கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 5 ஏப்ரல், 2012

உடன் போக்கு

திணை இலக்கியம்: நற்றிணை
பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
துறை: உடன் போக்கு

அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழநின்
நலமென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்
பொரிப்பூம் புன்கின் அழல்தகை ஒண்முறி
சுணங்கு அணிவன முலைஅணங்கு கொளத்திமிரி
நிழல்காண் தோறும் நெடிய வைகி
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
நறுந்தண் பொழில கானம்
குறும்பல் ஊர யாம்செல்லும் ஆறே!

கருத்துகள் இல்லை: