கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

கோட்டை செய்த கேடு

நன்றி தினகரன்

நன்றி புலிகள்


ஒற்றைப் பூவரசு
ஒரு முனியப்பர் கோயில்
பூவரசைச் சுரண்டியபடி
பேதையில் பேதை
இலண்டன் சாள்சின்
பிறந்த நாளுக்காய்
கட்டிவைத்த மணிக்கூட்டுக்கோபுரம்
தந்தை செல்லா நினைவுத்தூபி
ஓரிலக்கத்துக்கும் குறைவான
நூல்களை அடைக்கி வைத்த
யாழ் நூலகம்
வேம்படி மகளிர்
மத்திய கல்லூரிகள்
துரோகி துரையப்பா
விளையாட்டரங்கம்
வாடிவீடுகள்
நான்காம் உலக
தமிழாராய்ச்சி நிகழ்வுக்கோலம்
தோட்டாக்களின் வேட்டொலிகள்
திகில் பரபரப்பு
பதினொரொரு பேரின்
இறுதி வணக்க நிகழ்வு
கரிகாலன் வரவு
கைது செய்தல்
காணாமல் போதல்
எடுத்துக்காட்டு இன்பம்
தென்றல் வீசிய
சிறுதீவில் சிறுத்தைகளின்
மோதல் களம்
புதிய புலிகளின் தொடக்கம்
வேங்கையின் முதல்மரிப்பு
தியாகதீபம் திலீபன்
தரித்து வைத்த வண்டி
ஒலிப்பெருக்கியில் ஒலித்தடங்கிய
புலிகளின் தாபக்குரல்கள்
சண்டைக் காட்சி
குண்டுவீச்சு குறிச்சூடு
வீரமரணம்
வீர தீர உக்கிரம்
பசிலன் குண்டில்
பதறியடித்த சிப்பாய்களின்
படகேற்றம் - பின்
கேர்ணல் பானுவின்
புலிக்கொடியேற்றம்
தாலியறுத்த கோட்டை
தாழிட்டு வீந்தது விடிவே!





கருத்துகள் இல்லை: