கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

பட்டினப்பாலை

ஆசிரியர், உத்திரக்கண்ணனார் கடலூரைச் சேர்ந்தவர்.
திருமாவளவன் என்னும் கரிகால் பெருவளத்தானிடம் பரிசில் பெறும் நோக்குடன் இப்பாடலைப் பாடியுள்ளார்.

நூற்பெயர்க்காரணம்; பொருளும் பிரிவும் இணைந்து பட்டினம் + பாலை பட்டினப்பாலை எனப்பட்டது.

¤ கரிகாலனிடம் சேர்க்கப்படாதிருந்த இப்பாடலைக் கண்டெடுத்துப் படித்த போது மாறுவேடத்தில் இருந்த மன்னன் அறிந்து பரிசு தந்ததாகக் கருதப்படுகிறது.

கருணபரம்பரைக்கதை - மரபுவழிக்கதை என்பன சிந்திக்கத்தக்கது.

காவிரியின் சிறப்பு

நாட்டுக்குச் சிறப்பு ஆறு. "ஆறு இல்லாத ஊர் பாழ்" என்பாள் ஔவை. நீரின்றி அமையாதுலகு, காவிரியின் சிறப்புக்கு வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைஇய கடற்காவிரியின் புனல் பரந்து பொன்கொழிக்கும் என்றார் - காவிரியின் சிறப்பு அத்தகையது வானத்தில் விளங்கும் வெண்மீண்களுள் வெள்ளி (சுக்கிரன்) ஒளிமிக்கு  விளங்குவதாகும்.

¤ சுக்கிரன் வடபாக்கம் சிறிது சாய்ந்தாற் போன்று விளங்குவது அங்ஙனமின்றித் தெற்குப் பாக்கம் சாய்ந்தது போல விளங்கினால் வற்கடம் உண்டாகும்.
நீர் வளம் உடைமையால் நெல் வளம் மிக்கது நாடு நாட்டு வளத்துக்கு நீர் வளம் இன்றியமையாத்தது.
சோழ நாட்டின் சிறப்பு உரைக்க வந்த புலவர் நீர் வளத்தைக் கூறி,"விளைவறா வியன் கழனி" என்று விளைச்சலைத் தரும் வயல்களாகிய கழனிகளைக் குறிக்கின்றார். அதனால் விளைச்சல் குன்றா வயல் என்றார்.
கார் என்பதற்குப் பசிய என்பது பொருள். கார்க் கரும்பு - பசிய கரும்பு

செம்மை மிக்க கரும்பின் மணம் வீசும் ஆலைகள் மிக்க அதன் தீயில் உண்டாகும் புகையால் மிக வாடிய நெய்தற் பூ உடைய வயல் என்று நீர் வளம் பெற்ற வயலை விளக்குகின்றார்.

நீர்வளத்தால் வளம் பெற்ற அந்த வயலின் சிறப்பைக் காட்டுதற்கு அதனது விளைச்சலைப் பேசிகின்றார்.மோட்டெருமைக் கன்றுகள் உண்டு,பசியாறி நிழலிற் துஞ்சும் என்கிறார்.

மோடு - வயிறு (பெருத்த வயிறு)

மோட்டெருமைக் கன்று - எரிமைக் கன்றுகள் வயிறு பொருத்த தோற்றமிடையன. நாட்டின் சிறப்புக்கு வயல்களின் அயலில் அமைந்த மரங்களின் நிழல் பற்றிய செய்தி இடம் பெறிதல் காணலாம்.

குலை வாழை கோட்தெங்கு, காய்க் கமுகு, கமழ் மஞ்சள், இனமா, இணர்ப்பெண்ணை(பனை), முளையிஞ்சி என்றெல்லாம் நாட்டின் வலமான சோலைகளைக் குறிக்கின்றார்.நெல், சேப்பங்கிழங்கு,இஞ்சி,மஞ்சள் முதலியனவற்றைக் காய வைத்துப் பதப்படுத்தலும்

காவல்மகளிர் அவற்றைக் காத்தற் பொருட்டு தம் நகையாகிய தொங்கட்டான்களைக் கொண்டு கோழிகள் விரட்டப்படுதலும் நாட்டின் வளப்பம் கூற வந்த செய்திகளே!

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு"

"கலஞ்சு ரக்கும் நிதியங் கணக்கிலா
 நிலஞ்சு ரக்கும் நிறைவளம் நன்மணி
 பிலஞ்சு ரக்கும் பெறுதற் கரியதங்
 குலஞ்சு ரக்கும் ஒழுக்கங் குடிக்கெலாம்"
எனக் கம்பரும் கூறுதல் காணலாம்.

நாட்டினது அரசு சிறந்தால் நாடு சிறக்கும் அதனால் அச்சந்தரத் தக்க பகைகளை அறியாத செல்வம் மிகுந்த பல குடிகள் செழித்து வாழும் பாக்கத்துக்குக் குறும்பல் ஊர் என்றும் உரைக்கக்காணலாம்.
"மாநிலங் காவல .னாவான் மன்னுயிர்காக் குங்காலைத்
 தானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால் 
 ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்
 ஆனபயன் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ"

கருத்துகள் இல்லை: