கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 2 ஏப்ரல், 2012

போர்க்களத்து நாயகன்

திணை இலக்கியம் : புறநானூறு
பாடியவர்: ஒரூஉத்தனார்
திணை: தும்பை
துறை: தானைமறம்


கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணிநிலை அலறக் கூவை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின் ஓம்புமின் இவண்! ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே!

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய

வளைவாகக் கட்டப்பட்ட மாலையைச் சூடுதல் இவனுக்குப் பொருந்தியுள்ளது!வளைந்த அலை போன்ற ஆடையை அணிதலும் இவனுக்குப் பொருந்தியுள்ளது!வேந்தன் விரும்புவதையே தானும் விரும்பிச் சொல்லி அவனைத் தன் வயப்படுத்தலும் இவனுக்கே பொருந்தியுள்ளது

திணிநிலை அலறக் கூவை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி

(பகைவர்) வஞ்சம் கொண்டு புடைசூழ்ந்த போர்க்களத்தில் உள்ள பகைவீரர் அஞ்சி அலறி சிதறும்படி கூரிய வேலைக் கையில் எடுத்துக் கொண்டு படையைப் பிளந்து சென்றான். அப்போது,

ஓம்புமின் ஓம்புமின் இவண்என ஓம்பாது
"மேலே தொடர்ந்து செல்லாதபடு தடுத்துவிடுங்காள் தடுத்துவிடுங்கள்" என்று பகை தங்களுக்குள் கூறிக்கொண்டு தடுத்தனர்

தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

அவர்களின் தடையை மீறிக்கடந்து சங்கிலியால் கட்டப்பட்ட யானைபோல் கொல்லப்பட்டு வீழ்ந்த வீரர் குடல்கள் காலைத் தடுக்கவும் வீச்சாய் கன்றை விரும்பும் ஆவைப்போல் முன்னரணில் பகைவரை எதிர்த்து பகைவீரர்களால் வளைத்துக்கொள்ளப்பட்டிருந்த தன் நண்பனிடம் வரலானான்.

அவனைப் போலவே இவனும்

கருத்துகள் இல்லை: