கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 19 நவம்பர், 2012

மாயான்


ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்க
ள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.

மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
*
“சரியாக டிசம்பர் 21 உலகம் அழியப் போகிறதா?” என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! ‘மாயா’.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.


*



சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்….

கடந்த பகுதியில் , சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த 
இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி. மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.

சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?

அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன். இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.

இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.

இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.

அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.

ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.

ஆனால் இது……..! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா….?

ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.

அந்தப் படம் இதுதான்……..!


*

“முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…? இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…? ஆ
னால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை. சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது. அவை என்ன தெரியுமா……..? மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன. அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது. என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள். உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.





Andrew Stalin



முன் குறிப்பு:
இந்த பதிவு மாயன் களின் வரலாற்றை அறிந்து கொள்ள மட்டுமே.. இதற்கும் உலக அழிவு பற்றிய தகவலுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை..பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு அறிவுடைய இனத்தை பற்றிய பதிவு மட்டுமே.- sara

மாயா இனத்தவர் உருவாகிய நாட்காட்டியின் அடிப்படையில் சொன்ன உலக அழிவை பற்றி பேசும் நாம். மாயன்களின் வரலாறை சிறிதளவேனும் அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவியல், கணிதம், கட்டடக்கலை, வானிலை, சித்திரம், சிற்பம் என்னும் பன்முக திறமை கொண்ட மாயன் இனத்தவருக்கு, இன்னுமொரு ஆச்சர்யமான முகமும் இருந்திருக்கிறது. அது யாருமே ரசிக்கமுடியாத, சகிக்கமுடியாத ஒரு முகமாகவும் இருந்திருக்கிறது.

மாயன் இனத்தவர் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள். அவர்களின் அதிகபடியான கடவுள் பக்தியே. அவர்களின் காட்டுமிராண்டி தனத்துக்கு காரணமாக இருந்தது. உலகில் இருக்கும் அணைத்து மதங்களிலும் காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்து வந்தது, இன்றும் இருந்து வருகிறது. ஆனால் மாயன்கள் கடவுளுக்கு செலுத்திய காணிக்கை கொஞ்சம் வித்தியாசமானவை அது என்ன தெரியுமா...? மனிதர்களின் தலையும், இதயங்களும் தான்அவர்கள் வணங்கும் கடவுள்களில் மிக முக்கியமான கடவுள்களுக்காக பல பிரமிடுகளையும் கட்டியிருந்தார்கள். அப்படி கட்டப்பட்ட பிரமிடுகளின் உசிகளில் தான் கடவுள் தொழுகை நடக்கும். அங்குதான் பலிகொடுக்கும் மனிதர்களை கொண்டு சென்று அவர்களை உச்சியில் உள்ள பீடத்தில் படுக்க வைத்து... கூறிய வாளால் வெட்டுவார்கள் . வெட்டப்பட்ட தலை பிரமிடின் உச்சியிலிருந்து படிகள் வழியே உருண்டபடி கீழே விழும்.

இவ்வளவு நாளும் மிக நாகரீகம் உள்ளவர்களாக அறிவாளிகள் போல பார்க்கப்பட்ட மாயன்கள் இப்படி ஒரு காட்டுமிராண்டிகளா? என நீங்கள் முகம் சுழிபீர்கள். அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.ஆதிகாலத்தில் இது தப்பான விசயமாக கருதப்படவில்லை தெய்வாதீனமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்து மதத்திலும் கூட பல இடங்களில் நரபலி பற்றி பல கதைகள் கூறபட்டிருக்கின்றன. இதில் மாயன்கள் கொஞ்சம் கொடூரமாகவே இருந்திருக்கிறார்கள்.

மாயன் இனத்தின் வளர்சிகள் ஆரம்பித்தது கி.மு 10000 ஆண்டு அளவுகளில் தான் படிப்படியாக வளர்ந்த மாயன் நாகரீகம் கி.பி 300 இருந்து 700 ஆண்டுகள் வரை உச்சத்தை தொட்டது. சூரியன், மலை காற்று மரணம் மருத்துவம் சந்திரன் என பல கடவுள்கள் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அவர்கள் விவசாயத்தில் வல்லவர்களாக அந்த காலத்திலேயே இருந்த காரணத்தால், சோளத்துக்கே(maize -corn) கடவுள் ஒன்றை வைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, பெண் கடவுள்களும் மாயன்களிடம் உண்டு.
மாயன்கள் தற்கொலைக்கென IXTAB என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தனர்.
தற்கொலை தவறான ஒன்றாக மாயன்கள் கருதவில்லை. தற்கொலை செய்பவர்கள் சொர்க்கத்தில் கடவுளின் அருகே இருப்பார்கள் என்பது மாயன்களின் நம்பிக்கை.

தாங்கள் வணங்கிய கடவுளுக்காக, கோவில்களையும் பிரமிட்களையும் மாயன்கள் மிக பிரமாண்டமாக கட்டினார்கள். அதுவே அவர்கள் இன்றளவும் பேசப்படும் ஒரு இனமாக இருப்பதற்கு காரணமாயும் அமைந்தது. ஆனால் அதுவே அவர்களின் அழிவுக்கு காரணமாகவும் அமைந்தது. மாயன்கள் எப்போதும் ஒரே பேரரசுக்கு கீழே வாழ்ந்து வரவில்லை. பல அரசுகளை மாயன் இனத்தவர் தமக்காக ஏற்படுத்தி இதனால் இவர்களிடையே பல போர்கள் நடந்து வந்தன. கி.பி 900 ஆண்டுகளில் இருந்து கி.பி 1100 ஆண்டலவுகளில் மாயன்களில் பலர் திடீரென கூண்டோடு மாயமாக மறைந்ததும் நடந்தது. இது பற்றி தான் நான் ஆரம்பத்திலேயே எழுதிருந்தேன்
அவர்கள் எப்படி மறைந்தார்கள் என்னும் மர்மம் பற்றி இன்றுவரை சரியான விளக்கம் கிடைக்காவிட்டாலும், அவர்களுக்கிடையே நடந்த போர்களில் தான் அழிந்தார்கள் என்று கருதுபவர்களும் உண்டு.

எஞ்சிய மாயன்கள் AZTEK, INKA என இரண்டு பெரிய அரசுகளாக பிரிந்து வடக்கிலும், தெற்கிலும் வாழ்ந்து வந்தனர். இவை தவிர்த்த மற்றவர்கள் சிதறிய நிலையில் ஆங்காங்கே பறந்து வாழ்ந்தும் வந்தனர்.

இந்த காலகட்டத்தில் தான் மாயன்கள் நோக்கி பல ஆபத்துகள் வந்தன. விரிந்து பறந்து இருந்தது அமெரிக்க பெருங்கண்டம். வடக்கு, மத்தி, தெற்கு என பிரியாமல் ஒன்றாக இணைந்த பெருகண்டமாக இருந்தது. பெரிய வளங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவற்றை கைப்பற்றிக்கொள்ளும் என்னதிது இருந்தன ஐரோப்பிய நாடுகள் .
பெரும் நிலப்பரப்பாய் விரிந்திருந்த அமெரிக்காவை ஐரோப்பாவின் பல நாடுகள் துண்டுகளாக்கி தம் வசமாக வைத்திருந்தன. அதில் மாயன் பிரதேசங்கள் பக்கம் தன் பார்வையை திருப்பியது ஸ்பெயின் நாடு.

கொலையும், கொள்ளையும், அபகரிப்பும் தான் அமோகமாக அரங்கேறியது. பீரங்கிகளை பார்த்திராத மாயன்களின் YUCATAN மாநிலம் ஸ்பானியர்கள் வசம் வந்தது. நிலத்தை கைப்பற்றிய ஸ்பானியர்கள் அத்துடன் நிற்கவில்லை. எந்த நாட்டை கைப்பற்ற சென்றாலும் ஒரு கையில் பீரங்கியும் மறு கையில் பைபிளுமாக செல்வதே அவர்களின் வழக்கம். கத்தோலிக்க மதத்தில் தீவிரமாக இருக்கும் ஸ்பானியர்கள், அடுத்தவர் மதத்தை மதிக்கும் வழக்கமே இல்லாதவர்கள்
தங்களின் மதத்தை பரப்புவதிலேயே குறிக்கோளாக இருப்பவர்கள். இதனால் மாயன்களின் பல கடவுள் வழிபாட்டையும் வழிபாடு முறையையும் ஸ்பானியர்கள் ஏற்றுகொள்ளவே இல்லை. மாயன்கள் தங்கள் மதங்களை தூக்கிஎறிந்துவிட்டு கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற வேண்டும் என்றால் ஆயுதத்தால் மட்டும் முடியாது என்பதை உணர்ந்தார்கள். இதற்காகவே ஸ்பெயினிலிருந்து கிறிஸ்துவ மத குருவான DIEGO DE LANDA வந்திறங்கினார்.
கி.பி 1549 ஆண்டில் மாயன்களின் பெருநிலமான யுகாடனுக்கு வந்து சேர்ந்தார். ஆரம்பத்தில் மாயா மக்களுடன் நல்லவர் போல உறவாடிய அவர் மாயன்களை பற்றி முழுமையாக தெரிந்த்கொண்டு இறுதியில் அவர் செய்த விஷயம் தான் இன்றும் கண்டிக்கபடுகிறது.. அதுவே மாயன்கள் பற்றி யாரும் முழுமையாக அறியாமல் செய்தது
சிலர் இதை ஆதரித்தாலும் பலர் கோவத்துடன் இப்படி செய்துவிட்டாரே என கோபத்துடன் கொதித்தார்கள். அப்படி என்ன தான் செய்தார்?
ராணுவ அடக்குமுறையுடன் மாயனை நசுக்கிய ஸ்பானியர்களின் மத்தியில் அன்பான முகத்துடன் அகிம்சை வடிவமான லாண்டா நல்லவராக தெரிந்தார் மாயன்களுக்கு. மாயன்களுடன் பழகிய லாண்டா படிப்படியாக தனது மத போதனையை ஆரம்பிக்கதொடங்கினார். மாயன்களின் கடவுள் வழிபாட்டை விட சொல்லி வற்புறுத்தினார். ஸ்பானியர் மீது இருந்த பயத்தால் அதை ஆதரிப்பது போல இருந்த மாயாக்கள். தங்கள் தெய்வங்களை ரகசியமாக வணங்கி வர தொடங்கினர். இரவுகளில் சில மணி நேரங்கள் காணமல் போனார்கள் மாயாக்கள். அவர்கள் இரவில் எங்கே போகிறார்கள் என்று மறைந்து பார்த்த பொது தான் உண்மை தெரிந்தது
மாயாக்கள் இரவில் தங்களால் மறைத்து வைக்கபட்டிருந்த கோவிலுக்கு சென்று தங்கள் கடவுள்களை வழிபட்டு வந்தனர். அதை அறிந்த லாண்டா செய்த செயல் தான் இன்றளவும் கண்டிக்கபடுகிறது. வானியல் அறிவியல் விவசாயம் கட்டிட கலை என மாயன் பல ஆயிரம் ஆண்டு ஆராய்ச்சி செய்து புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர். அதை மொத்தமாக ராணுவ உதவியுடன் தீயில் போட்டு கொளுத்தினார் லாண்டா.

வரலாற்றில் பல மதங்களில் பல இடங்களில் இந்த கொடுமை நடந்துள்ளது. இதையே லாண்டாவும் செய்தார். அவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் பொன் போல கிடைக்கவே முடியாத பொக்கிஷங்கள். இவை எல்லாம் இப்போது நமக்கு கிடைக்க பெற்றிருந்தால் நான் ஆரம்பத்தில் சொன்ன பல மிஸ்டரி என படும் விடை தெரியா மர்மங்களுக்கு சுலபமாக விடை கிடைத்திருக்கும்.

லாண்டாவினால் அழிக்கப்பட்ட ஆயிரகணக்கான நூல்களில் அவர்கள் கண்ணில் படாமல் தப்பிய நூல்கள் நன்கு மட்டுமே
The Madrid Codex, The Dresden Codex, The Paris Codex, Grolier Codex என்பவையே அந்த எஞ்சிய நூல்கள். அவையும் பின்னாட்களில் ஐரோப்பிய தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஸ்பெயினில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும், பிரான்ஸ் இல் ஒன்றும், மெக்சிகோவில் ஒன்றுமாக அருங்காட்சியகத்தில் வைக்கபட்டிருக்கிறது.
மான் தோலை பாடமாக்கி, விசிறி போன்று மடிக்கப்பட்டு புத்தகங்களாக உருவக்கபட்டிருக்கின்றன அவை.

ஆயிரகணக்கான புத்தகங்களை எரித்த கொடுமையை மாயன்களுக்கு செய்வதாக நினைத்து ஒட்டு மொத உலகிற்கே செய்தார் லாண்டா
ஆனால் உண்மை அவ்வளவு சுலபமாக அழிந்து விடாது அல்லவா....!
தங்கள் நூல்களில் உள்ள சில விசயங்களை அவர்கள் கட்டிய கோவில்களின் சுவர்களில் சித்திர எழுத்துக்களாக வடித்து வைத்திருந்தனர். லட்சகணக்கான எழுத்துக்களை சுவர்களில் வடித்திருந்தனர்.

லாண்டா செய்த இச்செயல் அக்கலங்களிலேயே கிறிஸ்தவர்கள் பலராலேயே கண்டிக்கப்பட்டது, இது சர்வாதிகாரம் என்ற எண்ணமும் தோன்றியது. அதனால் லாண்டா செய்தது சரிதான் என்று உலகை நம்ப வைக்க வேண்டிய கட்டாயமும் வந்தது எனவே எதை சொன்னால் இது நியாயமாகும் என யோசித்தனர். அதற்க்கு அவர்கள் ஒரு துருப்பு சீட்டை கையில் எடுத்தனர். மாயன்கள் நரபலி கொடுப்பவர்கள் அவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள். எனவே இவர்களின் நூல்களும் கொடூரமானதாகவே இருக்கும் இதை அளித்தால் தவறு ஏதும் இல்லை என கூறினர். இதன் இன்றைய ஒரு வடிவம் தான் மெல் கிப்சன் எடுத்து வெளியிட்ட "அபோகலிப்டோ" மாயங்களை மிகவும் கொடூரமானவர்களாக சித்தரித்தது அந்த படம்.

மாயன்களின் மதங்களையும், அவர்களின் நிலைபாடுகளையும் பார்க்கும் போது இந்துக்களின் சாயல் அவர்களுக்கு இருக்கிறதே என்ற எண்ணம் பலருக்கு தோன்றாமல் இல்லை. மாயக்களுக்கும் இந்துக்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என சிலரால் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டது .அதில் கிடைத்த சில பதில் பிரமிக்கவும் வைத்தது.ஏன் தமிழர்களுக்கும் மாயக்களுக்குமே தொடர்பு உண்டு என்று ஒரு அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார் .

(இந்த பதிவில் அந்த கால மதவாதிகளின் போக்கை மட்டுமே கூறியுள்ளோம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை )

தகவல்களை தொகுத்து வழங்கியது – sara



3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை தான்...

பெயரில்லா சொன்னது…

aaah.... Padu thrilling ah last vara sollitu ... Adutha pathivu nu twist vechitinga leh...,?

rajendran சொன்னது…

சிலப்பதிகாரத்தில் மயன் என்பவர் தேர், நாடக அரங்குகள், மாடமாளிகைகள் வடிவமைப்பாளராக இருந்தார் என்று படித்துள்ளோம்.