கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 29 ஜூன், 2013

கிறிசியான் மாநிலம் (Kristiansand)

நோர்வேயின் தென்னகத்தே அமைந்துள்ளது கிறிசியான்சன்(Kristiansand) என்னும் இந்த நகரம் முன்பு இந்நிலத்தை ஆண்ட மன்னன் பெயரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் பல சிறப்புகள் உள. இந்நகரைச்சுற்றிக்கடல் வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. பெருங்கப்பல்களின் இறங்கு துறையாக அமைந்துள்ளது.கணிசமான மழைவீழ்ச்சி காணப்படுவதால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை இடருக்குள் தள்ளுவதுண்டு.
சாலையோர வழிகாட்டி
கிறிசியான் தலைமுறையில் இவர் நான்காம் அரசர்
இவள் பெயர் கமிலா
கமிலா.கொல்லத்து 1813 ஆம் ஆண்டு பிறந்து 1895 ஆம் ஆண்டு தமது எண்பதிரண்டாவது அகவையில் இயற்கையெய்தினார். இவருடைய தந்தையார் திறமையான ஓவியர் இவருடைய உடன்பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகையால் இவருக்கு இயல்பாக குடும்பச்சூழல் கலை சூழ்ந்ததாய் அமைந்ததால் மிகத்திறன்பட்டவராய் வளர்ந்து நோர்வேயின் முன்னணி எழுத்தாளராகத் திகழ்ந்திருக்கிறார். இவரைச் சிறப்பித்து நோர்வே நாட்டுப் பணத்தாளான 100 குறோனரில் திருவுருவைப் பதித்துள்ளனர்.இவரது பதினான்காம் அகவையில் இருந்து பதினாறாம் அகவை வரைக்குள் மொழியிலும் இசையிலும் மிகத்திரனுள்ளவராய்த் திகழ்ந்துள்ளார். கவிதாயினியாகவும் பாடலாசிரியராகவும் குமூக அக்கறையுள்ள எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார்.தம் கணவரின் பேருதவியோடு செல்லச்செழிப்போடு வாழ்ந்தவர் கணவர் தம் இறப்புக்குப் பின்னர் மிகவும் வறியவராக வாழ்ந்து இயற்கையெய்துள்ளார்.
இவர் வரலாற்றை மேலும் பிறமொழியில் படித்துக்கொள்ள
                                  http://en.wikipedia.org/wiki/Camilla_Colle



கருத்துகள் இல்லை: