கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

இலண்டன் சுற்றுச்செலவு

இலண்டனில் விடுமுறை
இலண்டன் சுற்றுச்செலவு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இரண்டு ஏழல்கள் எம் நண்பரின் வீட்டில் தங்கி சுற்றுச்செலவைக் கழித்தோம். ஓசுலோ விண்ணூர்தி நிலையத்தில் ஏறி கெற்விக்கு என்னும் பிரித்தானிய நாட்டில் உள்ள விண்ணூர்தி நிலையத்தில் இறங்கி விக்ரோறியா தொடருந்து வண்டியை எடுத்து விக்ரோறியா சென்றடைந்தோம். அங்கிருந்து குகைவண்டியை எடுத்து சில நிலையங்களை அடைந்து இறுதியாக தென்கறோ என்னும் இடத்தை அடைந்து அங்குள்ள பூங்காவுக்குச் சென்று ஓய்வெடுத்து சில படங்களை நிழல்களை பிடித்துக் கொண்டு வீட்டை அடைந்தோம்.

விலங்ககம்
விக்ரோறியா பிராந்தியத்தில் உள்ள விலங்ககத்துக்குச் சென்றுள்ளோம்.அங்கு சில விலங்குகளை பார்வையுற்றோம் முதலாவதாக புலிகளை வளர்க்கும் பகுதிக்குச் சென்றிருந்தோம்.யாமும் எம்மக்களும் பார்வையுற்று மகிழ்ந்தோம்.புலிகளைப் பார்வையிட்ட போழ்து நம் தமிழீழ விடுதலைப் புலிகள் எம் நினைவில் வந்து போந்தார். தொடர்ந்து குரங்குகள் உள்ள பகுதிக்குச் சென்றிந்தோம். அங்கு மனிதக் குரங்குகளையும்  மந்திக்குரங்குகளையும் ஒரு குருளையையும் கண்டு மகிழ்ந்தோம் . குரங்குகளை பார்த்த போழ்து. புலம்பெயர் தமிழர் நினைவில் வந்து போந்தனர். அதில் ஒரு காட்சி எம் மகவைத் தழுவியது. குருளையை மற்றைய மந்திகளில் இருந்து விலக்கி தம் மார்பில் தழுவி வேரொரு இடத்தில் விடவும் அவருக்கு மகிழ்வை ஏற்படுத்தியது. அவர் வியந்து சொன்னார் எம்மைப்போல நடந்து கொள்கிறதே! ஆகா என்னே அருமை. தொடர்ந்து ஒட்டகங்கள், முயல்கள், வடதுருவ வரையாடுகள்,வளர்ப்பு ஆடுகள்,தீக்கோழிகள்,கங்காருகள்,விதவிதமான பறவைகள் பலவித மீன்வகைகள் நாகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், மரைகள்,காட்டுப்பஃறிகள், நீர்யானை என பலதையும் பார்த்து விட்டு குகைஓவியத்தையும் பார்வையிட்டுக்கொண்டு உணவையுண்ண ஓரிடத்தில் அமர்ந்தோம்.

சிறைபட்ட விலங்குகள் உள்ளேயும் வெளியேயும்

அங்கிருந்து ஓய்வெடுத்துகொண்டு சிலவிடங்களைப் பார்வையிட்டோம் அங்கு அரிமாவை காணமுடியவில்லை.ஆனால் அரிமாக்களின் படிமங்களை விலங்ககத்துக்கு வெளியே பாவையிடக்கூடியதாக இருந்தது.இறுதியாக பென்குவின்களின் நீச்சல் விளையாட்டுகளைப் பார்வையிட்டுவிட்டு குகைவண்டியில் வீடு திரும்பினோம்.

கடற்கரைச் சுற்றுலா
ஞாயிறு காலை பேருந்தை வாடைக்குக்குப் பிடித்துக்கொண்டு சென்றோம்.ஒரு குடும்பத்துக்குத் தலா 45 பவுண்டு செலுத்தினோம். பின்னர் பேருந்து ஓட்டுனருக்கு எல்லோருமாக 50 பவுண்டு வழங்கினோம்.காலை எட்டுமணிக்குத் தொடங்கிய பயணம் சுமார் பதினாறு மணித்தியாலங்கள் செலவு செய்து சுற்றுச் செலவை நிறைவு செய்தோம். சுற்றுச்செலவில் எம் மனம் குளிர்ச்சி பெற்றது. காலை எட்டு மணிக்கு எம் நண்பர் மணி அவர்களோடு சிற்றூர்தியிற் சென்று சில நிமையங்களின் பின்னர் பேருந்து வந்தடைந்தது.வெறும் சுற்றுலாவாக யாம் அதைப் பார்க்கவில்லை பேருந்து எம் தாய நினைவுகளை நெஞ்சில் ஏற்றியிருந்தது.கறுப்பின தேசியத்துக்காகப் போராடிய உலக அமைதித்தூதர் நெல்சன் மண்டேலா அவர்களின் திருவுருவப் படத்தோடு தமிழ்த்தேசியத்துக்காகப் போராடிய தேரியத்தலைவர் வேங்கடம் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் அவர்களின் படத்தையும் இணைத்து இதயத்தினுள் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்த படமும் இன ஒழிப்பைச் செய்து முடித்துவிட்டு இறுமாப்புடன் இலங்கையெங்குமல்ல உலகெங்கும் வலம் வரும் சிங்களத்தேசியத் தலைவர் இரசபட்சே செய்து முடித்த போரில் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆங்கில ஊடகங்களையும் உலுக்கிப் போட்டிருந்தது. அப்படக்காட்சியைச் சித்தரிக்கும் படமும் நெஞ்சத்தில் வலியைக் கொடுத்திருந்தது.தமிழீழத் தேசியப்பூவான கார்த்திகைப்பூ பிரித்தாளும் பிரித்தானியத் தேசியப்பூவும் தனிநாடு கோரும் தமிழீழத்தின் படமும் நாம் சென்றிருந்த பேருந்தில் இலக்காகப்பொறிக்கப்பட்டிருந்தது.
நிம்மி என்ற நண்பரின் ஏற்பாட்டில் அமைந்திருந்த அச்சுற்றுச்செலவு மிகவும் பயனுள்ளதாகவும் மகிழ்வையும் கொடுத்திருந்தது. பேருந்து ஓட்டுனர் சாலை விதிகளுக்கு அமைய பேருந்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். சாலை ஓரங்கள் பிரித்தானியரின் வாழ்வைச் சுட்டிக்  காட்டிக்கொண்டே வந்தது.மரக்கூடல்கள் தோட்டம் துறவுகள் வயல்கள் அத்தோடு சில குதிரைகளையும் கண்டு மகிழ்ந்தோம். பேருந்துக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் குடி கடி நகைச்சுவையென மிகவும் நன்றாக இருந்தது. ஆண்களும் பெண்களும் நகைச்சுவை உணர்வூள்ளவர்களாக இருந்தனர்.நண்பர்கள் மணி,சாமி,குரு, காந்தனோடு இன்னும் சில நண்பரும் இணைந்து அருமையாகப் பாடி கலகலப்பாக இருந்தார்கள்.
சேமைக்குப்பின் பேருந்து கடற்கரையைரைச் சென்றடைந்தது.அக்கடலின் பெயரைத் தடாகம் என அழைக்கலாம்.பேருந்திலிருந்து இறங்கி பொருள்களை சரிபார்த்து இறக்கிவிட்டு அனைவருமாக குளிக்குமிடத்தை அடைந்தோம். பெருவாரியான மக்கள் அங்கே திரண்டிருந்தனர். சிறுசிறு கூடாரங்களமைத்தும் இறைச்சிகளைச்சுட்டும் நீந்திக்கொண்டும் இன்னும் சிலர் விளையாடிக்கொண்டும் இருந்தனர். நாமும் ஓரிடத்தைப் புதருக்கருகில் எடுத்து அமர்ந்தோம். குளிப்பவர் குளிக்க சுட்ட இறைச்சியைக் கொறிப்பவர் கொறிக்க பாடுவோர் பாட வெள்ளைமணலில் மனமோடிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே படங்களையும் பிடித்த வண்ணம் உலாவித்திரிந்தோம். எம் பிள்ளைகள் நீச்சலடித்து விளையாடுவதையும் பார்த்து மகிழ்ந்தோம். எல்லோரையும் கவனித்தபடி கடற்கரை காவற்பணியினர் அவசர விசைப்படகுகளைக்கடலில் நிறுத்தியபடி கண்ணுக்குள் எண்ணையை விட்டுக்கொண்டு நின்றார்கள். காந்தனின் மகள் திடீரென எம்மை விட்டு நீங்கியிருந்தாள். அவளைத் தேடி எல்லோரும் அலைந்து இறுதியில் மணியின் குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். காவற்பணியினர் அச்சிறுமியைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். அச்சுட்டிபெண் தானாகவே அவரிடம் சென்று முறைப்பாடு செய்திருந்தாள். அவளுடைய அகவை எட்டோ ஒன்பதோ தெரியவில்லை. அவள் காந்தனைப்போலவே தான் இருந்தாள். அவளைக் கண்டபின்புதான் மனநிறைவாக இருந்தது. கடற்குளிப்பும் பந்துவிளையாட்டும் மணற்குளிப்பும் மீண்டும் நீராடலுமென அமைந்திருந்தது. அங்கு எம்தேசியத்தாரைக் காணக்கூடியதாக இருந்தது. அங்கிருந்து அந்தி சாய்ந்து இரவாகும் வேளை மீண்டும் இலண்டன் நோக்கிப் புறப்பட்டுச் சில நேரம் ஓய்வெடுத்து பின் மாநகரை வந்தடைந்தோம்.


உப்புநீரிற் குளித்தாலும் உவப்பாகத்தான் இருந்தது சுற்றுலா

இயற்பியல் காட்சியகம்
எந்தப் பண ஈட்டத்தையும் எதிர்பாராமல் அவ்வருங்காட்சியகம் இயங்குகிறது. அங்கே நீண்ட தொன்மா உயரியான தினோசரின் எலும்புகளால் கோர்க்கப்பட்ட உருவம் வரவேற்பு மண்டபத்தில் காணப்பது.அதைத் தொடர்ந்து மானுடத்தின் மாற்றத்தைக் காணப் புறப்பட்ட மேதை இடார்வின் படிமத்துக்கு அருகில் நின்று நிழல்பிடித்தோம். அதைத் தொடந்து பலவாண்டுகளாய் வாழ்ந்த மரத்தின் அடித்தோற்றத்தைப் பார்வையுற்றோம் சித்தார்த்தரான புத்தரின் காலத்துக்கு முற்பட்ட காலத்தை அம்மரம் படம் பிடித்துக் காட்டியது. அதை யாமும் பிள்ளைகளும் பார்த்து உவந்தோம். ஆசிய நாடுகளுள் பல நாடுகள் வள்ளுவர் காலத்துக்கு முன்பிருந்தே வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. சிறப்பாக தமிழம் (இன்றைய இந்தியாவையும், பாக்கித்தானையும்,அப்கானித்தானையும்,இலங்கையையும்,பழநீர் தீவுகளையும் உள்ளடக்கியவை)சீனாவோடும் மொங்கோலியாவோடும் சப்பானோடும் வியத்னாமோடும் தாய்லாந்தோடும் தொடர்பு கொண்டிருந்தமை தமிழ வணிக எழுச்சிக்கு எடுத்துக்காட்டாகும். ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னர் தேயிலையை சீனத்திலிருந்து இந்தியா இலங்கைக்குக் கொண்டுசென்று அதன் உற்பத்திப் பெருக்கத்துக்கு ஊக்கமளித்த பெருமகனாரையும் பார்த்து பிள்ளைகள் மகிழ்ந்தார்கள். அதன் பின் தொன்மா உயிரியான அமையின் திருவுருவத்தையும் அந்த ஆமையின் வரலாற்றைக் கண்டறிந்த பெருமாடியையும்  மூடப்பட்டிருந்த நூலகத்தையும் ஓரக்கண்ணாடியால் பார்த்துவிட்டு அங்குள்ள சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று நீர்போத்தலை விலைக்கு வாங்கி நீர் அருந்தி விட்டு மீண்டும் பார்வையிட்டோம்.அச்சயன், தாரகன், பாவலன், கோவேரன் இவர்களோடு யானும் மிகக்குதூகலமாக இருந்தோம். அருங்காட்சியத்தில் நினைவுப்பொருள்களும் விற்கப்பட்டன. அதில் மகன் தாரகன் விண்கோள்கள் அடங்கியதும்  அச்சயன் காட்டு விலங்கு பற்றியதுமான  மூபக்கத்திரைகளை வாங்கிக்கொண்டனர்.அதன் பின்னர் உலக மாற்றம்  பற்றி விவரிக்கும் இடத்துக்கும் சென்று பூகோள மாற்றத்தையும் தெரிந்து கொண்டோம். அத்தோடு பறவைகள் பற்றியும் பார்த்து வியந்தோம். என்ன வியப்பு உலகத்தில் எத்தனை பறவைகள் எத்தகைய வியத்தகு வண்ணங்களிலான சிட்டுக்குருவிகள். இன்று உலகத்தில் அழிந்து கொண்டிருக்கும் பறவைகள் பெருந்தொகையாம். என்னே வியப்பு ஒவ்வோரு குருவிகளுக்குமிடையில் எத்தகைய திறமைகள் பொதிந்த அறிவிலான கூடுகள் ஓவ்வொரு கூடுகளும் வெவ்வேறு அழகுடனான செயற்பாடுகள்.எல்லாவற்றையும் நிறைவாகப் பார்வையிட்டுக் கொண்டு சப்பானுக்குச் சென்றோம்.என்ன மிரண்டுவிட்டீகளா? ஆம் நாமும் கூடத்தான். நிலநடுக்கம் எப்படி வருகிறது என்றும் அதை எப்படி சப்பானியர்கள் எதிர் கொள்கிறார்கள் என்பதையும் காட்ட நிலநடுக்க அறை ஒன்றை வடிவமைத்திருக்கும் அழகு மிக அழகானது. இறுதியாக மனிதர்கள், பூச்சிகள் ,விலங்குகள் நீர்வாழ் உயிரிகள் என அனைத்தினதும் புறத்தோற்ற மாற்றங்கள் பற்றிப் பார்த்து மகிழ்ந்தோம்.உண்மையிலேயே ஆங்கிலேயர்கள் அறிவானவகள் தான் என்பதை இவ்வருங்காட்டியத்தினூடாக அறிந்து கொண்டோம்.பல நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் முன்னேற்றங்களைப் படித்ததோடு எப்படி பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள்.

1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் பொது ஆங்கிலேய தளபதி இந்தியாவின் மிகபெரிய சொத்தான திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல் அது வெறும் மண்தான். ஆகவே அது நமக்கு தேவை இல்லைஎன்று கூறினாராம்..