கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 26 ஜூன், 2007

உணர்வுகள்

புலத்தில் வாழும் குழந்தைகளும் நானும்.எம் பெற்றோரில் பலர் நினைக்கிறார்கள் படிப்பு என்றால் சப்புவது தான் என்று அதிலும் தமிழ்க்கல்வியை பொறுத்தமட்டில் தேர்வுக்காகவே குழந்தைகள் கட்டப்படுகின்றனர். சுற்றுலாவும் பெற்றுக்கொண்ட அனுபவங்களையே எழுதுவதும் ஆசானிடம் அதை ஒப்படைத்தலுமே அதாவது ஒப்படை குழந்தைகளை தமது தாய்மொழிப் பற்றை ஊக்குவிக்கும்.
.
குழந்தைகள் உண்மைதான் பேசுவார்கள்.
.
நாளுலா சென்ற வளர்நிலை நான்கு ஈ மாணவர்களின் உணர்வுகள்>:
*
'பறக்காமல் நில்
பிடிக்க ஆசை
பட்டாம் பூச்சி'
.
என்பது போல எனது மனம் மிக மகிழ்ச்சியாக 3.4.07 ஆம் திகதி இருந்தது. இது வெறும் நாளுலா மட்டும் இல்லாமல் ஒரு நல்ல அறிவுள்ள சுற்றுலா போன்று எனது உணர்வு கூறியது.லக்சிகனுடம் மற்றும் எல்லா நண்பர்களுடனும் சேர்ந்து பழகும் வாய்ப்பும் ஆசானுடன் சுதந்திரமாக கதைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் இதுவாகும்.
உணர்வுடன் சு. பவித்திரன்.
*
சென்ற செவ்வாய்க்கிழமை நானும் ஆசானும் சக நண்பர்களுடன் சென்ற சுற்றுலா மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. இது நல்ல அறிவுள்ள சுற்றுலா போன்ற எனது உணர்வு ஆகும். ஜெசிக்கா.
*
எனது நாளுலா உணர்வு, எனது இலைதுளிர் கால சுற்றுலா ஆசானும், தமிழ் பாடசாலை நண்பர்களுடனும் மிக மகிழ்ச்சியாகவும் அறிவுபூர்வமான ஒரு சுற்றுலாவாகவும் என் மனதில் உணர்ந்தேன்.
லக்சிகன்.
*
என்னுடைய நாளுலா உணர்வுகள், நான் மிகச்சந்தோசமாக எனது நாளுலாவை ஆசானுடனும் சக மாணவமாணவிகளுடன் பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்தது எனக்கு மிகப்பிரயோசனமாக இருந்தது. நான் பல புதிய விடையங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. நான் நான்காம் வகுப்பில் எனது ஆசானுடன் சென்ற நாளுலாவை என்றுமே மறக்கமாட்டேன்.
சிவராம்.
*
எனது நாளுலா உணர்வு, நானும் சக மாணவர்களும் எங்கள் ஆசானுடன் சென்ற சுற்றுலா மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு நாளுலா திரும்பவும் வராதா என்று நினைக்கக் கூடியதாக அமைந்தது.
வதூஷன்.
*
எனது உணர்வு, 3.4.07 அன்று ஒரு நாளுலா ஆசானும் சக மாணவர்களுடன் ஒரு நாளுலா சென்றோம் அது மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. அந்நாளுலாவில் நீர்வீழ்ச்சி பழைய பொருட்கள், காட்சிகள் பார்த்தோம்.11 மணித்தியாலங்கள் பார்த்து மகிழ்ந்தோம்
அனுசா.
*
எனது உணர்வு, 3.4.07 அன்று நானும் எனது தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசானுடன் நாளுலா போனோம். நாங்கள் இயற்கை காட்சிகளையும் பல அறிவு சம்பந்தமான இடங்களையும் பார்த்தோம். இந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த நாளாகும். இதை என்றும் மறக்க முடியாது.
யொனாத்தன்.
*
உணர்வின் வரிகள், என் நண்பர்களுடனும் என் ஆசானுடனும் நான் நாளுலா சென்றேன். அந்த இனிய நாள் மீண்டும் வருமா என ஆசை படுகின்றேன். நாங்கள் உலகின் வளர்ச்சிக்கேற்ப முறையில் வளர ஆசைப்படுகின்றனர் பெற்றோர் அதை செயல் வடிவத்தில் உருவாக்க வழி நடத்தும் என் அன்பின் ஆசான் ஓயாமல் பணி தொடர கை கொடுப்பேன்.
என்றும் மழலைச்செல்லம் அஜந். சிவஞானம்.
*
எனது உணர்வு , 3.4.07 அன்று ஒரு நாளுலாவாக எனது தமிழ் ஆசிரியர் ஆசானும் சக மாணவர்களுடனும் நான் முதல் முறையாக சுற்றுலா சென்ற நாள் இதுவாகும் எனது படிப்பிற்கு மிகவும் உதவி கொடுக்க கூடியா ஒரு காட்சியாக இந்த சுற்றுலா சென்ற நாள் இதுவே முதல் நாள் உலா ஆகும்.

கருத்துகள் இல்லை: