கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 10 ஜூலை, 2010

சுற்றுலாப் பயணம் உயசக (2041)


ஓசுலோவிலிருந்து துரண்கெயிம் வரை, துரண்கெயிமிலிருந்து ஓசுலோ வரை(Oslo - Trondheim/ Trondheim - Oslo). நம் சுற்றுலாப் பயணம்.
நண்பகல் ஒரு மணியளவில் சிற்றூர்தியில் புறப்பட்டோம்.
மழை பெய்து கொண்டிருந்தது அதனால் வேகமாக ஓடாமல் அளவாகவே ஓடிக்கொண்டிருந்தோம். விண்ணூர்தி நிலைய தங்ககத்துக்கு அருகில் எரிபொருள் நிலையம் உள்ளது. அங்கே சற்று ஓய்வெடுத்துக் கொண்டோம்.

அதன் பின்,

அங்கிருந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பயணித்து காமார்(Hamar) என்ற இடத்தை அடைந்தோம்.அங்கு பனிகால ஒலிம்பிக் நடந்த உள்ளரங்கம் உள்ளது.

அங்கு ஒலிம்பிக் நடைபெற்ற ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு.

நாம் அவ்விடத்தில் நின்று மீண்டும் ஓய்வெடுத்துக் கொண்டோம். அங்கே உணவரிந்தி விட்டு சின்னகாமாருக்குச் சென்றோம்.பல மணிநேரம் பயணித்து சின்னகாமாரை அடைந்தோம். அங்கே உள்ள பேரங்காடியில் சில பொருள்கள் வாங்கிக்கொண்டு குளிர்கூழும் உண்டுவிட்டு சிற்றூர்தியில் மீண்டும் பயணித்தோம்.
சிலமணி நேர ஓட்டம் இருமருங்கிலும் காட்டுமரங்கள் ஆற்றின் ஓட்டம் அழகான இயற்கைக் காட்சி
சின்னகாமாருக்கு(Lille Hammar) அடுத்ததாய் ஒய்யர் (øyer) என்ற இடத்தில் கம்பளியாடுகள் மேய்ந்துகொண்டு நின்றன.
அதன் அருகில் தற்கால தங்குமிடம் ( champing ). அங்கே பல இடங்களிலும் இருந்து நோர்வேநாட்டவர் வந்து தங்குவதுண்டு.அங்கு
பேர்கன் என்ற இடத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரரை சந்தித்தோம். அவர்கள் மகிழ்வான நண்பர்கள். அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


பின், நெடுஞ்சேய்மையாகப் பயணித்துப் பல மாநிலங்களினூடாக இறிங்கபூ(Ringebu) அடைந்தோம். அதற்கிடையில் மலைத்தொடரினூடாக அருவிகளையும் ஆற்றின் ஓட்டத்தையும் கண்டுகளித்தோம்.அடுத்து வின்சுதிறா( Vinstra), வின்சுதிறா (Vinstra) ஒரு அழகிய ஊர். அங்கும் பல சிறப்புகள் உண்டு. மலையடிவாரத்தில் அமைந்துள்ள அவ்விடம் பார்ப்பதற்கு மிகமிக மகிழ்வானது.நிற்க, (முன்பு ஒரு முறை தொடர் வண்டியில் துரோணியம் செல்லும் போது இடையே இங்கிருந்து வின்சுதிறா (Vinstra) சில தொலைவில் ஆறு பெருகிவிட்டது அதனால் தொடர்வண்டி செல்லாது என்று ஏந்துகளாக பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர். அது எமக்கு தெரியாது.அவ்வண்டி மீண்டும் ஓசுலோ திரும்பியது. அதையறிந்து ஓடிக்கொண்டிருந்த போதே வண்டியில் பயணரோடு பேசினோம் உடனே அடுத்த தரிப்பிடத்தில் இறக்கிவிட்டார்கள்.


இதுவே வின்சுதிறா.




புரட்சியை வெளிப்படித்தும் இளைஞனின் கலைவடிவம்.




இது நோர்வே நாட்டு முன்னோடி ஒருவரின் சிலை




மீண்டும் நிற்க,
அவர்களின் உதவியோடு மகிழுந்தில் துரோணியம் சென்றோம். அதற்காக கொடுத்த பணம் பதினேழாயிரம் குரோணர். அப்பணத்தைப் பயணமுகவர்களே பொறுப்பேற்றனர்.அதனால் அன்று இறங்கிய இவ்விடத்தை எம்மால் மறக்க முடியாது).
வின்சுதிறா(Vinstra) தாண்டி ஒத்தா(Otta) ஊடாக சென்ருகொண்டிருந்தோம். ஒத்தாவில்(Otta) தங்குமிடங்கள் செய்திகொடுக்கும் பலகை அருகே ஓய்வெடுக்க ஏந்துகள் அமைக்கப்பட்டிடுந்தன.

இது செய்திபலகைக்கு எடுத்துக்காட்டு.



சென்ற வாட்டி பன்றி இறைச்சியும் இறைச்சிக் கலவை உணவும் சுட்டுச் சாப்பிட்டோம்.



இம்முறை தொவ்றே(Dovre) எரிபொருள் அருகே இறைச்சி சுடுவதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் அமைதியாக சாப்பிட்டும் ஓய்வெடுத்தும் கொண்டோம் .

நேரம் என்னவாக இருக்கும் என்று பார்தால் இரவு பத்துமணி.ஒசுலோவிலிருந்து(Oslo) தொவ்றே(Dovre) சிற்றூர்தி ஓட்டம் ஏ6 வழியாக கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் கழிந்துள்ளன. தொவ்றேவிலிருந்து கிட்டத்தட ஒருமணிநேரம் பயணித்து உடொம்பசு(Dombås) என்னும் இடத்தை அடைந்தோம்.

அங்கே உணவகங்கள் எரிபொருள் நிலையங்கள் தங்குமிடங்கள் உல்லாச பயணிக்கான செய்திப் பலகையென அனைத்து ஏந்துகளும் உள்ளன. நாங்கள் அங்கு நின்று ஓய்வெடுப்பதுண்டு.உடொம்பொசில்(Dombås) இருந்து இருகிளையாக பிரிகிறது ஒன்று ஓளசுண்டு (Ålesund)மோள்டே(Molde)மோள்டேயில் நம் தமிழரும் வாழ்கின்றனர்.அங்கு தமிழ்ப் பள்ளியும் உண்டு. மற்றையது துரண்கெயிம்.

நாம் துரண்கெயிம் பயணித்தோம். உடொம்பசிலிருந்து(Dombås) ஏ6 தொவ்றே மலைத்தொடர்(Dovre fjell) ஊடாக நீண்டவழிச் சேய்மை பயணிக்க வேண்டும் . உச்சிமலை, மக்கள் இருப்பிடங்கள் இருக்காது. அடிக்கடி ஓய்வெடுக்க இடங்கள் உள்ளன.ஒரு நாள் செல்லும்போது கடுமிடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது.சிற்றூர்தி அடிக்கடி ஆடியது. காற்றை அளப்பதற்கு காற்று அறிகருவியும் ஓரிரு இடத்தில் பொருத்தியுள்ளனர். பகலில் பார்த்தால் நாங்கள் துறக்கத்தில் நிற்பதாக தோற்றும் அவ்வளவு அழகு. சித்தப்பயிற்சி செய்வதற்கு ஏற்ற இடம்.நீண்டவழி பயணித்து ஒப்தாலை(Oppdal)அடைந்தோம் .சிறிய ஊரெனினும் அழகாக நகரம் போல் இருந்தது ஓடும் போது கவனம் வேண்டும் குடியிருப்புகள் பல உள்ளன. அங்கே ஓடும் அளவு மணிக்கு ஐம்பது கிலோமீற்றர்(50k/h).அங்கு விண்ணூர்தி நிலையமும் உண்டு.அங்கிருந்து பயணித்து சோறன்(Støren) இடத்தை அடைந்தோம். பண்ணைகள் நிறைந்த இடம். தங்குமிடங்களும் உண்டு. ஓய்வெடுக்காமல் நேரே துரண்கெயிம் சென்றோம். துரண்கெயிம் இருப்பிடத்தை அடைந்த பொழுது மணி விடியற் காலை இரண்டுமணி.ஒசுலோவில் (Oslo) இருந்து துரண்கெயிம் (Trondheim) வரை பன்னிரண்டு மணிநேரம்.



மீண்டும் தொடரும்......

1 கருத்து:

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

நோர்வே தமிழ் இலக்கிய நிகழ்வுகளை அடிக்கடி எழுதுங்கள். எதிர்பார்க்கிறேன். அதுபோல் அந்த நாட்டில் வாழும் தமிழர்கள் பற்றியும் எழுதலாம்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா