கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 3 அக்டோபர், 2012

நாகராஜன்


இவர் பெயர் நாகராஜன். கடலூரைச் சேர்ந்த இவர் சிதம்பரத்தில் MSc, Software Engineering final year படிக்கிறார். இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றியைத் தந்திருக்கின்றது. 

தவுட்டிலிருந்து எரிவாயு(gas) உற்பத்தி செய்யலாமெனக் கண்டுபிடித்துள்ளா
ர். இரண்டு பக்கம் அடைக்கப்பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அதைச் சூடு படுத்தினால், அங்கு எரிவாயு உருவாகி அந்த டப்பாவிலிருந்து சின்னக் குழாய் மூலமாக வெளிவருகின்றது. அதைத் தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிறத்தில் அழகாகப் பிரகாசமாக எரிகின்றது. இந்த எரிவாயுவைச் சிலிண்டரில் அடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்த முடியுமென நாகராஜன் கூறுகிறார்.

ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவைக் கண்டுப்பிடித்த நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாளி. இப்படியான சிறிய வாழ்க்கைக்கு உதவக்கூடிய கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்துவோம். நன்றி.

கருத்துகள் இல்லை: