பாடியவர்: வான்மீகியார்
திணை: காஞ்சி
துறை: மனையறம், துறவறம்
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட் டனரே காதலர் அதனால்
விட்டோரை விடாஅள் திருவே
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

நன்றி,படம்:greatertelugu.com
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
கதிரவனால் சூழப்பட்ட இந்தப் பயன்படும் உலகம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
ஒரு நாளில் ஏழு பேரை தலைவராகக் கொண்டாற் போன்ற தன்மையுடையது
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
உலகியலான இல்லறத்தையும் தவ வாழ்வான துறவறத்தையும் சீர்தூக்கினால் தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
இல்லறம் கடுகளவேனும் நிகராகா ஆகையால்
கைவிட் டனரே காதலர் அதனால்
பற்றுவாழ்வைக் கைவிட்டவரே இவ்வுலகில் விரும்பப்படுவர்
விட்டோரை விடாஅள் திருவே
அவரை திருமகளும் கைவிடாள்
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே
துறவறம் மேற்கொள்ளாதோரை அவள் கைவிடுவாள். அவர் உழன்றே வாழ்க்கையை நடத்துவர்....
வான்மீகியார்/'வான்' மீகனார்

பற்றிச் சிறிது பார்ப்போம்
இவர் காக்கும் தெய்வங்களான திருமாலையும் திருமகளையும் தன் தெய்வங்களாக வணங்கியிருக்கிறார். அதனால் அழித்தல் தெய்வமான சிவத்தை பின்பற்றவில்லை போலும். ஆனால் இராவணனோ சிவபத்தி நிறைந்தவன். இராவணனை இவருக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை. இராவணன் ஏழு நாட்டை ஆண்டான் என்ற செவிவழிச்செய்திகள் கூறுகின்றன அதாவது தமிழகத்தையும் சேர்த்தே ஆண்டான். இராமன் தந்தையின் சொல்கேட்டு நாட்டைத் துறந்தவன் அதற்கு முன் காத்தல் தொழிலைச் செய்தவன். ஆஃவே இராமன் இவரால் விரும்பப்பட்டவன் ஆகிறான்.அவனை அவள் மனைவி பின் தொடர்ந்தே சென்றாள். இருவரையும் தான் வணங்கும் கடவுளராய் எண்ணி இராமாயணம் என்னும் நூலைச் செய்திருக்கலாம். இப்புறப் பாடலை எழுதியவரும் அவரே.பெரும்பாலும் தமிழகம் சிவமத்தை மூலமதமாக கொண்டதாலும் தெற்கே சிவமத்தான் இராவணன் தமிழ்க் கொள்கையோடு வாழ்ந்தமையாலும் வான்மீகியார் துறவறத்தை விரும்பி வடக்கே புலம் பெயர்ந்த பின் அங்கு வாழ்பவர் அறிந்து கொள்ள இராமாயணத்தை வடமொழியில் எழுதியிருக்கலாம் என்பது துணிபு. இவர் காட்டும் மேற்கோளடிகளால் கண்டுணர்க.

நன்றி,படம்:ancientindians.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக