பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை: மகள் பால் காஞ்சி
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி
. . . . . . . . . . . . .?
மதிலும் ஞாயில் இன்றே
மதிலுக்கும் ஞாயில்(காப்பரண் காவல் உறுப்பு) இல்லை
கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
அகழிக்கிடங்கும் நீர் இல்லாமல் கன்று மேய்ந்து திரிகிறது
ஊரது நிலைமையும் இதுவே
இந்த ஊரின் நிலைமையும் இவ்வாறே இருக்கிறது
மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி
இவள் தந்தையோ தமையரோ இவற்றை எண்ணிப்பார்க்கா போர் மயக்கத்தில் உள்ளனர்.
இவர்கள் கண்ணுக்கு அழகு மிக்க ஆத்திமாலையும் விரைவாக ஓடும் குதிரையும் உடைய கிள்ளி
. . . . . . . . . . . . .?
??

பின் புலம் அறியாது செய்யும் செயலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர் படம்பிடித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக