கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

காளைக்குக் கடனே!

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே


நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

திங்கள், 16 ஏப்ரல், 2012

நெடுந்தகை

பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: வாகை
துறை : வல்லான் முல்லை

மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.

கவிஞன் அழுதான் கவியாயிற்று

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

கிழமையும் நினதே!

பாடியவர்: மோசிசாத்தனார்
திணை: நொச்சி
துறை: செருவிடை வீழ்தல்

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.


'கிளி'நொச்சிநகர்


மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி!
மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தது போல் கரிய கொத்துக்கலையுடைய நொச்சியே!

போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
மலர்கள் மலந்த பல மரங்களுள்ளே சிறந்த(மிகுந்த)

காதல் நன்மரம் நீ; நிழற் றிசினே!
அன்பு கொள்வதற்குரிய நல்ல மரம் நீயேயாவாய் காவலையுடைய

கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
அகன்ற நகரத்தில் அழகான கண்கவர்

தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
வலையலை அணிந்த மகளிரின் இடையில் தழையாகவும் இருப்பாய்

காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
காவல் பொருந்திய மதிலிடத்தேயிருந்து அம்மதிலை கொள்வதற்கு எண்ணுவோர் பகைமையை அழிப்பதால்

ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
ஊர்ப்புறத்தைக் காவல் செய்கின்ற நெடுந்தகையின்

பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.
(தலையில்) அணிந்து கொள்ளப்படும் உரிமையும் உனதாகட்டுமே!

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கூகைக் கோரியார்




பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல்
துறை: பெருங்காஞ்சி

வாடா மாலை பாடினி அணியப்
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே