கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

விழித்துக்கொள்வோம்



இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை பற்றி சில உண்மைகள்..!

உலகில் உள்ள விவசாய நிலங்களில் மிகவும் அற்புதமான சில பண்புகள் கொண்ட நிலங்கள் இவை. ஒரு ஆண்டில் எல்லா காலநிலையிலும் விவசாயம் செய்யக்கூடிய மண் நம் தாய்மண். இது ஒருநாளில் ஒருவரின் உழைப்பால் இப்படி மாறியது கிடையாது...

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம் பாட்டன் பூட்டன் என அனைவரும் அரும்பாடுபட்டு நமக்காக சேர்த்து வைத்த சொத்து. இந்த மண் இவ்வளவு செழிப்பாக இருப்பதற்கு காரணம் அவர்களின் உழைப்பு. அள்ள அள்ள குறையாத அமுத கலசம். நீர்வளம்மும் அப்படிதான் என் நினைவு தெரிந்து கிணற்றில் கைகளால் தண்ணீர் அள்ளியது உண்டு.

ஆனால், இன்று இவை அனைத்தையுமே தொலைத்து கொண்டிருக்கிறோம். இன்று கிணறுகளை பார்ப்பதே அபூர்வமாக உள்ளது. இது போன்ற நிலங்கள் உலகில் அபூர்வமானவை. இந்த மண்ணின் வளத்தை பார்த்து இந்த மண் நம் நாட்டில் நம்மிடம் இல்லையே என ஏங்காதா வெளிநாட்டு விவசாயிகளே இல்லை. வாய்ப்புகள் கிடைத்தால் நீங்களே அவர்களிடம் விசாரித்து பாருங்கள் தெரியும்.

நம்மிடம் இருப்பதினாலோ என்னவோ அதன் மதிப்பு நமக்கு தெரியவில்லை. விலைமதிப்பில்ல நம் சொத்தை விலைநிலங்களாக மாற்றிவருகிறோம்.

விழித்துக்கொள்வோம் தமிழா..!
இது நம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சி..!
நம் வாழ்வாதாரத்தை அழித்து நம்மை பிறரிடம் கையேந்த வைக்க நடக்கும் சூழ்ச்சி..!
விழித்துக்கொள்வோம்..!

உலகில் மூத்தகுடியான தமிழர் இன சந்ததிகள் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டுசெல்லாதீர்கள்..!
நன்றி.
- துரை.அதிரதன்.



கருத்துகள் இல்லை: