கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 26 ஜனவரி, 2013

ஜானகி அம்மாள்


இந்திய அரசின் விருதை புறக்கணித்த ஜானகி அம்மாளுக்கு தமிழர்களின் பாராட்டுகள்

இந்திய அரசு விருது கொடுத்தாலோ விருந்து கொடுத்தாலோ வரிந்து கட்டி ஓடிப் போய் வாங்கும் தமிழக கலைஞர்கள் நடுவிலே தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜானகி அம்மாள் வஞ்சகம் நிறைந்த இந்திய அரசு கொடுத்த தாமரை (பத்மா)
விருதை புறக்கணித்து உள்ளது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .

வடஇந்திய மக்களுக்கு காலம் காலமாக இந்திய அரசு அதிக அளவில் விருதுகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டு வருகிறது . தென்னிந்திய கலைஞர்களை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது . ஆனால் இது குறித்து யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அதனால் தக்க சமயம் பார்த்து ஜானகி அம்மாள் இந்த விருதை புறக்கணித்ததின் மூலம் ஒட்டு மொத்த இந்திய ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் . இந்திய அரசின் வஞ்சகத்தையும் அம்பலப் படுத்தியுள்ளார் .

தமிழீழப் படுகொலையை நிறைவேற்றிய பின்னர் இந்திய அரசு கொடுக்கும் எந்த விருதுகளையும் தமிழக கலைஞர்கள் இந்திய அரசிடம் இருந்து பெறுதல் கூடாது . தன்மானமுள்ள எவரும் அந்த விருதை வாங்கக் கூடாது . இருப்பினும் பல தமிழகக் கலைஞர்கள் இந்திய விருதுகளை புறக்கணிக்காமல் அதை 2009 க்கு பிறகும் பெற்று வருகிறார்கள் .

இந்நிலையில் ஜானகி அம்மாள் இவ்வாறான புறக்கணிப்பை செய்திருப்பதை தமிழர்கள் நாம் மனமார பாராட்டுவோம் . இவரை பார்த்தாவது தமிழ்க் கலைஞர்கள் இந்திய அரசின் விருதுகளை புறக்கணிக்க வேண்டுகிறோம் . தன்மானத்தோடு தமிழர்களே புறக்கணியுங்கள் இந்திய அரசின் விருதுகளை .

கருத்துகள் இல்லை: