கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 5 ஜனவரி, 2013

வீரமுனை படுகொலை


நன்றி
ஈழ மகான் தமிழ்

அம்பாறை வீரமுனை படுகொலையின் 22வது ஆண்டு நினைவுதினம் நாளை அனுஸ்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை படுகொலையின் 22வது ஆண்டு நினைவுதினம் உணர்வு ரீதியாக நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990௮௧2 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இன அழிப்பின் உச்சமாக 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் முகமாக 22 ஆவது ஆண்டு நிறைவு நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது.

அந்த துர்சம்பவத்தை நினைவு கூர்ந்து வீரமுனை மக்கள் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயச் சந்தியில் நினைவுத் தூபியொன்றை அமைத்துள்ளனர்.

1954 முதல் 1990 வரை இதே வீரமுனை மக்கள் பல காரணிகளாலும் இம்சைப்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் 1990 ஆண்டு காலத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காணமல் போயிருந்தனர்.

1990௮௧2 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை ஆகிய பிரதேச மக்களில் சுமார் 55 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பில் பல விசாரணைகள் நடைபெற்ற போதும் அது குறித்து சரியான விளக்கங்கள் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவோ இல்லை.

இதே போல் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பல இடங்களில் படுகொலைகள் நடைபெற்றதுடன், வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சித்தாண்டி முருகன், ஆலயம் போன்ற இடங்களிலிருந்த அகதி முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்டு பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

அத்துடன் பயணங்களின் போதும் வேறு இடங்களில் வைத்தும் பல தமிழர்கள் கடத்தப்பட்டுமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: