
'மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றவர்கள்' ஆம் நம் மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். தாய்மண் விடிவுக்காய் மட்டுமல்ல அயலவர்களின் பகையெடுப்பை தடுக்கவும் தாம் போராடி வீழ்ந்தவர்கள். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு ஆ கவர்தலைத் தடுக்கவும் வேற்று நிலங்களில் இருந்து வந்து பொருமியங்களைக் கவர்வதைத் தடுக்கவும் வீரர்களாய் போரிட்டு மரித்தவர்கள் தாம் மாவீரர். மாவீரம் கொண்ட மாவீரர் பற்பலருக்காய் எழுச்சி விழா எடுப்பதுண்டு. அவ்வகை விழாவை இன்றும் நினைவுகூற கோயில்களில் தேர்திருவிழா நடைபெறுகின்றது. இக்காலத்தில் கார்27 மாவீரர் நாளாக கொண்டாடப்படுகின்றது.அம்மாவீரருக்கு எடுக்கப்படும் அவ்விழாவுக்கு முன்
"காட்சி கல்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு மரபில் கல்லோடு புணரச் சொல்லப்படல்" என்று
உலக முதல் இலக்கண நூலான தொல்காப்பியம்மே தெளிவுறக் கூறுக் காண்கின்றோம்.
காட்சி
மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து
கூட்டிய எஃகங் குடர்மாலை - சூட்டியபின்
மாறுஇரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல்திரிய விம்முந் துடி. (புறம்.கரந்தை9)
கல்கோள்
மிகையணங்கு மெய்ந்நிறீஇ மிளி மறவர்
புகையணங்கப் பூமாரி சிந்திப் - பகையணப்fகும்
வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த
காலைக்குக் கண்டமைத்தார் கல். (புறம்.பொது8)
நீர்படை
பூவோடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து
நாவுடை நன்மணி நகியம்ப - மேவார்
அழன்மறம் காற்றி அவிந்தாற்கென் றேத்திக்
கழன்மறவர் கைக்கொண்டார் கல். (புறம்.பொது9)
நடுதல்
காடு கனற்றக் கதிரோன் சினஞ்சொரிய
கூடிய வெம்மை குளிர்கொள்ளப் - பாடி
நயத்தக மண்ணி நறுவிரைகொண் டாடிக்
கயத்தகத்து உய்த்திட்டார் கல். (புறம்.பொது10)
சீர்த்தகு மரபு (கோட்டஞ் செய்தல்/கோயிலமைத்தல்)
மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி அணிந்து பெயர்பொறித்து - வேலமருள்
ஆண்டக நின்ற அமர்வெய்யோற்கு இஃதென்று
காண்டக நாட்டினார் கல். (புறம்.பொது12)
வாழ்த்து
வாட்புகா ஊட்டி வடிமணி நின்றியம்பக்
கோட்புலி அன்ன குரிடில்கல் - ஆட்கடித்து
விற்கொண்ட வென்றி வியன்மறவர் எல்லாரும்
இற்கொண்டு புக்கார் இயைந்து
அடும்புகழ் பாடி அழுதழுது ஆற்றாது
இடும்பையுள் வைகி இருந்த - கடும்பொடு
கைவண் குரிசில்கல் கைதொழுது செல்பாண
தெய்வமாய் நின்றான் திசைக்கு. (புறம்.பொது13)
