கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 2 நவம்பர், 2012

வரை ஆடு

"வரை ஆடு" தமிழ்நாட்டின் தேசிய விலங்கு!!

வரை ஆடு, மேற்கு தொடர்ச் மலையில் காணப்படுகிறது. இந்த ஆடுகள் அழிந்து வரும் உயிரினமாக உள்ளன. இவை, செங்குத்தான பாறைகளில் மட்டுமே வாழும். பாறைகளுக்கு அருகே உள்ள புல்வெளிகளில் மேய்ந்து விட்டு, பாறை இடுக்கில் உள்ள குகைகளில் தங்கும். மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை. மனிதர்களை விட்டு விலகி இருப்பதையே விரும்பும்.

நீலகிரியில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்காவில், வரை ஆடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி, ஆனை மலை, கொடைக்கானல், மேல் பழனி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சேர்த்து நூறுக்கும் குறைவான ஆடுகள் தான் இருக்கின்றன. கேரளாவில் மூணாறில் உள்ள பூங்காவில், இந்த வகை ஆடுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.