கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

முழங்கு முரசே!



தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள் 
போம் போம் போமென முழங்கு முரசே! 
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு! 

தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
செவ்விழி உடையோம் செருமாண் தமிழர் 
யாம் யாம் யாமென முழங்கு முரசே! 
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு! 

தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா? 
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே! 
அரசொடு தமிழன் ஆளமுழங்கு! 

தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு! 
தீம் தீம் தீமென முழங்கு முரசே! 
தேச விடுதலை பாட முழங்கு!

கருத்துகள் இல்லை: