கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கிழமையும் நினதே!

பாடியவர்: மோசிசாத்தனார்
திணை: நொச்சி
துறை: செருவிடை வீழ்தல்

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.


'கிளி'நொச்சிநகர்


மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தது போல் கரிய கொத்துக்கலையுடைய நொச்சியே!

போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
மலர்கள் மலந்த பல மரங்களுள்ளே சிறந்த(மிகுந்த)

காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
அன்பு கொள்வதற்குரிய நல்ல மரம் நீயேயாவாய் காவலையுடைய

கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
அகன்ற நகரத்தில் அழகான கண்கவர்

தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
வலையலை அணிந்த மகளிரின் இடையில் தழையாகவும் இருப்பாய்

காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
காவல் பொருந்திய மதிலிடத்தேயிருந்து அம்மதிலை கொள்வதற்கு எண்ணுவோர் பகைமையை அழிப்பதால்

ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
ஊர்ப்புறத்தைக் காவல் செய்கின்ற நெடுந்தகையின்

பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.
(தலையில்) அணிந்து கொள்ளப்படும் உரிமையும் உனதாகட்டுமே!

கருத்துகள் இல்லை: