கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

புலவரின் சாபம்


தமிழ் தேசியத்தின் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜீவ் காந்திக்கு ராஜீவ் உயிரோடு இருக்கும் போதே அறம் பாடினார். அவர் விட்ட சாபம் அடுத்த இரண்டாண்டுகளில் பலித்தது. புலவர் வாக்கு பொய்க்காது என நிரூபித்தவர் பெருஞ்சித்திரனார். எவ்வாறு ராஜீவ் சாக வேண்டும் என்று அறம் பாடினாரோ அவ்வாறே செத்து மடிந்தார் ராஜீவ் காந்தி. ஆனாலும் புலவரின் சாபம் இன்னும் மிச்சமிருக்கிறது. பாட
லை நீங்களே படியுங்கள்.
----------------------------------------------------------
சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே
முந்து இராசீவ் எனும் முன்டையின் மகனே!

யாழ்த் தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!

நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் உலகத்து இருக்குநாள்தோறும்
என்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதளால்
வெந்தழியும் நாள் விரைந்துனக் கெய்துக!

இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரிஎனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!

சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூறாகச் சிதறுக! சூதனே!
திக்கி நா விழுக்க! நெஞ்சு தெறிக்க!

என்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உனக்குளை நொய்ந்தே
முட்டுக நின்னுயிர்! மூளை நீ யாகுக!

தமிழினம் தகிக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!

தணலும் எம் நெஞ்சின் தவிப்பை
மணல், நீர், தீ, வளி, வானம் - ஆற்றுகவே!


* பாவலரேறு பெருஞ்சித்திரனார்.. எழுதியது 1988ம் ஆண்டு...

கருத்துகள் இல்லை: