கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 ஜனவரி, 2009

பிறந்த நாட் செய்தி

இந்துமாவாரியில் மூழ்கியுள்ள குமரிக்கண்டத் தென்கோடியில் கி.மு.50,000(ஐம்பதினாயிரம் ) ஆண்டிகளுக்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியும் திராவிடத்தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழியென்று ஏமாற்றித்
தமிழகத்திற் புகுத்தபட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது. அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேற்வதற்குத் தமிழ் வடமொழியினின்றும் விடுதலையடைதல் வேண்டும். வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிகோள். தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயரமுடியும்.அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும்.முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப் பெயர் தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று.பிறந்த அண்மையிற் பிறமொழிப் பெயர் பெற்றவரெல்லாம் அந்நாளில் தம் பெயரைத் தனித் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொள்ளலாம்.அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கறிவிக்கலாம்.

தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழராவர்.தமிழ்ப் பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும்.கடவுள் நம்பிக்கையுள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும்.

இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்தாண்டிற்குள் தமிழர்தம் அடிமைத்தனமும்,அறியாமையும் அடியோடு நீக்கி மேலையர்போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.

ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடையவில்லை. ஆரியம்நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாம்.

ஆசான்: தேவநேயப்பாவாணர் நூல் : தமிழ் வளம்.

கருத்துகள் இல்லை: