கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இலண்டன் பயணத் தொடர்ச்சி

மணிக்கூட்டுக் கோபுர வளாகத்தைச் சுற்றிப்பார்த்த போது அங்கு காவற்பணியில் நின்ற காவற்றுறையைச் சேர்ந்த காவலாளியோடு நின்று நிழல் பிடித்துக் கொண்டு நடந்தோம்.


அந்த வளாகத்துள் இருந்த அந்தச் சிலை எம் கண்ணில் மலைப்பைத் தந்தது

அவர்தாம் ஒலிவர் கிறொம்வேல்(Olivar Cromwell)

இங்கிலாந்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியதில் ஒலிவருக்கு பெரும் பங்குண்டு. அதுமட்டுமல்லாது அடிமட்ட மக்களுக்களின் உரிமைக்காக பெரும் பாடுபட்ட மனிதர் எனலாம்.அம்மனிதரின் படிமத்தைப் பார்த்ததில் மிகவும் மகிழ்வாக இருந்தது. ஏன் இந்த மகிழ்வென்றால் உலகத்தில் மாற்றாம் ஏற்படுமாயின் அது ஐரோப்பியர்களாலேயே ஏற்படும் .முதலாம் உலகப்போருக்கு கரணியம் ஐரோப்பியப் பொருளாதார வீழ்ச்சி.இரண்டாம் உலகப்போருக்குக் கரணியமும் பொருளாதார வீழ்ச்சி தான். ஐரோப்பியரின் நாடுகாண் பயணங்கள் ஏற்பட்டதும் பொருளாதாரம் தான். அது பிரித்தானிய உலகாள விரும்பும் மேல்தட்டு வருக்கத்தினால் ஏற்படுவதால் அங்கு ஒரு மக்களாட்சியை தொற்றுவிக்க கரணியமாக விரும்பிய ஒலிவர் போற்றுதற்குரியவர்.அவர் சிந்தித்தது பிரித்தானியர்களுக்காகத்தான் ஆனாலும் அதுவே உலக மாற்றமாக இன்று மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: