கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 17 ஜனவரி, 2009

வெல்வோம் நாம்

தாய்த் தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவுப் போராளி
திரு.தொல்.திருமாவளவனின்
சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆதரித்து நோர்வே வாழ் தமிழ்மக்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றனர். தமிழாசான் பதிவேடு இணைவலையும் உளமாற வாழ்த்துகிறோம்.உன்னத்தமிழனுக்கு உலகம் என்றும் பின்னிற்கும்.

திருமாவளவன் அண்ணாவிற்கு...

திலீபனை இழந்தோம்
பூபதி அம்மாவையும் இழந்தோம்
மறைமலை நகரிலே உண்ணாநிலையில்
உங்களையும் இழப்பதா?

அறவழிப் பாதையில் விழுந்து
ஆயுதப் போரிலே எழுந்தோம்
அதுபோதும் மீண்டும்
அறவழிப் பாதையில் வீழ்வதா?

இலங்கையில் போரை நிறுத்த
இறுதி வழியாக நினைத்து
உறுதியாய் எழுந்த உங்களை
எங்கள் இதயங்களில் சுமக்கிறோம்.

உங்கள் கருத்துகள் வெல்லட்டும்
நாங்கள் வாழ்த்துகிறோம்
உங்களை இழந்த பிறகு
நாங்கள் வெல்வதை விரும்பவில்லை!

வடக்கு வாசலில் குந்தியிருந்து
வயிறு நிறைய உண்டு
மனம் மகிழும் மந்திரிகளுக்கு
உங்கள் பசியின் அருமை புரியாது!

நீர்த் தடாகங்களில்
நீச்சலடிக்கும் மீன்களால்
நெருப்புக் கடலில்
நீச்சலடிக்க எப்படி முடியும்?

மரணத்தின் எச்சங்களுக்கு நடுவில்
வாழ்ந்தே பழக்கமில்லாதவரிடம்
மரணக் குழிகளில் வாழ்வது பற்றி
எப்படி வாதிட முடியும்?

இந்த உலகத்தின்
விளிம்புகளை எல்லாம்
அதிர வைத்திடும் உங்கள்
குரல் எமக்கு வேண்டும்.

காசாவிற்கு குரல்கொடுக்க
ஆயிரம் தலைவர்கள் இருக்கலாம்
ஈழத் தமிழருக்காய் குரல்கொடுக்க
என்றும் நீங்கள் வேண்டும்.

காசாவில் அமைதியைத் தேடும்
உங்கள் இந்தியப் பிரதமருக்கு
இலங்கையில் நிகழும் போரை
நிறுத்திட மனமில்லையே... ஏன்?

வசீகரன்
நோர்வே
18.01.2009
நன்றி வசீகரன்

கருத்துகள் இல்லை: