கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 24 ஜூன், 2007

ஊர்மனை

*

எனது தாத்தா மண்ணைத் தோண்டினார்

தங்கம் கிடைத்தது

எனது அப்பா மண்ணைத் தோண்டினார்

தண்ணீர் கிடைத்தது

நான் மண்ணைத் தோண்டுகிறேன்

வெடிகுண்டுகள் கிடைக்கின்றன

எனது மகன் மண்ணைத் தோண்டும் போது

எலும்புக்கூடுகள் தான் கிடைக்கும்

*

  • அம்மானைக்கொண்டு ஆப்புவைக்கலாம் எண்டு பாருங்கோ சிங்களவர் நினைத்தவயள், ஆனால் இருட்டிலும் புலிக்கண் விழிப்பாய் இருக்கும் பாருங்கோ! அம்மானைப்போல ஆயிரம் பேரை கண்டவர் பாருங்கோ தலைவர் பிரபாகரன்; எல்லா இரண்டர்களும் கும்மாளம் கொட்டேக்கில, இவயளுகு !அ! எல்லாளன் தான் சரியான ஆள் சிங்களத்தாரின் தலையில ஆப்பிறக்கினார் ஆப்பு. புலிக்கே புல்லா?
  • சிரித்துக்கொண்டே தமிழர் மனுவை வாங்குகிறார்கள் பாருங்கோ (வெள்ளையர்கள்) சிந்திக்காமலே பணத்தைக்கொடுக்கிறார்கள் காணும் சிறிலங்காவுக்கு. இது தான் சொல்லுவார்கள் எங்கட படியாத சுருட்டுச்சுத்துகற கைநாட்டுகள் "சிரித்துக்கொண்டே கழுத்தறுப்பான் பார்த்துக்கொள்". அதிலும் நோர்வேகாரன் வலு கெட்டிக்காரன்.
  • நித்திரையில் நடக்கும் நோயில தமிழரை நாடு கடத்தினார்களாம் மகிந்தர் கூட்டணி.
  • செம்மணியில் மனிசரைப் புதைச்சுப்போட்டு பல்லியையும் பாம்பையும் தான் புதைச்சனாங்கள் எண்டேக்க நம்பின உலகம் தானே! நாசங்கெட்ட உலகம்
  • அந்தாள அதுதான் சிவராம கொண்டு போட்டு அந்தாளுண்ட மண்டைக்குள்ளேயும் கிளறிப்பாத்தாங்களாம் இந்தாள் இதுக்குள்ளேயும் ஏதும் மறைச்சு வைச்சிருக்கோ எண்டு.
  • புத்தனுக்கு எழுதின வரலாறு (மகாவம்சம்) ஒன்று எழுத்திப்போட்டு அதையிப்ப திரும்பவும் தமிழ்ரோட சண்டைய போட்டு புதுப்பிச்சுக்கொண்டெல்லே திரியினம் .
  • கறுப்பு யூலையில சூளை நெருப்புக்குள்ள போட்டு எரிச்சுப்போட்டு சேர்ந்து வாழ் சேர்ந்து வாழ் என்கிறான்களே எப்படி வாழுறது காணும்.
  • வெள்ளை நிற புத்தகோயிலில புத்தரின் இரத்தக்கண்ணீர் இது தான் சிறிங்காவோட நிலமை காணும்.
  • விறகு வெட்டத்தெரிஞ்சா, இளநீர் வெட்டத்தெரிஞ்சா நீங்க தான் ராசா சிறிலங்காவில.
  • ஆய்தம் எல்லாம் வேணாமாம் ' லாடர்' தந்தா காணுமாம்.
  • கீழால கொடுத்தது பத்தாது எண்டுகாணும் மேலால கொடுக்கப்போயினம்.
  • கொழுப்பில இருந்து அனுப்பின தமிழருக்கு புதுசா சத்துணவு திட்டமாமெல்ல கேள்விப்பட்டனீங்களோ?
  • சிங்கள இராணுவம் நிறைய சாகிறதுக்கு என்ன காரணம் தெரியுமே? பைல்லா தான்.
  • இனி நாய் வளர்க்கிற சனங்களெல்லாம் பொடியங்களோட கடுப்பா இருக்கப்போகுது. ஏனென்று சொன்னால் நாயையும் கவனமாய் பேணவேணுமாம். ஆள் சாப்பிடவே சட்டியில சாப்பாடில்ல. நாயெங்க சாப்பிடுறது.
  • இப்பவே உலகம் வெப்பமாகிக்கொண்டெல்லே போகுது காணும். வட துருவத்தில இருக்கிற பனி மலையெல்லாம் உருகிக்கொண்டெல்லே போகுது மகிழ்ச்சி கொள்ளாக் கூடாது கீழ்திசையில இருக்கிற சின்னச்சின்ன தீவெல்லாம் மெல்ல மெல்ல மூழ்கப்போகுது பாருங்கோ. இன்னுமொரு 2050 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகத்தில் பெரிய மாற்றம் வரப்போகுது. நாளைக்கு வரப்போற துன்பத்தைத் தெரியாமல் குதுமங்குத்துகினம் மக்களென்றால் பாருங்கவன்.
  • வறுமையைத் தாங்கலாம் வெறுமையைத் தாங்க முடியாது பாருங்கோ.
  • இப்பதான் சிறுவர் மேல் அக்கறை எடுக்கினம் பாருங்கோ உலகத்தார். அதுவும் கண் துடைப்பு தானோ பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை: