கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

இலண்டன் பயணம் தொடர்கிறது.....


அந்த மாலைப்பொழுதில் மணிக்கூட்டுக் கோபுரத்தைத் தாண்டிச் சாலையோரமாக உள்ள கட்டிடங்கலையும் இளையவர்களின் உருட்டித்தட்டு விலையாட்டையும் பார்த்துக்கொண்டு அரச மாளிகையிருக்கும் இடத்துக்குச் செல்கிறோம். தங்க முலாமிட்ட கதவுகள் வேலிக்கம்பிகளைப் பார்த்தோம்.இங்கிலாந்தின் பாதிப் பொருள்கள் தெற்காடியாவிற் சுட்டதுதான். ஒரு கொள்ளைக்கார நாட்டின் அரசியை வெள்ளைக்கார அரசி என்று எம்மவர்கள் அழைப்பதற்க்கு அறிவூட்டும் ஆங்கிலேமே கரணியம். பல இந்தியத் தேசியங்களை அறிவதற்கும் படித்த ஐரோப்பியரையும் அறிவதற்கு ஆங்கிலேமே ஊடகம். இங்கிலாந்தின் அரச பரம்பரையினர் மளிகையைச் சுற்றி அழகாக அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் காலாற பூங்காவென்று அருமையாக இருந்தது அந்த முற்றம் .அன்று அரச பரம்பரையினர் மட்டும் பயன்படுத்திய இடங்கள் எங்கும் இன்று மக்கள் மயமாக இருக்கிறது என்றால் அதற்குக் கிட்லருக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். ஏனென்றால் இரண்டாம் உலகப்போர் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அரச மாளிக்குள் செல்லமுடியாது அதனால் அதன் சுற்று வட்டாரத்தைப் பார்த்துக்கொண்டு திரிந்தோம் நிழல்பிடித்துக் கொண்டோம். அந்த இடத்தில் என்னைக் கவர்ந்த படிவங்கள் பல இருந்தன அவற்றுள் ஒன்று தாய் சேய் உருவகித்த சிலை.
சாலையோரத்தில் பழைய தெம்போடு கட்டிடம்

உயர்மட்ட அரச ஊழியர்கள் வணங்கும் வேலைப்பாடுடைய வணக்கத்தலம்

மக்களை நெறிப்படுத்தும் நெடுஞ்சாலை சாலை

கதலர்களும் நூல் வாசகர்களும் ஓவியர்களும் இடைஞரும் மகளிரும் கவிஞர்களும் படப்பிடிப்பலர்களும் பறவைகளும் அணில்களும் ஆரவாங்கள் என கலகலப்பாfஅ இயங்கும் பூங்கா


இதுதான் இமயத்தையே வென்ற இங்கிலாந்து நாட்டின் அரச பரம்பரை உலவித்திரிந்த முற்றத்தின் முன்வாயில். இதுவே மனதை உள்ளே இழுக்கும் வாயில்.

















கருத்துகள் இல்லை: