கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 14 மே, 2007

அவை

1

தாய் மொழி என்கிறார் தமிழ் மொழியை
தன் குழந்தைக்கு அப்பனை காட்டுகிறாள்
dady என்று

அவை சிரிக்கிறது

ஆ...... ஆ........ ஆ........ ஆ.......

தமிழ்த்தூவல்> அரசன். தமிழரசன்


2


ஆசிரியர் : சிறுவன் ஒருவனை பார்த்து,
"உயிர் எழுத்து எத்தனையடா குழந்தாய் " என்று கேட்டார்.

மாணவன் :) " பன்னிரண்டு " என்றான்

ஆசிரியர் :) " எப்படி நினைவுபடுத்திக்கொண்டாய் " என்றார் .

மாணவன் :)" திலீபன் அண்னை உண்ணா நோம்பிருந்த நாட்களை நினைவுபடுத்திக் கொண்டேன் " என்றான் அவன்.

ஆசிரியர் :) " நன்றடா நன்று , நீ தமிழையும் காப்பாற்றுவாய் மண்ணையும் காப்பாற்றுவாய் " என்று அந்த மாணவனை உவந்து புகழ்ந்தார் ஆசிரியர்.

அவையில் தமிழ்ச்சேய் என்ற அறிஞன் கூறவும். அவை வியந்து நோக்கியது.

தூவல்> அரசன்.தமிழரசன்

3

திருமணத்தின் பின் கலந்த பிற்பாடு அடுத்த நாள் காலை.

கணவன் :) " மைவிழி, பெண்ணுக்கு அழகைக் கொடுப்பது கண் மை என்பார்.

நீ ஏன் இன்னும் மை பூசவில்லை.

மனைவி :) " எனது கண்ணில் நீங்கள் இருக்கின்றீர்க்ள். உங்களுக்கு கரியைப் பூச விரும்ப வில்லை. என்றாள் அவள்.

தன் மனைவியின் காதலைக் கண்ட கணவன் அமைதியானான்.

அவையில் பகல்வன் என்ற அறிஞர் கூறவும். தமிழ்ப் பெண்ணின் காதலைக்கண்ட அவையு சற்று நாழி அமைதியானது.

தூவல்> அரசன். தமிழரசன்

4

காதலன் :) "நிலா! நான் உன்னை பார்க்கும் போழ்து

நீ மண்ணைப் பார்க்கிறாயே கோபமா? நாணமா?"

காதலி :) "இந்த மண்ணுகாக என்ன செய்து விட்டோம்; இப்பொழுது நாம் காதலிப்பதற்கு" என்றாள் அவள்.

ஆணாக இருந்தும் மண்ணை எண்ண மறந்து விட்டேனே என நினைத்து வெட்கி நின்றான்.

அவையில் தாமரை என்ற அறிஞை கூறவும் பெண்ணின் பொது நலம் கண்டு உவகை கொண்டது அவை.

பதிவு> அரசன். தமிழரசன்

5

சிறுவன் :) " ஐயா! பெரியவரே கையில் தேங்காயை வைத்திருக்கிறீர்கள். இந்த கோயில் கல்லில் அடிக்கப்போகிறீர்களா?"

பெரியவர் :) "ஓம், தம்பி."

சிறுவன் :) "ஏன்? ஐயா தேங்காயை கல்லில் சிதறி அடிக்கிறார்கள்."

பெரியவர் :) "அது வந்து தம்பி. இந்த சிறட்டை போன்று மனதைச் சுற்றி தீய குணங்கள் மூடியுள்ளன. சிறட்டை போன்று அவை சிதறி உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் வெள்ளை மனத்தை அடையாளம் கண்டுவிடலாம்." என்றார் பெரியவர்

சிறுவன் :) "அதுதான் பொருள் தெரிந்து விட்டதே அதற்குப் பிறகு ஏன் உடைக்கிறீர்கள்." என்று கேட்டான்.

பெரியவர் தனது அறியாமையை எண்ணி மனம் கூனி நின்றார்.

' சிறியவரும் பெரியவராவார் நல்ல எண்ணம் இருந்தால், பெரியவரும் சிறியவராவார் அறியாமை குடியிருந்தால்'

தூவல்>அரசன்.தமிழரசன்

கருத்துகள் இல்லை: