கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 16 மே, 2007

அரியகலையூரின் (அரியாலை) பேரன்

சிவகுமார் சத்தியா னந்தனெனும் ஈழத்
தவப்புதல்வன் ஐப்பசித் திங்கள் - அவதரித்தான்
அப்பன் எதிர்பார்த்த வீரன் தமிழரசன்
ஐப்பசியே வீழ்ந்தான் மடிந்து

மடிந்ததம் சேயவன் நாட்டுப் பணியை
முடிப்பேனெ னத்தானு மொருவனாய்ப் - பொட்டு
படையணியிற் சேர்ந்து வெடிவிபத்தின் போதே
யுடல்சரித்தான் தந்தை அரசன்

மன்னனுக்கு மந்திரிபோல் மானத் தலைவனுக்
கண்ணன் மதியுரைஞர் போரிடும் - மண்ணாம்
தமிழீழ நம்நாட்டுத் தேசக் குரலோனே
மாமணியாய் வந்த திரு

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினாள் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

கரும்புலி வான்புலி எல்லைப் படையுமா
வாரிக் கடற்புலி காலால் தரைப்புலி
வேவுப்புலி வேங்கைப் புலனாய்வும் பெண்புலியும்
சாவுக்கு மஞ்சாப் படை

மூவிலக்க மக்களை முள்வேலிக் கம்பிக்குள்
ஈவிரக்க மின்றியே இலங்கையின் - தீவிலே
சாவடிக்கும் சிங்கள னாணவம் தூளாகத்
தீவிரமாய்ப் போரிடுவோம் நாம்

உலக வலமும் வடமலை நோர்வே
வலமும் தமிழீழ மக்கள் - நிலையும்
கூறி யுலகத் தமிழரை யொன்றிணைக்கும்
பேரிகையே நம்வான் முரசு

ஞாயிறு செவ்வாய் வியாழன் தினங்களில்
நேயமிக்க நல்லோ(ர்) ரொலிவிளம்பி யென்றே
முழங்குக சங்கே முழங்கு

அன்னைநம் பூபதிநல் கல்விக் கலைக்கூடம்
சென்று பயிலடா தம்பீஇ - நன்றாய்
மொழியூறும் தெள்ளு தமிழ்ப்புலமை கொண்டு
செழும்பா செயலாமே நீ

கொக்குப்போல் கூகையை வெல்லும் வலகரக்
காக்கைபோல் பாயும் வரிப்புலிபோன்ம் - திக்கெட்டும்
வாழும் தமிழரே நாம் வலிமையானால்
ஈழம் மலரும் விரைந்து

எரிபொருளு(ம்) மேவுமெரி குண்டும் வடக்கே
யுருகும் பனிமலையும் காட்டு – மரத்தீயும்
ஓட்டை விழுமோசோன் மண்டலமும் வெய்யிலின்
சூடும் கடற்கோளும் கேடு

நிலமிசை நீள்வான் கடலிசை சோலை
மலர்மிசை மூச்சுக் குழலிடை – விலிமையுந்
தாழா வுறுதியும் தந்தவரே நம்தமிழ்
ஈழமா வீரர் நிறைந்து

செந்தமிழ் மண்ணைப் புடைசூழ்ந்து சூறையாடி
கந்தகமும் வெந்தணலும் தூவித் தமிழீழ
மாந்தரை கொன்றழித்த கொல்மகிந்த
குந்தகச் சிங்களத்தைக் கொல்

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்க
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க(ள்) அவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

வீரனாய் தீரனாய் ஈழநாட் டரசனாய்
கீரனாய் சூரிய தேவனாய்ப் - பிரபா
கரன் வாழ்ந்தாரே காண்

கீற்றிசை நேக்கினேன் கண்ணீரில் நம்தமிழ்த்தாய்
மேற்றிசை நோக்கினால் போக்கின்றி நாற்புறமும்
மாந்த நிலைகெட்டு நற்றமிழ் மக்களோ
சாந்த மிழந்தனரே தளர்ந்து

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்கச்
சொந்த வுறவாய்ச் செயல்வீர – மாந்தராய்ப்
பந்தியிற் கூடி யருங்கருமஞ் செய்யெவெனத்
தந்திட்டார் மக்க ளவை

இப்படி நேருமென் றெண்ணி யிருந்தோமோ
எப்படிச் சொல்வேனோ யென்மொழியால் - அப்பனே
உன்னசை வாலுலகங் காப்பவனே எம்முயிர்க்கு
வன்புலி வல்லமை தா

ஈழமண் மீட்புப்போ ரில்கள மாடி
விழுந்தனன் சங்கரும் வித்தாய் - எழுந்தது
மீண்டும் நடுகல் வழிபாடு போற்றிப்
பணிந்து தொழுவோமே நாம்

அரியாலை யூரிலே யமர்ந்திருப்பா ளம்பாள்
அருள்மிகு தெய்வ முமவளே - பிரப்பங்
குளமுத்து மாரியம்மன் நல்கு மருள்வேண்டி
யுள்ளம் தொழுதேன் நினைந்து.

ஊரெழு மண்ணிற் பிறந்து திறமைகள்
தீரமாய்க் கற்றுக் கரிகாலன் - போரியல்
வீரனாய்த் தேர்ந்து மதியுரைஞ் மாணவனாய்ப்
பேராள னாய்த்திகழ்த் தான்

முடியுமென் போர்க்கவர் மூச்சே தடையன்று
முட்டிமோ தியேனுந் தாய்மண் - விடிவு
வருமென யெண்ணி முடி

ஊரெழு மண்ணிற் பிறந்து திறங்கள்
தீரமா யமைந்து மருத்துவத் தேர்விலுந்
தேர்ந்து தமிழீழ நாட்டுக்காய் திலீபன்
ஆற்றிய தொண்டே சிறப்பு

ஆழிப்பேய் வந்தூழித் தாண்டவ மாடி
யுழித்ததே யெம்மழகு நாட்டை – மழலையர்
தாய்மார் சிறுவர் பெரியோ ரெனவங்கு
மாய்ந்தனரே பாழ்பாடு நாள்

மேலைத் துருவத்தின் நோர்வே நிலத்திலே
ஆல்போ லிலங்கு மருந்தமிழைச் - சாலவும்
ஆய்ந்தப் புலமையிற் சொல்பொருள் நற்சுவையிற்
தோய வமைத்த களம்

கத்தியும் கதறியும் காப்பாற்ற வாரின்றி
யேதிலியாய்ச் சென்று சிறைபட்டோம் - புத்தாண்டோ
புத்தாண்டாய் இந்நாட்டில் வந்துமென்ன பாரும்
புதைகுழியிற் தானேநம் வாழ்வு

தலைவன் பிரபா கரனியக் கத்தில்
தறைமுறை காக்க விணைந்து – புலியாய்
செருக்கள மாடிவீழ்ந்த நம்மாவீ ரர்தம்
பெருமையோ டெண்ணிப் பணித்து

ஒற்றைச் சிறகிழந்து மோயாத வீரனவன்
சற்று முறுதி குலையா – மறவன்
கரிகாலன் தூது வனாயுல கெங்குங்
குரலெழுப்பி னான்தமிழ்ச் செல்வன்

புனித வுடைக்குள்ளே பேயாவி வாழுவதோ
புன்செயலால் ஈழத்தில் புத்தனெறி ஊன்றிடுமோ
புண்ணியன் சித்தார்த்தன் சொல்காக்கு மெப்போதும்
நன்மணி மேகலையே காண்

உயிரை நினைந்து விடுதலை நாள்மறந்து
மாய்தல் மறவர் சிறப்பல்ல – வயிரம் போல்
தாய்மானங் காக்கும் பிரபா கரன்வழியே
பாயும் புலியாகி வா

பாமாலை

அகர மமுதா எழுதி வழங்கும்
முகனை எதுகை மரபியல் - பாக்கள்
இணைவலையில் காணலாம் கற்கலாம் நீயிர்
வெண்பாவும் வடிக்கலாம் போய்

பங்குனித் திங்கள் பதினொராம் நாளன்று
எங்களது வீடும் இலங்கிற்று – கங்குலுஞ்
ஞாயிறுங் கைசேர்த்த போதுநம் சாமந்தி
சேயாய் கிடைத்ததே பேறு


அந்திப் பகல்காரி கார்த்திகைத் திங்களிலே
செந்நாப் புலவோர் அருந்தமிழ்ப் - பந்தலிலே
செய்யுளுஞ் சித்திரமுஞ் சேர்த்தே குணதாசன்
பயிற்றிய பாடமோ நன்று

உதயா வசியு மிணைந்தால் போதும்
இதமாய் வருடு மிசைவரி ரெண்டும்
புதமாய்ச் சுரத்தில் கதைகளுஞ் சொல்லும்
புதிய யிசை வார்ப்பு

கட்டளை கலித்துறை

செவ்வையும் மஞ்சளும் வண்ணங்கள் வீரத்தோ டமைதியாய்
செவ்வக் கொடியிற் சீறும்வரி புல்இ வலிமையதாய்
மாவலி வேந்தன் கரிகாலன் தந்த படைஞருமாய்க்
காவியஞ் செய்தே யெழுந்தாரே ஈழ நிலந்தனிலே

**

கதிரவேலு.பொன்னம்பலம்.சத்தியானந்தன்
முப்பாட்டன்,பாட்டன்,ஐயா
ச.உதயன்

கருத்துகள் இல்லை: