கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 18 நவம்பர், 2015

நோர்வே நாட்டு பறவைகள்

ஈழத்திருநாடு அதில் தமிழீழத்தாயகம் தாயகத்தில் இருபது மாநிலங்கள் மாநிலங்களில் ஆறுகளும் ஓடைகளும் ஏரிகளும் குளங்களும் குட்டைகளுமென நீரின் நேக்கம். ஈச்சம்பழங்களும் பாலப்பழங்களும் பலாவோடு வகைவகையாய் மா வாழைகள் அன்னமுன்னா இலந்தையோடு பப்பாளிப்பழங்களும் முந்திரிகையென பழவகைத் தோட்டம். கற்பகத்தருக்களோடு பாக்கும் தேக்கும் வீரை பாளை முதிரை வாகை வேம்பு வேங்கை கொய்யா பூவரசு கிடக்கைகளும். புறா கிளி காக்கை குயில் மயில் கோழி சேவல் வல்லூறு சிட்டுக்குரிவிகளோடு செண்பகமும். அடவி அருவி தென்றல் திங்கள் நயனங்களும் கொண்ட தண்டலை.சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா என பட்டுக்கட்டிவரும் மாட்டுவண்டி. இவற்றையெல்லம் உவந்து வாழ்த வாழ்வு ஏனோ நோர்வேயிலும் பழக்கப்பட்டுவிட்டது.ஆறோடு நடப்பது அருவியோடு விளையாடுவது பறவைகளோடு பாடுவது என்று நீண்டு நடக்கும் வேளையிலே பறவைகளின் வாழ்வை இரசித்துப்பார்க்கும் பொழுதுபேருவப்பு யாம் பெற்ற இன்பன் பெறுக இவ்வையகம்.நான் அறிந்த பறவைகள் பற்றிய சிறு குறிப்பு
பகம்(Pica)

இதன் பெயர் பிகா தமிழில் பகம். இது கருமை நிறமும் வெண்மை நிலமும் கலந்தது. பகம் 45 - 48 சென்ரிமீற்றரும் வால் 25 சென்ரிமீற்றரும் அளவுடையது. இது சின்ன பறவைக் குஞ்சுகளை பிடித்துண்ணக்கூடியது. பறவைகளின் முட்டைகளையும் குப்பைக்கூழங்களையும் உண்ணவிருப்பமுடையது. இது மனிதர்களை அண்டியே வாழக்கூடியது. இது புலனாயும் திரனைக் கொண்டுள்ளது அத்துடன் வலகரமாகவும் வாழக்கூடியது. அதன் கூட்டை மரக்கூச்சிகளால் நன்றாகக் கட்டக்கூடியது.கூட்டின் அடிப்பகுதியை மக்குகொண்டு பாதுகாக்கும்.பனிகாலத்தில் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டில் ஒம்பியிருக்கும்.பிகாக் பிகாக் வென்று ஒலியெழுப்பக்கூடியது.உச்சில் இருந்து கீழே வருவதாயின் அம்பு வேகத்தில் இறக்கைகளை ஒடுக்கி அலைவடிவில் கண்ணிமைக்கும் நொடியில் வந்துவிடும். உணவைத் தேடும் போழ்து இன்னிசையெழுப்புக் கொண்டு தேடும் அழகே அழகு.நோர்வேயிலேயே வாழும் பறவை. அதிகமாக உள்ள பறவையை எங்கும் காணலாம்.


இதன் கூடுகளை பனிகாலத்தில் பார்த்து மகிழலாம்.

பொன்கண் வாத்து(Kvinand)

இது வாத்து குடும்பத்தில் ஒரு பறவை, இவ்வாத்தின் உடல் செங்குத்தான நெற்றியில் பளிச்சென்றும் பெரிய தலை உள்ளது. உடல் ஒரு பிட் பருமனாக தெரிகிறது. ஆண் சற்றே பெரியது. ஆண் சுமார் 49 செமீ , பெண் சுமார் 39 செ.மீ. உள்ளன. ஆண் கருப்பு பச்சை தலை நிறம் மற்றும் அலகு ஒவ்வொரு பக்கத்தில் ஒரு தனித்துவமான வெள்ளை கன்னத்தில் இணைப்பு. பெண் கருப்பு தலையில் நிறம் மற்றும் கன்னத்தில் கறை குறைவாக வரையறுக்கப்பட்ட மழுப்பு இந்த இனங்களின் கண்களின் பண்பு தங்க மஞ்சள் நிறத்திலிருந்து பெறப்படும்.
இந்தப் பறவைகளை ஆழம் குறைவான மாரியாற்றில்(Maridal) பார்த்து மகிழ்வேன். அவற்றுக்குத் தீனியும் கொடுத்து மகிழ்வேன்.மிகவும் அறிவுடைய பறவை. பெரிய பறவைகளோடு இருப்பதை அதிகம் விருப்புவதில்லை. நான் பார்த்த பறவைகளில் இவை அழகானவை.
thank you
http://oyvindbuljo.blogspot.no/2010/02/mer-kvinand-under-vann.html

பழுப்புவரி வாத்து

இந்தப் பறவையை நாம் அரைப்பங்குதீவில்(snarøya) பார்த்தோம். இறைச்சி வாட்டி உண்டுவிட்டு வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போழ்து அங்கு வந்திருந்தன.என்றும் காண்த இப்பறவையைக் கண்டதும் பேருவப்பாயிற்று.மற்றைய வாத்துகளை விட பெரிதாகக் கானப்பட்டன. அவற்றின் நீளம் 65 - 90செ.மீ செட்டை 140 - 175செ.மீ தலை கடும் மனிணிற நிறத்தைக்கொண்டது. நீண்ட கழுத்தைக் கொண்டது. காலும் அலகும் செம்மஞ்சள் நிறத்தைக் கொண்டது. காண்டிநேவியா காடுகளில் காணப்படுகின்றன. இது வடநோர்நோர்வேயில் தொகையாகக் காணப்படுகின்றன. இது இலைதுளிர் காலத்துக்கும் இலையுதில் காலத்துக்கும் கிழக்கு மாநிலங்களில் வந்துசேரும்.அதன் ஒலி அங்-அங்-அங் ஒலிக்கும்.
 tjank you
http://valterkristensen.blogspot.no/2012/04/sdgas.html


கருத்துகள் இல்லை: