கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 29 ஜூன், 2013

கிறிசியான் மாநிலம் (Kristiansand)

நோர்வேயின் தென்னகத்தே அமைந்துள்ளது கிறிசியான்சன்(Kristiansand) என்னும் இந்த நகரம் முன்பு இந்நிலத்தை ஆண்ட மன்னன் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் பல சிறப்புகள் உள. இந்நகரைச்சுற்றிக்கடல் வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. பெருங்கப்பல்களின் இறங்கு துறையாக அமைந்துள்ளது.கணிசமான மழைவீழ்ச்சி காணப்படுவதால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை இடருக்குள் தள்ளுவதுண்டு.
சாலையோர வழிகாட்டி
கிறிசியான் தலைமுறையில் இவர் நான்காம் அரசர்
இவள் பெயர் கமிலா
கமிலா.கொல்லத்து 1813 ஆம் ஆண்டு பிறந்து 1895 ஆம் ஆண்டு தமது எண்பதிரண்டாவது அகவையில் இயற்கையெய்தினார். இவருடைய தந்தையார் திறமையான ஓவியர் இவருடைய உடன்பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகையால் இவருக்கு இயல்பாக குடும்பச்சூழல் கலை சூழ்ந்ததாய் அமைந்ததால் மிகத்திறன்பட்டவராய் வளர்ந்து நோர்வேயின் முன்னணி எழுத்தாளராகத் திகழ்ந்திருக்கிறார். இவரைச் சிறப்பித்து நோர்வே நாட்டுப் பணத்தாளான 100 குறோனரில் திருவுருவைப் பதித்துள்ளனர்.இவரது பதினான்காம் அகவையில் இருந்து பதினாறாம் அகவை வரைக்குள் மொழியிலும் இசையிலும் மிகத்திரனுள்ளவராய்த் திகழ்ந்துள்ளார். கவிதாயினியாகவும் பாடலாசிரியராகவும் குமூக அக்கறையுள்ள எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார்.தம் கணவரின் பேருதவியோடு செல்லச்செழிப்போடு வாழ்ந்தவர் கணவர் தம் இறப்புக்குப் பின்னர் மிகவும் வறியவராக வாழ்ந்து இயற்கையெய்துள்ளார்.
இவர் வரலாற்றை மேலும் பிறமொழியில் படித்துக்கொள்ள
                                  http://en.wikipedia.org/wiki/Camilla_Colle



ஞாயிறு, 2 ஜூன், 2013

ஐம்பூதங்களே மன்பதை

மன்பதை எனும் சொல்லை பாவாணர் தேவநேயப்பாவாணர் அவர்களின் நூல் தொகுப்பிலிருந்து கற்றுக்கொண்டேன். மன்பதை எனும் மாந்த நேயம் இன்று நம்மிடை அற்றுப் பேவதற்கு என்ன கரணியம் என்று உலகம் பதிலைத் தேடிக்கொண்டிருக்கின்றது. மதத்தைத் தோற்றுவிக்காமல் மன்பதையைத் தோற்றுவிப்பதற்கே பல துறவிகள் முன்வந்துள்ளனர்.



சித்தார்த்தர்(புத்தர்),இயேசு,நபிகள்,வள்ளளார்,விவேகானந்தர் அவர் கிளைப்பிறப்பினர். ஒருவருடைய திறன் அவரோடு முடிவடையும் என்பதே உலகப் போக்கு.அவரைப்போல அவரே அவரைப் போல் வேறொருவரை உருவாக்க முடியாது. ஆனால் அவரைப் போல் உருவாகலாம் அவர் தாம்.  போதிதர்மர். மன்பதையை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் அதுவும் பொற்றோரில் இருந்தல்ல அவர் பரன் பரையில் இருந்து தொடங்க வேண்டும். அவர் தம் போக்குகளே செயல்களாக வடிவம் பெறுகின்றன.போக்குகளை செயல் வடிவமாக்குவது எவ்வாறு அதற்கு தமிழரின் பண்பாடும் அவர் தாம் அறிவியலுமே எடுத்துக்காட்டுகள்.

ஐம்பூததோடு ஒரு சேர வாழ்தல் அதற்கு உள்ளங்கையே எடுத்துக்காட்டு. ஐந்து விரலும் ஐம்பூதங்கள் அவற்றுள் கட்டவிரல் - தீ, சின்னிவிரல் - நீர், மோதிரவிரல் - காற்று , நீட்டுவிரல் - நிலம், சுட்டுவிரல் - வானம் இவற்றுள் ஒரு உண்மையைக் கவனியுங்கள் இந்த ஐந்து விரல்களையும் சேர்தே நாம் உண்ண வேண்டும் என்பதே நம் பெரியோரின் சட்டம்


தீயோடு சேரா நீர் அருகில் இல்லை ஆனால் காற்றோடு சேர்ந்திருக்கும் அதாவது இருபங்கு நீர்மம் ஒருபங்கு உயிர்மம் இவற்றோடு நிலம் நிலதோடும் வானத்தோடும் தீ சேர்ந்திருக்கும் என்பதே ஐந்து விரல்களின் ஐம்பூதம் காட்டும் உண்மை. இந்த ஐம்பூதங்கள் சரியாக செயற்பட வேண்டும் என்றே ஐந்து கோயில்களைத் தமிழகத்தில் நம்முன்னோர் கட்டிவைத்தனர் அந்தக் கோயில்கள் தனித்தனியே இருப்பது கண்டு நம் சத்குரு மனம் நோகுவர்.
சத்குரு ஜக்கி வாசுதேவன்

ஐம்பூதங்கள் சரியாக இயங்கவில்லையெனில் எந்தப் பயனும் இல்லை. அவை சரியாக இயங்கும் போது தான் இயக்கம் இதற்கு எடுத்துக்காட்டாக இருபத்தொராம் நூற்றாண்டின் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன்

அவர்களைக் கூறலாம். ஐம்பூதங்கள் சரியாக நம்மூளையை இயக்கும் போழ்தே மனநிலை மன்பதையாக மாற்றம் பெறுகின்றது.

எழுதுனன்:
 கதிரவேலு பொன்னம்பலம் சத்தியானந்தன் உதயன்