கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 14 மே, 2011

சங்கே முழங்கு

நன்றி.மக்கள்

முத்தமிழ் மூத்த இலக்கியம்'சிலம்பு அதிகாரம்'
புலியூர் கேசிகன் அவர்களின் உரையில் இளங்கோவடிகளின் மூல காப்பியத்தை ஓடியோடி ஐந்து மாதங்கள் பாடியும் படித்தும் மகிழ்ந்தேன். ஓடியோடி எப்படி படிப்பது? பேரூர்தியை ஓட்டுனர் செலுத்திக் கொண்டிருக்க யான் இருக்கையில் இருந்து கொண்டு சிலப்பதிகாரத்துக்குள் மனதை ஓடவிட்டேன். மனம் சிலம்பைச் சுற்றியது பேரூர்தி நகரைச்சுற்றியது. சிலம்பில் பல செய்திகள் உள்ளன அதை யானும் பகிர்ந்து கொள்கிறேன்.

"எனது பெயர் கண்ணகி. யான் பூம்புகார் நகரில் ஒரு வணிகனுக்கு மகளாகப் பிறந்தேன். எனக்கு அப்பொழுது பன்னிரண்டு இருக்கும். எனக்குத் தந்தையானவர், யான் பூப்படைந்ததும் என்னை அவரின் நண்பர் மகனான கோவனுக்குகட்டிக் கொடுத்தார். இரு வீட்டார் விருப்போடும் திருமணம் இனிதே நடந்தேறியது.அப்போழ்து அவருக்கு (கோவனுக்கு) அகவை பதினாறு. அவர் துடிப்புள்ள இளைஞன். அது மட்டுமல்ல யானையோடும் சண்டை செய்து வெல்லக்கூடிய வீரன். அவரை சிறு அகவையிலிருந்து காதலித்து வந்ததால் அவர் செய்யும் சிறு குற்றங்களைக் பொறுத்திருக்கிறேன். வணிகத்துறையில் கைதேர்ந்தவர். அவருக்கு ஈடாய் பூம்புகாரில் யாருமில்லை. இது புகழ்ச்சியன்று உண்மை.பல நாடுகளுக்கும் சென்று வணிகத்தில் ஈடுபட்டு மீண்டும் நாடு திரும்புவார். சோழனின் நம்பிக்கைக்கு ஏற்றவராய் சோழநாட்டை மேம்படுத்தியவர் என் கண்ணாளர் கோவலன்."