கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 31 அக்டோபர், 2009

மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி

தமிழ்மொழி எல்லா மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பது உண்மைதான்.தமிழனுக்குப் பெருமைதான்.ஆனால் தமிழ் தொலைந்ததே
_காசியானந்தன்_

சிந்திய,மங்கோலிய,சீன மொழிகளுக்கும் தமிழுக்கும் உறவு இருக்கிறது என்கிறார் கால்டுவெல்.
இந்தோ - அய்ரோப்பிய மொழிகளும் தமிழும் நெருங்கியவை என்கிறார் போப்.
அங்கேரி துருக்கி பின்னிசு போன்ற பதினொரு பின்னே - உக்ரியன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தன.என்கிறார் கபோர் சென்(த்) கொதல்நய்.
சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவைச் சுட்டிக்காட்டுகிறார் லோகநாத முத்தரையர்.
எலாமைட் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்புண்டு என்கிறார் மக் ஆல்பின்.
கொரியன் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ஆல்பர்ட்.
சப்பானிய மொழிக்குத் தமிழே மூலம் என்கிறார் ஓனோ.
ஆபிரிக்க மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள உறவை ஆய்ந்து நிறுவுகிறார் செங்கோர்.
பாசுக்கு மொழி உலகளாவப் பரவிய பண்டைத் தமிழ் மொழியின் ஒரு கூறே என்கிறார் இலாகோவாரி.
ஆத்திரேலியப் பழங்குடிகளின் மொழிகளும் தமிழும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்கிறார் பிரிச்சார்டு.
அமெரிக்கப் பழங்குடிகள் பேசிய மொழிகள் தமிழோடு கொண்டுள்ள உறவினை அறியத்தருகிறார் சமன்லால்.

தொல் தமிழர் காலத்திலேயே தமிழன் போன போன இடங்களில் எல்லாம் தமிழைத் தொலைத்தான் என்றுதான் இதற்குப் பொருள்._ காசியானந்தன்_

1 கருத்து:

ulagathamizharmaiyam சொன்னது…

தமிழாசான் பதிவேடு.
தாய்த் தமிழகத்தில்கூட,செம்மொழி கண்டோம்’எனச் செப்பித் திரிவோர் இருக்கின்ற நிலையிலும்கூட இது போன்ற தமிழ்ப் பணி செய்வாரில்லை.

தனி ஒரு மனிதராய்த் தமிழ் மொழிக்காக மட்டுமின்றி,தமிழ்ப் பண்பாடு காக்கவும் வாழ்கின்றீர்கள்.

மொழியாராய்ச்சி மிகுந்த கண்ணோட்டத்தொடு,இக் கட்டுரையைப் பதிவு செய்துள்ளமை கண்டு பேரானந்தம் கொள்கின்றோம்.

மொழி வாடவில்லை.
உங்களைப் போன்றோரின் வடிவில் வாழ்கின்றது.

தமிழன்னை மிகுந்த கருணையுள்ளவள்தான்;உங்களை ஈன்றெடுத்துத் தந்துள்ளதனால்.

வாழ்க!மண்ணுள்ளவரை.
அன்புடந்
கிருஷ்ணன் பாலா 17.9.2010 /3:33pm மாலை (இந்திய நேரம்)