையொடும் அருமை
அ.
இங்ஙன்பதி னாறு
இலகுந் தமிழ்க் கூறு
எங்குமேயிவ் வாறு
எடுத்துமிகக் கூறு
*
நூல்> இசைத்தமிழ் கலம்பகம்
ஆசிரியர்> 'மொழி ஞாயிறு' ஞா.தேவநேயப்பாவாணர்
*
3
*
இதுவும் அது ( தமிழ நாகரிக முன்மை )
*
' கப்பற்பாட்டு' மெட்டு அல்லது வேறிசைந்த மெட்டு
*
மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே
மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!
*
மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே
மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே!
*
பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழே
பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே!
*
பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழே
பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே!
*
அரசியலை முதன்முதலாய் அமைத்தவனும் தமிழனே
அறம்வளர நடுநிலையாய் ஆண்டவனும் தமிழனே!
*
அரிசியினாற் சோறுமுதல் ஆக்கியவன் தமிழனே
அறுசுவையாய் உண்டிகளை அருந்தியவன் தமிழனே!
*
பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே
பலமுறைமீன் புலிவில் அதிற் பதித்தவனும் தமிழனே!
*
கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே
கலப்படையால் குணத்தீவும் காவல்பூண்டான் தமிழனே!
*
வடிவேலால் எறிகடலை வணக்கியவன் தமிழனே
வடிம்பலம்ப நின்றபெரு வழுதியொரு தமிழனே!
*
துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே
பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே!
*
இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே
ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே!
*
கடவுளென்று முழுமுதலைக் கண்டவனும் தமிழனே
கரையிலின்பம் நுகரவழி காட்டியவன் தமிழனே!
*
ஆசிரியர்>' மொழிஞாயிறு'