கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 1 ஜனவரி, 2013

நமது தொல்லியல்


நன்றி

இந்தியா மற்றும் தமிழகம் வரும் தமிழியல் ஆர்வலர்களுக்கு

கடலை வேலியாக கொண்ட மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளை அடிப்படையாக கொண்டு அதன் நடுவில் வாழ்ந்து ,முறைப்படுத்தப்பட்ட குடும்ப வாழ்க்கை முறையை கொண்ட நாகரிக மக்கள்

அவர்கள் இயற்கையை புரிந்துகொண்ட ,

அதை உலகிற்கு இரு வழிகளில் ( நிலம் & கடல் ) உலகிற்கு பங்களிப்பை அளித்து உலக நாகரிகங்களில் அதன் பண்பாடு மற்றும் மொழிகளில் இருப்பதை

உலக அறிஞர்கள் மிகவும் பொறுமையாக ஏற்று கொள்ள தொடங்கும் இந்த காலத்தில்

தமிழியல் தொன்மை குறித்த கருதுகோள்களை கூட பன் முக பார்வைகள் கொண்டு ஆராய்ந்து பார்க்காமல் மறுக்கும்

நம் சமுக கல்வி புல குழுமங்களில் நடுவில்

உங்களை போன்ற தமிழியல் ஆர்வம் கொண்டவர்கள்

1956 கு பிறகு பிரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் கொண்ட மாநிலத்தில் , மெட்ராஸ் மாநிலம் என்ற மாநிலத்தை அதற்க்கு 12 வருடங்களுக்கு பிறகு பல போராட்டங்கள் செய்து தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு மணிப்ரவாள முறையை மாற்ற முயற்சி செய்து இன்று வரை இருமொழி கலந்து நாம் பேசினால் தான் மக்களுக்கு புரியக்கூடிய சூழலும்

மறுபுறம் நமது தொல்லியல் சின்னங்கள் , பழங்கற்கால தடயங்கள் ,குகை பாறை ஓவியங்கள் ,கல்வெட்டுகல் ,செப்பேடுகள்,பானை ஓடுகள் ,ஓலைசுவடிகள் ,நாட்டார் வழக்கியல் ,பழங்கால வீடுகள் ,உணவு முறைகள் , கடலியல்தரவுகள் ,பண்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக

உலகமயமாக்கல் வளர்ச்சியால் அழிக்க பட்டு வரும் நிலையில் ,

வளர்ந்த நாகரிக மக்களின் அறியான்மை தன்மையால் மற்றவர்களையும் அவர்கள் மாற்றும் தன்மை உள்ள நிலைமைக்கு தள்ளப்பட்டு

மேலை நாட்டு அறிஞர்களுக்கு உள்ள சூழல் இங்கு தொன்மையை தேடுபவர்களுக்கு இல்லாத நிலையும்

உலக தரம் என்று சொல்லக்கூடிய கட்டுரைகளையும் அதற்கான வழிமுறைகளையும் , மேலை நாட்டினருடன் இணைந்து நாம் செயல் படக்கூடிய சூழல்களையும் உருவாக்க இந்தியா வரும் தமிழ் ஆர்வளர்கள தங்கள் பயணத்தில் உருவாக்க வேண்டும்

அறிவியல் உலகம் அறியாத பல தரவுகள் நாம் காணும் மக்களிடம் இன்றும் அமைதியாய் இருக்கிறது

தமிழியல் தரவுகள் உலகமெங்கும் கடல் மூலம் பரவி உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

தமிழின் தொன்மையை தமிழ் நாட்டில் மட்டும் தேடக்கூடாது

இந்தியா மற்றும் உலகமெங்கும் தேடவேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளதை

இன்று இணையம் துணைகொண்டு தேடுபவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: