கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

புரவலர்களும் புலவர்களாய்!

தமிழ் மன்னர்கள் தொட்டு தமிழ்த்தலைவர்கள் வரை பாடல்களும் செய்யுள்களும்  எழுதுவதில் வல்லவர்களாக உள்ளனர்.  தமிழில் பற்றுக்கொண்டவர்களே தமிழினத்தையும் காப்பர் இந்தக் கவிதை புறநானூறு காணாத புதிய வரலாறு.புலவர்களாக புரவலர்கள் எழுதியவற்றை இங்கு தொகுத்து வைப்பதில் தமிழாசான் மகிழ்வடைகிறேன்.  


தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை

நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்…
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமதுஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்…ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்…
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்…
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன…

எமது படையணி விரைகிறது…
எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்…
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்…!

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.




ஆக்கியவர் :திரு. வே.பிரபாகரன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)
 
 

கருத்துகள் இல்லை: