கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 30 டிசம்பர், 2015

இவ்வாண்டு 2016

நத்தார் பிறந்த நாள் இவ்வாண்டு வெண்பனியில்லாமல் பிறந்தது. 



நத்தார் பாலனின் பிறந்தநாள் துருவக நாட்டில் எந்த பனித்துகள்களும் இல்லாமல் பிறந்ததின் செய்தி என்னவெனில் காலநிலை மாற்றமே. ஆண்டுகளுக்கு ஒருவிழுக்காடு பனி உருகுவதை உலகம் அறிந்திருக்கும் போழ்தும் அது பற்றிய அக்கறை இல்லாமல் உலக மயமாக்கல் சென்று கொண்டிருக்கிறது.இவாண்டோடு 15% பனி உருகியுள்ளது. முனைவர் அல்கோர் போன்றோர்கள் உலகத்தின் காலநிலை மாற்றம் பற்றி கூறியும் சில தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அமெரிக்கத்தின் வல்லாண்மைகரணியமாக பல மாற்றங்கள் ஏற்படலாம். அன்றியும் தொடர்ந்து வறுமையும் எளிமையுமே தோன்றும். உலகம் 2011 ஆம் ஆண்டிலிருந்து புதிய மாற்றத்தையே நகர்த்துகிறது.புவியியல் மானுட சூழல் மாற்றம் இன்னும் நான்காண்டிலேயே நிகழும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை: