கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 14 நவம்பர், 2015

தழையை நோக்கியே (hytte tur)

சிற்றூர்தியில் சென்றுகொண்டிருக்கிறோம் இலையுதிர்காலம் நோர்வே நாட்டில் கதிரறுப்புக்காலம் கூலங்களை ஆறுத்தபடி அறுப்பு இயந்திரங்கள் மூலம் கதிர்களை அறுத்துக்கொண்டு சென்றதை செல்பி மூலம் எடுத்துக்கொண்டோம். பின் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். மந்தை மேய்ப்பு மாடுகள் மேய்ப்பு பாற்பண்ணைகளில் இருந்து வெளியாகும் நாற்றம் பழைய பொருள்களை முற்றத்தில் போட்டு விற்றுக்கொண்டிருந்ததையும் பார்வையிட்டுக்கொண்டு பயணித்தோம். சின்னகாமரில் சில மணித்துளிகள் ஓய்வெடுத்துவிட்டு ஒத்தா(Otta)வழியாக உலூமை(Lom) சென்றடைந்தோம். முன்கூட்டிய திட்டத்தின்படி தழையில் ஓரிரவு தங்கினோம்.தழைக்குச் சென்றடைய பிற்பகல் ஆறு எடுத்தது.மூத்தசிறுவன் செல்லும் பாதைகளைப் பாதை அறிவுக்கும் செல்பியுடன் தொடர்புகளைப் போணினான். அதனால் இடையூறுகள் இருக்கவில்லை மிகத்துல்லியமாக அறிவுப்புப்பலகைகள் அப்பணியை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தன. சிறுவர்கள் மிகவும் கெட்டிக்கார்கள்.முதலில் பாதை கரடுமுரடாகத்தான் இருந்தது இரவோடு இரவாக வேறு பாதையைத் தேடினார்கள்.மூவரிலும் மூத்தவன் தாரை அச்சமறியாதவன். இளையவன் பாவலனே அச்சத்தில் உழன்றுகொண்டிருந்தான் கடைக்குட்டி கரிகாலன் கோவேரன் புதினமாக எல்லாவற்றையும் கேட்டறிந்தான். மலைசூழ் மரகதத் திருநாடு நோர்வே என்பது இவ்விடங்கள் தெளிவுபடுத்துகின்றன.
  


 





கருத்துகள் இல்லை: