கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 9 ஜூலை, 2010

கோடைகால விடுமுறையும் களிப்பும்



வள்ளுவராண்டு இரண்டாயிரத்து நாற்பத் தொன்று (2041).
இலத்தினாண்டு இரண்டாயிரத்துப் பத்து (2010).

இவ்வாண்டு கோடைகாலமும் கொழுத்தும் வெய்யிலும் ஓடை, ஆறு, அருவிகள் ஓடும் காட்சிகளும் அப்பப்பா பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் எவ்வகையான மகிழ்வைக் கொடுக்குமோ! அவ்வகையான மகிழ்வைத்தான் எமக்கும் கொடுக்கும் அத்தனையழகு.
பூம்பனிகாலம் முடிந்ததும் உறைபனிகாலம், அது முடிந்ததும் இலைதுளிர் காலம், பறவைகள் அடைகாத்து குஞ்சுபொரிக்கும் காலம், இக்காலத்தை நோர்வே நாட்டவர் மிகச்சிறபாக கொண்டாடுவார்கள். பின் பூ பூக்கும் காலம், காய்மரங்கள் காய்க்கும் காலம், கோடைகாலம் கனிகள் கிடைக்கும் காலம். ஊர்மாம்பழங்களை இக்காலத்திலேயே காணலாம். வீட்டுத்தோட்டத்தில் கனிகளை பறிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது.பள்ளி விடுமுறை குறிப்பாக அன்னைபூபதி விடுமுறை, விடுமுறைக்கு முன் இல்லவிளையாட்டுப் போட்டி பின்

தமிழர் விளையாட்டு விழா அதைத் தொடர்ந்து கோடைகால விடுமுறையும் தொடங்கி விடும். இவ்வாண்டு தமிழர் பலர் தாயகத்துக்குச் சென்றுள்ளனர். நாம் உள்நாட்டுக்குளேயே அதாவது (நோர்வே நாட்டுக்குளேயே) விடுமுறையை கழிப்பதற்கு முடிவு செய்தோம்.
நோர்வே மலையும் மலைசார்ந்த நிலமும் கொண்ட குளிர் நாடு. இந் நாடு வடதுருவத்தின் மேலே அமைந்துள்ளது. இது வள்ளுவர் காலத்தில் பனிமண்டலமாக இருந்துள்ளமை வரலாற்றின் ஊடாக அறிய முடிகிறது.நோர்வே என்பதன் பொருள் "வடக்கு நோக்கிய வழி என்பதாகும்". மக்கள் அமைதியாக வாழ்வதற்குரிய அருமையனான நாடு.மக்கள் சட்டத்தை மதிப்பதும் அரசியல் ஆளுமையுமே அதற்கு கரணியம்.

இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் முதலாளி தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வுகள் இருந்தமையையும் கூறியாக வேண்டும். ஆனால் இன்று ஆண் பெண் நிகர் என்ற அடிப்படையில் வாழ்வதனால் ஆணோ பெணோ அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய தேவையில்லை. இன்று நோர்வேயில் ஒருவர் கிழமைக்கு நாற்பதெட்டு மணிநேரமே வேலை செய்தால் போதும். தலைவனும் தலைவியும் நிகராகவே இவற்றைச் செய்து வருகின்றனர். போதிய சம்பளமும் கிடைக்கின்றது.ஒருவரின் சாராசரி சம்பளம் இருபத்தைந்தாயிரம் குரோணர் (25,000.00).வாழ்வாதாரம் சீராகவே இயங்குகின்றது.எனவே இங்கு வாழ்க்கை அமைதியாகவே உள்ளது. கோகால விடுமுறையையும் இனிதே கழிக்கக் கூடியதாய் உள்ளது.





இன்னும் தொடரும்........

கருத்துகள் இல்லை: