கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 20 மே, 2007

கண்ணீர்

'எரியும் கொள்ளிகள் எல்லாமே நெருப்புக் கொள்ளிகள்'

நம்பி ஏம்மாந்தார் தமிழ்க்குடிகள். தெரிந்து ஏமாறினார் தமிழ் தலைவர்கள். நம்பவைத்து கழுத்தறுத்தார் சிங்களத்தார்.

1955 ஆம் ஆண்டுக்குப்பின் கருப்பு 'சூளை ' எரிப்பும் மண் இழப்பும்.

சேகரித்த செய்தித் திரட்டு

  1. யாழ். கிளாலி நீரேரியில் 50ற்கும் மேற்பட்ட பயணிகள் சிங்களப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட நாள். ( 1993)
  2. முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை 1987 (ஜனவரி) 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  3. மணலாறு பிரதேசத்தை தடைவலயமாக்கி சிங்கள அரசு அங்கிருந்த தமிழர்களை அடித்து விரட்டிய நாள். ( 1984)
  4. யாழ் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தின் ( ரொக்கற்) தாக்குதலுக்கு உள்ளான நாள் ( 1984)
  5. பண்டா- செல்வா ஒப்பத்தம் கிழிக்கப்பட்ட நாள். ( 1958)
  6. மட்டு - பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட நாள் ( 1981)
  7. சிங்களக் குடியேற்றங்களால் தமிழீழத்தின் மொத்த நிலப்பரப்பான 20.369.1 சதுர கிலோமீற்றரில் (6500 ) ற்கும் மேற்பட்ட (சதுர கிலோமீற்றர்) நிலப்பரப்பு தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.
  8. யாழ். வல்வை நூல் நிலைத்தில் சிங்களப்படை நிகழ்த்திய படுகொலையில் 50 - ற்கும் மேற்பட்ட மக்கள் பலி ( 1985)
  9. நெடுந்தீவு - குறிகட்டுவான் கடற்பாதையில் சென்ற 30 -ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடற்படையால் குமுதினிப் படகில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாள். ( 1985)
  10. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ( 31.05.1981)
  11. 150 தமிழர்களைப் பலிகொண்ட அம்பாறை பலிகொலை.
  12. சுதந்திரபுரப் பகுதியில் விமானத்தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
  13. மண்டதீவில் 31 குருநகர் மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  14. 2-வது கொக்கட்டிச்சோலைப் படுகொலையில் 65 தமிழர்கள் சிங்களப் படையால் கொல்லப் பட்டனர். ( 12.06.1991 )
  15. நவாலி தேவலயத்தில் சிங்களஅரச விமானத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 141 தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.
  16. தமிழருக்கு எதிராக, மிகவும் கொடுரமான பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலான நாள் 1979.
  17. 1- ஆம் கட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலை 35 பேர் இந்நாள் கொல்லப்பட்டனர்.
  18. அமைதியாக ஈழத்துக்கு வந்த இந்திய படை 8000 தமிழரை கொன்றுவிட்டு மீண்டும் அமைதியாக இந்தியா சென்றது.
  19. முல்லைத்தீவில் வள்ளிபுனம் செஞ்சோலை சிங்கள விமனக்குண்டு வீச்சில் 52 மாணவிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பின்னர் இறந்தார்.
  20. 1977 இனப்படுகொலை 400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 10 000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
  21. சிங்கள படையால் 600க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொன்று செம்மணியில் புதைக்கப்பட்டனர்.
  22. 2- ஆம் கட்ட வெலிக்கடைச் சிறைப்படுகொலை 19 பேர் கொல்லப்பட்டனர்.