கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

புதிய கல்விச் சிந்தனைகள்

மனித சமுதாயத்தின் ஆரம்பத்திலிருந்தே கல்வியும் வளர்ந்து வந்துள்ளது, என்பது சமூகவரலாற்றில் நாம் காணும் உண்மை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் அதன் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் தமக்குப் பொருத்தமானதை, தேவையானதைக் கற்றுக்கொள்கின்றது. தேவைகள் மட்டுமல்லாமல் காலம், சூழல் என்பவையும் கல்வியில் அதன் போக்கு, பொருள், இலக்கு, முறை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அத்தகைய மாற்றங்களுக்கு அடிப்படைகளையும் அவற்றுக்கான விளக்கங்களையும் சிந்தனையாளர்கள் வழங்குகின்றார்கள். அவர்களுடைய சிந்தனைகள் அவரவர் வாழ்நாட் கால, தேச, சமூக வர்த்தகமானங்களின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. இந்த அடிப்படையில் கல்வி பற்றிய சிந்தனைகள் பாரம்பரிய நோக்கில் பழையனவாகவும் மாற்ற வழக்கில் புதியனவாகவும் இனங்காணப்படக் கூடியன.

பிளற்றோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் காலத்திலிருந்து ரூசோ, கொமெனியஸ், புறொபல், பெஸ்டலோசி போன்றோரும் கூட்டாக,. டூயி, காந்தி, தாகூர் போனறோர் வரை பல்வேறு கோணங்களில் கல்வியின் தத்துவார்த்த அடிப்படைகளை விளக்கிய மேதைகளை நாம் காண்கின்றோம். அவர்களுடைய சிந்தனைகள் அவர்கள் வாழ்ந்த தேசம்ஃசமூகம் எதிர்நோக்கிய பிரச்சனைகள் என்பவற்றால் உருவாக்ப்பட்னஃநெறிப்படுத்தப்பட்டன என்பது கண்கூடு. ஆரம்பத்தில் ஆன்மீக நோக்கத்தை வலியுறித்திய சிந்தனைகள் காலப்போக்கில் அரசியல், பொருளாதார, சமூகவியல் அழுத்தங்களையொட்டி வளர்த்தமை கல்வி வரலாற்றில் பரவலாகக் காணப்படுவது@ அண்மைக் காலங்களில் அத்தகைய கல்விச் சிந்தனைகளில் புதிய புரட்சிகரமான போக்கு உருவெடுத்திருப்பதை அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது.

இவ்விதம் உருவெடுத்துள்ள புதிய சிந்தனைப் போக்கில் கல்வியானது அகல்விரிப் பண்புடையதாய், ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வுக்காய், சமூக பேதங்களை மாற்றியமைப்பதற்காய், தற்சார்புத் தன்மை கொண்டதாய், மானிட மேம்பாட்டை உறுதிப்படுத்துவதாய் பல்வேறு ஒளிகளில் மிளிர்கின்றது.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கல்விலியற் துறைத் தலைவர் பேராசிரியர் வ.ஆறுமுகம் அவர்கள் புதிய கல்விச் சிந்தனைகள் நூலுக்கு வழங்கிய முன்னுரையிலிருந்து…..

கருத்துகள் இல்லை: